Jump to content

இந்தியா விடாப்பிடியாக வாங்கும் ரபேல் விமானம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!


Recommended Posts

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஆர்டர் மூலமாக 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருதி, இந்த புதிய போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்கு முடிவு செய்ததாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானத்தை வாங்கும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஆர்டரை பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், மத்திய அரசு முழு முனைப்புடன் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த போர் விமானத்தை பற்றிய 30 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் போர் விமானம் இது. கடந்த 2001ம் ஆண்டு நான்காம் தலைமுறை அம்சங்கள் கொண்ட ரபேல் போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 133 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன

 

01. அறிமுகம் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் போர் விமானம் இது. கடந்த 2001ம் ஆண்டு நான்காம் தலைமுறை அம்சங்கள் கொண்ட ரபேல் போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 133 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

02. பன்முக திறன் வானிலிருந்து தரை தாக்குதல், வானிலிருந்து வான் தாக்குதல், இடைமறித்து தாக்குதல் என ரபேல் போர் விமானங்கள் பன்முக திறன் கொண்டவை.

 

03. இரட்டை எஞ்சின் ரபேல் போர் விமானத்தில் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

 

04. அணுசக்தி தாக்குதல் ரபேல் போர் விமானங்கள் எதிரி நடமாட்டத்தை கண்காணிப்பது மற்றும் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம் கொண்டது.

 

05. ஆக்சிஜன் தேவை பைலட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது.

 

06. வடிவம் ரபேல் போர் விமானம் 15.30 மீட்டர் நீளம், 10.90 மீட்டர் அகலம், 5.30 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடார் கண்களிலிருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவைமப்பு அம்சங்களை கொண்டது.

 

07. ரேடார் இந்த விமானத்தில் மின்னணு நிகழ்நேர கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதால், வான் தாக்குதல் மற்றும் தரை தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பிச் செல்லும். ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்களில் இந்த ரேடார் கொண்ட ஒரே விமான மாடல் இதுதான்.

 

08. முப்பரிமான வரைபடம் இந்த விமானத்தில் முப்பரிமான நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெற முடியும்.

 

09. ரேஞ்ச் ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 

10. அதிகபட்ச வேகம் மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது.

 

11. பயன்பாடு ரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கப்பற்படைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தவிர, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

12. மாடல்கள் மூன்று மாடல்களில் தயாரிக்கப்படுகிறது. ரபேல் சி என்ற சிங்கிள் சீட்டர் மாடலும், ரபேல் பி என்ற 2 சீட்டர் மாடலும் விமானப்படையின் தரை தளங்களிலிருந்து பயன்படுத்தும் வசதியுடனும், ரபேல் எம் என்ற மற்றொரு சிங்கிள் சீட்டர் மாடல் விமானம் தாங்கி கப்பல்களுக்கு ஏற்றதாக தயாரிக்கப்படுகிறது.

 

13. வித்தியாசம் அதிகம் இல்லை அனைத்தும் ஒரே ஃப்ரேமில்தான் கட்டமைக்கப்படுகிறது. விமானம் தாங்கி கப்பலுக்கான ரபேல் எம் மாடலில் பின்புறத்தில் விமானத்தை குறைவான ரன்வேயில் நிறுத்துவதற்கான கொக்கி கொடுக்கப்பட்டிருக்கும்.

 

14. ஆர்டர் மதிப்பு 36 ரபேல் போர் விமானங்களை ரூ.24,800 கோடி மதிப்பில் மத்திய அரசு வாங்குகிறது.

 

15. ரபேல் மோகம் இந்திய விமானப் படையில் ரஷ்யாவின் சுகோய் 30 ரக விமானங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், அவற்றைவிட இந்த நான்காம் தலைமுறை ரபேல் விமானம் கூடுதல் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு ரபேல் விமானம் இரண்டு சுகோய் 30 விமானங்களுக்கு சமமானதாக இருக்கும் என்று விமானப் படை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

16. இந்தியாவுக்கான மாடல் கடந்த 2007ம் ஆண்டு இந்திய விமானப் படையால் சோதிக்கப்பட்ட நான்காம் தலைமுறை ரபேல் போர் விமானங்கள்தான் இப்போது வாங்கப்பட உள்ளன. சோதிக்கப்பட்டபோது இருந்த அதே வசதிகளுடன்தான் வருகிறது. கூடுதல் வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் இருக்காது.

 

17. ஈடு செய்யுமா? அண்டை நாடுகளால் இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க குறைந்தது ரபேலுக்கு இணையான 44 போர் விமானங்கள் தேவைப்படுகிறதாம். இந்த நிலையில், இந்தியா வாங்கும் 36 ரபேல் போர் விமானங்கள் மூலம் நம் நாட்டின் வான் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

 

18. கால அவகாசம் அடுத்த இரு ஆண்டுகளில் 36 ரபேல் போர் விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வாங்கப்படுகிறது.

 

19. பராமரிப்பு இந்தியா வாங்கும் 36 போர் விமானங்களை பராமரிப்பு பணிகளை டஸ்ஸால்ட் நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

20. விலை ஒரு விமானத்தின் மதிப்பு ரூ.700 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

 

21. கூடுதல் பயிற்சி தற்போது இருக்கும் சுகோய் 30 விமானங்களைவிட ரபேல் விமானங்களை நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இருப்பதால், அவற்றை இயக்குவதற்கு இந்திய விமானப்படை விமானிகளுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

22. ஏன் அவசரம்? நாட்டின் பாதுகாப்புக்கு கூடுதலாக 42 போர் விமானங்கள் தேவைப்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய போர் விமானங்களை வாங்குவதற்கு அவசரம் காட்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் தெரிவிக்கிறது.

 

23. எச்ஏஎல் தாமதம் ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றிருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பொதுத்துறை நிறுவனம், உற்பத்தி செய்து தருவதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாகவே, தற்போது பிரான்ஸ் நாட்டிடமிருந்து விமானங்களை வாங்குவதற்கான நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாம்.

 

 

Read more at: http://tamil.drivespark.com/off-beat/interesting-facts-about-rafale-fighter-jet-008137.html#slide38289

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.