Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மாக்களின் கண்ணீரைத் துடையுங்கள்: உயிரோடுள்ள பிள்ளை கையில் சாட்சியத்தோடு போராடும் ஈழத் தாய்

Featured Replies

இலங்கையின் புதிய அரசு பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துவிட்டன. இன்றைய ஈழத் தமிழர்களின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றான காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இலங்கை அரசு கடந்த அரசைப் போன்றே எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை.

 
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வசித்து வருகிறார் ஜெயகலா. காணாமல் போன தங்கள் பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டு பல ஆயிரக்கணக்கானவர்களில் ஜெயகலாவும் ஒருவர். எனது பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்றபடி சாட்சியத்துடன் இந்தத் தாய் போராடிக் கொண்டிருக்கிறாள்.
 
ஜெயகலாவின் மகன் சுதன் ஒருநாள் கடைக்குச் சென்றபொழுது இராணுவத்தினரால் விசாரணைக்காக தடுக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் 2006ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. அன்றைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகன் பல தடவைகள் இராணுவத்தினரின் மத்தியில் தங்கள் பிரதேசங்களுக்க அழைத்து வரப்பட்டதை கண்ணால் கண்டதாக சுதனின் தந்தை அருணகிரிநாதன் குறிப்பிடுகிறார்.
 
யுத்தத்தில் சரணடைந்தவர்களை காணாமல் போன பட்டியலில் சேர்த்தது இலங்கை அரசு. சரணடைந்தவர்கள் இல்லை என்றாமல் அவர்களை காணவில்லை என்று இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் கூறினர். கொஞ்சமும் மனிதாபிமானற்று கொஞ்சமும் இரக்கமற்று கொஞ்சமும் அறமற்று உயிருடன் இருந்த பலரை இலங்கை அரசு காணாமல் போனவர்களாக்கியது.
 
சரணடைந்தவர்கள் காணாமல் போனதாக சொல்லினர். கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போனதாக சொல்லினர். தடுத்து விசாரிக்கப்பட்டவர்கள் காணாமல்போனதாக சொல்லினர். சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போவது எப்படி?
 
ஒரு அரசு தனது நாட்டின் சரணடைந்த கைதுசெய்யப்பட்ட தனது பிரசைகளை  காணாமல் போய்விட்டனர் என்று சொல்லுகிறது எனில் அந்த அரசு மாபெரும் மனித உரிமை மீறலை இழைத்துள்ளது என்பது ஒரு புறம் வெளிப்படுவதுடன் மறுபுறத்தில் காணாமல் போனவர்கள் அந்த அரசின் பிரசைகளா என்ற கேள்வியும் வெளிப்படுகிறது.
 
எனது மகன் கைது செய்யப்பட்டவன் எப்படிக் காணாமல் போக இயலும். அவன் உயிரோடுள்ள சாட்சியம் என்னிடம் இருக்கிறது என்கிறார் சுதனின் தாயார் ஜெயகலா. 
 
2007ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்த காணாமல் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவினர் பூசா சிறைச்சாலைக்குச் சென்றனர். அந்தக் குழுவில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர்.
 
அந்தக் குழு பூசா சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுடன் உரையாடிய செய்தி மறுநாள் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளிவந்தது. அதில் ஓர் புகைப்படத்தில் ஜெயகலாவின் மகன் சுதன் சிறைக்கம்பிகளுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 
 
அவனது முகம் மாபெரும் சாட்சியமாய் பல செய்திகளை சொல்கிறது. தவறேதும் இழைக்காத என்னை வெளியில் விடுங்கள் என்ற விடுதலையின் பெருங்கனவுடன் அவன் எட்டிப் பார்க்கிறான். அந்த சிறைச்சாலைப் புகைப்படத்தில் உள்ளது ஜெயகலாவின் மகன் சுதன் என்பதை ஜெயகலா கையில் வைத்திருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும்போது ஒரு துளி சந்தேகமுமின்றித் தெளிவாகிறது.
 
எனவே அன்றைக்கு உயிரோடு சிறையில் இருந்த எனது மகன் எங்கே என்று கண்ணீர் மல்க கேட்கிறார் ஜெயகலா. தனது மகன் குறித்து பேசும்போது பெருந்துயருடன் அழத் தொடங்கும் ஜெயகலாவின் கண்ணீருக்கு யார் பதிலளிப்பது? யார் இந்தக் கண்ணீரை துடைப்பது? புதிய அரசாங்கம் அம்மாக்கள் சிந்தும் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று சொல்கிறார் ஜெயகலா.
 
அம்மாக்கள் சிந்தும் கண்ணீர் வலியது. அது களங்மற்றது. நியாமானது. தன் பிள்ளைக்காக சிந்தும் கண்ணீர் பொறுப்புக் கூறவேண்டியவர்களை சாபத்திற்குள்ளாக்கத்தக்கது. இந்தத் தாய்மார்களின் கண்ணீருக்கு காணரமானவர்கள் யார்? இலங்கைத் தீவின் தொடரும் மாபெரும் அநீதியாய் பதிலற்ற துயரமாய் கண்ணீர் சிந்துகின்றனர் அம்மாக்கள். 
 
பலதரப்பட்டவர்களிடமும் சென்று அவர்களின் கால்களில் விழுந்து தனது பிள்ளையைக் கேட்டதாக கூறும் ஜெயகலா இந்த அரசாங்கம் எதுவுமே எங்களுக்கு செய்ய வேண்டாம். எங்கள் பிள்ளைகளைக் கொடுத்தால் மட்டும்போதும் அது மாத்திரமே எங்கள் வேண்டுகோள் என்று வலிய கண்ணீரை துடைத்துக் கொண்டு சொல்கிறார்.
 
யுத்தம் முடிந்துவிட்டது. அதன் தடையங்களை இலங்கை அரசு துடைத்துவிட்டது. ஆனாலும் இலங்கை அரசு ஈழ மக்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலையும் அதற்கான போர்க்குற்றங்களும் இலங்கை அரசை நோக்கி பல வடிவங்களில் எழுந்து நிற்கிறது. யுத்தத்தில் சரணடைந்தவர்களையும் காணாமல் போனதாக இலங்கை அரசு கூறுகிறது. கைது செய்யபபட்டவர்கள் குறித்து கேட்டாலும் கை விரிக்கிறது. 
 
அப்படி எனில் எல்லோரையும் அழிப்பதுதான் இலங்கை அரசின் நோக்கமும் நடவடிக்கையுமா? 
 
ஜெயகலாவைப் போன்ற தாயமார்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும். எனது பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்றபடி சாட்சியத்தோடு போராடும் ஜெயகலாவைப் போன்றவர்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்லாமல் இருக்க முடியாது. இலங்கை அரசின் மௌனமே இந்ததாய்மார்களை சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கிறது. 
 
இந்தத் தாயின் போராட்டம் வலியது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.