Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை தாண்டாதீர்: சுஷ்மா அறிவுரை மீது தமிழக மீனவர்கள் அதிருப்தி

Featured Replies

fish_final_2390423f.jpg

 

எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது, தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டுகளால் தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
மேலும், இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும்பட்சத்தில், தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியிருப்பதும் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் 21 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
 
அப்போது, மீன்பிடிப்பு முறையில் எளிய படகுகள் - வலைகளுடன் கூடிய பழமையான முறையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தவறுதலாக எல்லையை தாண்டினால், அவர்களை கைது செய்யக்கூடாது என்பதை எழுத்துபூர்வமாகவே இலங்கை அரசிடம் பேசி அனுமதியை பெற்றுத் தரமுடியும் என்று மீனவர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
 
அதற்கு, தங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு மாற்று வழி கிடையாது என்று மீனவப் பிரதிநிதிகள் சிலர் எடுத்துக் கூறினர். அப்படி என்றால், வாழ்வாதாரத்துக்கு மாற்று வழியை கூறினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சுஷ்மா நம்பிக்கை தெரிவித்தார்.
 
அதேநேரத்தில், "மீனவர்கள் எல்லையை தாண்டுவதற்கு எதிராக இலங்கை ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்த நேரத்தில் நம் மீனவர்கள் எல்லையை தாண்டாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கவேண்டும். எல்லையையைத் தாண்டும்போது நீங்கள் பாரம்பரிய மீன்பிடிப்பு முறைகளை கையாண்டால், அதற்குரிய அனுமதியை எழுத்துபூர்வமாக பெற்றுத் தர முடியும். ஆனால், தடை செய்யப்பட்ட படகுகளையும், வலைகளையும் பயன்படுத்தினால் மீனவர்கள் கைதாவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, யாரும் எல்லை தாண்டி மீன்பிடிக்க போகவேண்டாம்" என்று மீனவர்களுக்கு சுஷ்மா அறிவுத்தினார்.
 
வெளியுறவு அமைச்சரின் இந்த அணுகுமுறையால் அதிருப்தி அடைந்த மீனவப் பிரதிநிதிகள், "நம்பிக்கையுடன் டெல்லி வந்த எங்களுக்கு இந்தச் சந்திப்பால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மீனவர்கள் தடை செய்யப்பட்ட படகுகள் - வலைகளை பயன்படுத்தினாலோ, எல்லை தாண்டி மீன்பிடித்தாலோ இலங்கை அரசு கைது நடவடிக்கை எடுத்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என்றும், எனவே எல்லை தாண்டி செல்லாமல் இருப்பதே நல்லது என்றும் அமைச்சர் சுஷ்மா கூறுகிறார். எல்லை தாண்டாமல் இருக்க எங்களிடமே ஆலோசனை கேட்கிறார். இதற்கு பதிலாக, கடலில் மீன் பிடிக்கவே செல்லாதீர்கள் என்று கூறியிருக்கலாம்" என்று அவர்கள் கூறினர்.
 
தமிழக மீனவர்களை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்: இலங்கை அமைச்சர்
 
இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வதற்காக இலங்கை மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 
"மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பது இந்தியாவின் கையில்தான் உள்ளது. தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடிக்கிறார்கள். அவர்களை இந்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை எங்கள் பாதுகாப்புக்காக சர்வதேச சட்டப்படி துப்பாக்கியால் சுடும் உரிமை உள்ளது" என்றார் அவர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.