Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயூரன் மரணதண்டனை ரத்தாகுமா..?? அவுஸ்திரேலியா ஐ.நா அவசர தலையீடு .

Featured Replies

தண்டனையை ஒத்திவைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என இந்தோனேசிய அரசாங்க வழக்கறிஞரகள் வலியுறுத்துவதால் ‘பாலி ஒன்பது’ குழு அங்கத்தவர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்றூ சான் ஆகியோரின் குடும்பத்தினர் இந்தோனேசியா செல்கின்றனர்.

இவர்களிற்கான மரணதண்டனை நிறைவேற்றும் காலக்கெடு 72-மணித்தியாலங்கள் என சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மரணதண்டனை மூன்று நாட்களில் நிறைவேற்றப்படலாம் என கருதப்படுகின்றது.

தண்டனை ஒத்தி வைக்கப்படும் என்ற கடைசி நிமிட நம்பிக்கையும் மறைந்து போய் நாட்டின் அதிகாரிகள் இந்த வார ஆரம்பத்தில் துப்பாக்கி படையினரால் இவர்களின் தண்டனையை நிறைவேற்ற போகின்றனர் என்பது தெளிவாகி விட்டதென தெரியவந்துள்ளது.

அரசாங்க வக்கீல்கள் மூலம் இவர்களது குடும்பத்தினருக்கும் தூதரக அதிகாரிகளிற்கும் மயூரன் சுகுமாரன். 34, மற்றும் அன்ட்றூ சான். 31 ஆகிய இருவரும் சுடப்படுவாரகள் எனவும் இவர்களிற்கு 72-மணித்தியால முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மரணதண்டனை மொத்தமாக 10 பேர்களிற்கு வழங்கப்பட உள்ளது. சுகுமாரன் மற்றும் சான் இருவரும் 2005-ல் இந்தோனேசிய தீவிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு போதை பொருள் கடத்திய ‘பாலி ஒன்பது’ என்ற வளைய தலைவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்களில் இருவர். மிகுதி ஏழு பேர்களிற்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இருவரினதும் குடும்பத்தினர் இந்தோனேசிய தீவை நோக்கி சென்றுள்ளனர். இது ஒரு ஆற்றொணா தருணம். இந்த தண்டனையை நிறுத்துவதற்கு என்ன செய்வதென எங்களிற்கு தெரியவில்லை என சுகுமாரனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுகுமாரனை விடுதலை செய்ய வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவனிற்கு கருணைகாட்டி உயிருடன் விடும்படி கேட்கின்றோம் என தெரிவித்தனர்.

சட்ட நடவடிக்கைகளை மதிக்கும் படி வழக்கறிஞர்கள் ஜக்கார்த்தாவை மன்றாடுவதாகவும் கருணை காட்டும் படி சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தும் வருகின்றதாக கூறப்படுகின்றது.

இந்தோனேசியாவின் மரண தண்டனை திட்டத்தை நிறுத்த கோரி ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி-மூன் உலக அழைப்புக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் மரணதண்டனையின் போது ஒரு கைதி அவர் விருப்பம் போல் இருக்கலாம் அல்லது நிற்கலாம். அத்துடன் கண்கள் கட்டப்பட்டு அல்லது தொப்பியால் மறைக்கப்பட்டிருக்கலாம்.

12-பேர்களை கொண்ட துப்பாக்கி சுடும் அணியினர் நிற்பர். இவர்களில் மூவரின் துப்பாக்கிகள் உயிர் குடிக்கும் வெடி பொருட்களை கொண்டிருக்கும் அதே நேரம் மற்றய ஒன்பது துப்பாக்கிகளும் வெறுமையாக இருக்கும். துப்பாக்கி அணியினர் ஐந்து முதல் 10-மீற்றர்கள் தொலைவில் நின்று சுடுவர் என கூறப்பட்டுள்ளது.

தண்டனையை தடுக்கும் முயற்சி கடைசி நிமிடம் வரை தொடரும் என சர்வதேச மன்னிப்பு சபை இங்கிலாந்து பிரச்சார தலைமை வியோனா ஸ்மித் தெரிவித்துள்ளார். சுகுமாரன் இங்கிலாந்தில் பிறந்தவர். உலகத்தின் பார்வை பூராகவும் தற்போது இந்தோனெசியாவின் மீது உள்ளது.

ஒரு காலத்தில் கவர்ச்சியான கடற்கரைகள் என பெயர் பெற்றிருந்தவை இன்று மரணதண்டனையுடன் தொடர்புடைய தீவாக வர விரும்புகின்றதா என வியோனா கேள்வி எழுப்பியுள்ளார்.

aus-600x360.pngbali1-600x360.jpg

bali2-600x360.jpg

மயூரனுக்காக அறிக்கை விடுத்த ஜுலி பிஷப்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூசன் ஆகிய இருவரது மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் இந்தோனேஷியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலி-9 எனும் இந்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட 10 பேருக்குமான மரண தண்டனை இன்னும் 72 மணிநேரத்தில் நிறைவேற்றப்படும் என இந்தோனேஷியாவின் வெளிவிவகார அமைச்சர் ரெட்னோ மர்சுதி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய வெளிவவிகார அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூசன் ஆகிய இரு சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் நீதித்துறை ஆணைக்குழுவில் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டிய ஜுலி பிஷப் அவர்களுக்கான மரண தண்டனையை ஒத்திவைக்குமாறும் கோரியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட 8 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் ஜகார்த்தா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த அவுஸ்திரேலியப் பிரஜைகளை விடுவிப்பதற்குரிய முழுமூச்சான முயற்சிகளை இந்தோனேஷியாவிலுள்ள அவர்கள் சார்பிலான வழக்கறிஞர் ஈடுபட்டுவருவதாக ஜுலி பிஷப் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இறுதி முயற்சியாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எப்போட் இந்தோனேஷிய ஜனாதிபதி விடோடோவிற்கு கருணை மனு அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்தோனேஷிய அரசாங்கம் நாளை இரவு இவர்களுக்கான மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க இந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

போதைபொருள் கடத்தல் வழக்கில் இலங்கை தமிழர் உள்பட 10 பேருக்கும் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்தோனேஷியா அரசை கேட்டுக்கொண்டார்.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் (வயது 33) என்ற இலங்கை தமிழர் மற்றொரு ஆஸ்திரேலியர், நைஜீரியா, பிரேசில், கானா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பாலி நகர கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேரை மீட்க ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதே போன்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மற்றவர்களின் மனுக்களும் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து 10 பேரும் கடந்த மாதம் 4-ந் தேதி பாதுகாப்பு மிகுந்த நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து இறுதிகட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

இவர்களுக்கு அனேகமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.

இதற்காக மரண தண்டனை கைதிகளிடம் பேசி ஆறுதல் கூற மத குருமார்கள், துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் தொழிலாளிகள், சுட்டுக்கொன்ற பின்பு கைதிகளின் மரணத்தை உறுதிப்படுத்த மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலக நாடுகளில் பெரும்பாலானவை மரண தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மரண தண்டனையை நிறைவேற்ற நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை அவசரமாக பரிசீலனை செய்து தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகிறேன்.

எத்தகைய சூழ்நிலையிலும் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சர்வதேச சட்டவிதிகளின்படி மிகக்கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மட்டுமே அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் கொலை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், போதைப்பொருள் கடத்துதல் போன்றவற்றை இதுபோன்ற கொடூரமான குற்றச்செயலாக கருத முடியாது. எனவே 10 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்ற உங்களுடைய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மயூரனின் தாயார் ராஜனி, கண்ணீர் மல்க கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் மயூரன் நல்ல மனிதனாக வாழ்கிறான். சிறையில் கூட ஓவியங்களை தீட்டி டி.சர்ட்டுகளில் அச்சடிக்கும் தொழில் செய்து பணம் சம்பாதித்து அதை போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக செலவு செய்கிறான்.

எனவே அவனுக்கு இன்னும் ஒரு முறை உயிர் வாழ்கிற வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்றார்.

- See more at: http://www.canadamirror.com/canada/41781.html#sthash.0lBfJoHk.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.