Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவரைக்கிணறு வற்றாத ஜீவநதியா? - பேராசிரியர் இரா.சிவசந்திரன்

Featured Replies

Nilavarai%20well_CI.jpg

 

யாழ்ப்பாணக்குடாநாட்டு நிலத்தடி நீர்வளத்தை அவை மாசடையாத வரை மிsivachandran.Rகையான பாவனையால் அவை உவர்நீராக மாறாது இருக்கும்வரை பயன்படுத்த முடியும். இன்றைய யதார்த்த நிலை நாம் எதிர்பார்ப்பது போல் இல்லை. சிலர் வற்றாத நீர் ஊற்றான நிலாவரரைக் கிணற்றில் இருந்து குடாநாட்டிற்கு நீரைப் பெறலாமே எனக் கூறுகின்றார்கள். அரசியலில் செல்வாக்குப் பெற்று கொள்கை வகுப்பாளர்களாக உள்ளவர்கள் இவ்வாறு கருத்துச் சொல்லும் போது குடாநாட்டின் எதிர்கால நீர் விநியோகம் பற்றி அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. விஞ்ஞான முடிவுகளுக்கு அப்பாற்பட்ட பாரம்பரியக் கதைகளை நம்பி எதிர்காலத்திற்கான திட்டங்கள் தீட்டினால் எமது சந்ததியின் எதிர்காலம் என்னாவது?
 
எனவே நிலாவரைக்கிணற்றின் உருவாக்கம் அதனுள் காணப்படும் நீர்வளம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.
 
யாழ்குடாநாட்டில் புத்தூரில் அமைந்துள்ள நிலாவரைக் கிணறு பற்றி எமது மக்களிடையே பாரம்பரியக் கதைகள் பல வழக்கிலுள்ளன. ஆழங்காண முடியாதது, நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம்பழம் ஒன்றைப் போட்டால் கீரிமலைக் கேணியில் வந்து மிதக்கும், வற்றாத ஜீவநதி இது என்பதாக கதைகள் பல உண்டு. அக்கால மக்கள் தம் பட்டறிவால் பெற்ற சில உண்மைகளை அல்லது தகவல்களை மிகைப்படுத்தி அல்லது திரிவுபடுத்தி இவ்வாறு வழிவழியாக பேசப்பட்டு வருகின்றன. நிலாவரைக் கிணறு பற்றிப் புவிச்சரித விஞ்ஞான விளக்கத்தை தர முயல்கின்றேன்.
 
யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலமென்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்ற சுண்ணக் கற்பாறைகள் உருவான காலத்தில் தோன்றியவையாகும். அக்காலத்தில் இப்பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டப்படும் போது சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும், பௌதிக, இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப்பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடக்குக் கரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, காங்கேசந்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப் படைக்கு மேல், மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதினாலேயே இங்கு நாம் தரைக்குக் கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப் பெறமுடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும், வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமான மக்கள் வாழ்வதற்கும், நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் தரைக்கீழ் நீரை இலகுவில் இங்கு பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.
 
புவிச் சரிதவியலாளராலும் புவி வெளியுருவவியலாளராலும் சுண்ணக் கற்பாறைப் பிரதேசங்களுக்குரிய தனிப்பட்ட பல நிலவுருவங்கள் அடையாளம் செய்யப்பட்டுள்ளன. இச்சுண்ணக்கல் நிலத்தோற்றங்கள் பல. அவற்றில் ஒன்றே தரைக்கீழ் நீரோடும் குகைகளின் தோற்றமாகும். மழையாற் பெறப்படும் நீர் நிலத்தினுள் ஊடுருவிச் சென்று, அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தேக்கம் பெற்று தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத் தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் நீரைத்தருகின்றது.
 
இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு பெரிய குகைகளாகவோ தொடர் குகைகளாகவோ உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடாராக தரைக்குக் கீழே அமைந்திருக்கும். குகை மேலும் மேலும் அரிக்கப்பட குகையின் விஸ்தீரணம் அகலமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்ந்து விடும். இவ்வாறு தொடர் குகைப் பகுதியின் மேற்பரப்பு இடிந்து வீழ்ந்த ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக் கிணறு ஆகும்.
 
மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததினால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், நவாலி இடிகுண்டு, கரவெட்டிக் குளக்கிணறு, ஊரணி வாற்றாக்கிணறு, கீரிமலைக் கேணி போன்றவையும் நிலாவரைக்கிணறு போல் உருவானவையாகும். கீரிமலைக் கேணியின் வட கீழ் மூலையில் ஆள் ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்க குகை ஒன்று காணப்படுவதை இன்றும் காணமுடியும்.
 
இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும், மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்காக உட்செலுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக் கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்ட காலமாகப் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில் 30 000 - 40 000 கலன் நீர் தோட்டப்பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து இறைக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்பின் உப்பு நீர் மேலோங்கி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் பற்றிய சில ஆய்வுகள் இங்குள்ள தரைக்கீழ் நீர்ப்பீடம் கடினமாக உப்பு நீரின் மேல் நன்னீர் வில்லை வடிவில் மிதப்பதை உறுதி செய்துள்ளன. எனவே நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும்.
 
நிலாவரைக் கிணற்றில் தேங்கும் நீரும் எமது பிரதேசத்தில் கிடைக்கும் மழை நீரிலிருந்து பெறப்படும் நீரின் தேக்கமே ஆகும். இது வலிகாமம் நன்னீர் வில்லையுடன் இணைந்துள்ளது. மிகையான பாவனையால் இவை உவர்த்தன்மை அடைந்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது தரைக்கீழ் நீரின் பயன்பாடானது ஒரு வரையறைக்கு உட்பட்டதே. ஆகவே நிலாவரைக் கிணற்றை ஜீவநதியென எண்ணுவது அறிவியல் சார்ந்த எண்ணம் அன்று.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.