Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடலுக்கடியில் மூழ்கிய புதையல் கிடைத்தது

Featured Replies

மும்பாயிலிருந்து – இங்கிலாந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது 1942 ஆம் ஆண்டு ஜேர்மன் டொபிடோ தாக்குதல்களில் சேதமடைந்த சிட்டி ஒப் கய்ரோ கப்பலில் இருந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 டொன் அளவிலான குறித்த வெள்ளிக் காசு தொகை கடலுக்கு அடியில் உள்ள கப்பலில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட வெள்ளிக்காசுகள் உருக்கப்பட்டு பிரித்தானிய அரச நாணய சுற்றோட்டத்துடன் சேர்க்கப்பட்ட போதும், அந்த சம்பவத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுத்த சூழ்நிலையின் போது நிதிப் பற்றாக்குறை காரணமாக வெள்ளிக் காசுகள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

1942 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஜேர்மன் டொபிடோ தாக்குதல்கள் காரணமாக சேதமடைந்த கப்பலின் இடிபாடுகள் 73 வருடங்களின் பின்னர் அட்லாண்டிக் சமுத்திர பிராந்தியத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

1949_1-600x331.jpg 1949_2-600x311.jpg 1949_3-600x399.jpg 1949_4-600x399.jpg 1949_5-600x399.jpg 1949_6-600x399.jpg 1949_7-600x746.jpg 1949_8-600x411.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41202.html#sthash.0umn49CZ.dpuf

மூழ்கிய கப்பலிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளிப் புதையல்

 

1942ஆம் வருடம் மும்பையிலிருந்து இங்கிலாந்திற்கு நாணயங்களைக் கொண்டுசெல்லும்போது கடலில் மூழ்கிய சிட்டி ஆஃப் கெய்ரோ என்ற கப்பலின் சிதிலங்களிலிருந்து 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன

 

150416071637_silver_coins.jpg
சிட்டி ஆஃப் கெய்ரோ கப்பலிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளிக் காசுகள்.
 
எஸ்எஸ் சிட்டி ஆஃப் கெய்ரோ என்ற இந்தக் கப்பல் செயிண்ட் ஹெலனாவுக்குத் தெற்கில் 772 கி.மீ. தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த யு - போட் அதனை குண்டுவீசித் தாக்கியது. இதில் அந்தக் கப்பல் 5,150 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது.
இதில் 100 டன் எடையுள்ள வெள்ளி நாணயங்கள் இருந்தன. இந்த நாணயங்கள் பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமானவை.
இங்கிலாந்தின் யுத்தச் செலவுக்காக இந்த பணம் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால், 1942 நவம்பர் 6ஆம் தேதியன்று இந்தக் கப்பலைக் கண்ட யு-போட் அதன் மீது குண்டு வீசியது.
அந்தக் கப்பலைக் கைவிட்டுவிட்டு, தப்பிக்க ஊழியர்கள் முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், சிட்டி ஆஃப் கெய்ரோ மீது இன்னொரு குண்டும் வீசப்பட்டது. அதோடு, அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.
 
2011ல் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது
 
இந்தக் கப்பலும் அதிலிருந்த நாணயங்களும் தொலைந்தே போய்விட்டன என்றுதான் 2011ஆம் ஆண்டுவரை கருதப்பட்டது.
 
150416071638_shipwreck.jpg
சிட்டி ஆஃப் கெய்ரோ கப்பல் கடலடியில் கிடப்பது 2011ல் கண்டுபிடிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டில், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியை ஜான் கிங்க்ஸ்ஃபர்ட் என்ற பிரிட்டிஷ் மீட்பு நிபுணர் தலைமையிலான அணி சோதனை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது, கடலடிப் பகுதிகளைத் தவிர, வேறு ஏதோ ஒரு மர்மமான பொருளும் அங்கே இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்குப் பிறகு, ஐக்கிய ராஜ்ஜிய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. கடலடியில் தேடும் வீரர்கள் பல வாரங்களுக்கு, கடலடிப் பகுதியை தேடினார்கள்.
"கிட்டத்தட்ட லண்டனைப் போல இரு மடங்கு பரப்பு தேடுதலுக்குள்ளாக்கப்பட்டது" என்று பிபிசியிடம் தெரிவித்தார் கிங்க்ஸ்ஃபோர்ட்.
கடைசியில் சிட்டி ஆஃப் கெய்ரோ கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த 34 மில்லியன் பவுண்டு புதையலில் பெருமளவு மீட்கப்பட்டது.
 
அந்தக் காசுகள் தற்போது பிரிட்டனில் உருக்கப்பட்டு, விற்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து கிடைக்கும் தொகை, அரசு கஜானாவுக்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படும்.
இந்தப் பணி, 2013 செப்டம்பரிலேயே முடிந்துவிட்டது. ஆனால், இது பற்றிய தகவல்களை வெளியில் சொல்வதற்கு பிரிட்டனின் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இப்போதுதான் அனுமதியளித்திருக்கிறது.
 
 
150416071638_torpedo.jpg
இந்தக் கப்பலைத் தாக்கி அழித்த இரண்டாவது டார்பீடோ வகைக் குண்டின் ஒரு பகுதியில் மீட்கப்பட்டது.
 
 
இந்தக் காசுகள் தவிர, இரண்டாவதாக வீசப்பட்ட குண்டின் புரொபெல்லரையும் இந்தத் தேடுதல் அணி மீட்டிருக்கிறது.
 
விதி வலியது
கப்பல் மூழ்கியதில், அப்போது கப்பலில் இருந்த 311 பேரில் ஆறு பேர் மட்டுமே இறந்தனர். ஆறு படகுகளில் மீதமிருப்பவர்கள் உயிர்தப்பினர்.
ஆனால், அவர்கள் வேறு ஒரு கப்பலால் பார்க்கப்பட்டு, காப்பாற்றப்படுவதற்கு மூன்று வாரங்களாகிவிட்டன. அதற்குள் தப்பிப்பிழைத்த 305 பேரில் 104 பேர் உயிரிழந்திருந்தனர்.
 
150416071638_silvercoin.jpg
வெள்ளியால் ஆன இந்த நாணயங்கள் யுத்தச் செலவுக்காக இங்கிலாந்திற்குச் சென்றுகொண்டிருந்தன.
 
 
பிரிட்டிஷ் கப்பலான க்ளான் ஆல்பைன், 154 பேரை மீட்டது. மீதமிருந்த 47 பேரை பிரிட்டிஷ் வர்த்தகக் கப்பலான பென்டோரன் மீட்டு, கேப்டவுனுக்கு அழைத்துச் சென்றது.
கடைசிப் படகு, கப்பல் மூழ்கி 51 நாட்களுக்குப் பிறகு தென்னமெரிக்கக் கரைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்தவர்களில் இரண்டுபேர் மட்டுமே உயிரோடு இருந்தனர்.
அந்த இரண்டு பேரில் ஒருவரான ஜேம்ஸ் ஆலிஸ்டர் ஒயிட் வேறு ஒரு கப்பலில் நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மற்றொரு யு - போட் தாக்கியதில் அந்தக் கப்பலும் மூழ்கியது. அதில் ஜேம்ஸ் உயிரிழந்தார்.
 

அடப்பாவிகளா, அதெல்லாம் இந்திய நாணயங்கள், இது இந்தியாவிலிருந்து வசூலிக்கப் பட்டு பிரிட்டனின் போருக்கு பயன்படுத்தப்பட வேண்டியது, ஆனால்

150416071638_silvercoin.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.