Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று நிமிடத்தில் 38000 அடி உயரத்திலிருந்து 10000 அடிக்கு கீழிறங்கிய விமானம்! சுயநினைவிழந்த பயணிகள்

Featured Replies

அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள்.

75 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு(Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர். இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள்.

எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன் இரு குழந்தைகள் மற்றும் 15 பயணிகளின் உடல்நிலை மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்டது. இதனால் பப்பல்லோ விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

இது குறித்து விமானத்தில் சென்ற அவசர உதவி செய்யும் செவிலியர் மேரி கன்னிங்கம் கூறுகையில், நான் சுயநினைவிழந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது மற்றொருவரும் சுயநினைவை இழந்தார். மற்ற பயணிகளும் மயக்கம் வருவது போல் உணர்ந்தனர். நானும், விமான பணிப்பெண்ணும் கூட சிரமத்திற்கு உள்ளானோம். இதனால் நான் கீழே உட்கார்ந்து விட்டேன். மூச்சு விட சிரமப்பட்டேன். தலை சுற்றுவது போல் உணர்ந்தேன் என்று கூறினார்.

விமானத்தில் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விமானத்தில் அழுத்த குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது. எனினும் 38000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதில் உள்ள கதவு ஒன்று திறந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதாக இச்சம்பவம் பற்றிய உண்மைகளை அறிந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் விமானத்தின் கதவு எதுவும் திறக்கப்படவில்லை என்று கூறியுள்ள ஸ்கைவெஸ்ட் விமான நிறுவனம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.jet.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41616.html#sthash.D1m7RxUB.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.