Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைவு கூர உரிமைக்காக யாழினில் குரல்! Photo in

Featured Replies

விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தினில் தமிழ் மக்களை கேடயமாகப்பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பினில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவொன்றென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமுக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். சட்டத்தரணி; மற்றும் விரிவுரையாளரான அவர் அமையத்தின், இணைப்பேச்சாளருமாவார்.பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 

noolakam%20meeting-1.JPG

 நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது.வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையினில் இன்று காலை  இடம்பெற்ற நிகழ்வினில் முன்னதாக உயிரிழந்த அனைவரிற்கும் மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பொது ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டிருந்தது.
நிகழ்வின் உரையாளர்களாக ருக்கி பெர்னான்டோ (மனித உரிமை செயற்பாட்டாளர்), பவானி பொன்சேகா (சட்டத்தரணி;சிரேஷ்ட ஆய்வாளார், மாற்றுக்கொளைக்களுக்கான நிலையம்), எழில் ராஜன் (வருகைதரு விரிவுரையாளார்-அரசியறிவியல் துறை- கிழக்கு பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்) மற்றும் தமிழ் சிவில் சமுக அமையத்தின் இணைபேச்சாளர்  குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

noolakam%20meeting-2.JPG

அங்கு உரையாற்றிய ருக்கி பெர்னான்டோ தமது அமைப்பில் இருந்து இறந்து போனவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்க ஜே.வி.பி முதல் ஈ.பி.டி.பி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், உள்ளிட்ட சகல கட்சிகளுக்கும் அனுமதி உண்டு.ஏன் படையினருக்கும் உண்டு.ஆனால் புலிகள் அமைப்பில் இருந்து சாவடைந்தவர்களையும், போரில் மரணமடைந்த மக்களையும் நினைவுகூர அனுமதி இல்லை.

இதன் மூலம் நினைவு கூரலில் கூட பாகுபாடுகள் காட்டப்படுகின்றதென தெரிவித்தார்.

உலகெங்கும் போர் நினைவு சின்னங்கள் உள்ளபோதும் இங்குள்ளது போன்;று ஒரு இனத்தை ,புலிகளை வென்றதற்கான வெற்றி சின்னங்கள் போல இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

முந்நூற்றிற்கும் அதிகமான ஆர்வலர்கள் நிகழ்வினில் பங்கெடுத்திருந்தனர்.பங்கெடுக்க வந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் நூலக நுழைவாயிலில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

noolakam%20meeting-3.JPG

http://www.pathivu.com/news/39934/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை தமிழருக்கு இல்லை! - யாழ். கருத்தரங்கில் கவலை photo.png

[Monday 2015-05-11 09:00]
jaffna-meeting-110515-400-seithy.JPG

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் யுத்தத்தில் உயிரழந்த அனைத்து தரப்பினரையும் அச்சமின்றி நினைவுகூரும் உரிமை இல்லாத சூழல் நிலவுவதாக கவலை வௌியிடப்பட்டுள்ளது.

 

ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுத மோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

  

 

இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துதவற்கு முன்னைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றிருக்கின்றது. இதில் கலந்து கொண்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுதி யுத்தத்தில் இறந்துபோன பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் நினைவுகூரவிடாமல் இலங்கை அரசாங்கமே இதுவரை தடுத்திருந்த செயலானது தமிழ் மக்களுக்கான உரிமை மீறல் என்று தெரிவித்தார்.

 

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற பலதரப்பட்ட துயரமான சம்பவங்கள் வெளியில் தெரியவந்து விடும் என்று இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருந்தது என்றே தாம் நினைப்பதாக தெரிவித்த ரூக்கி பெர்னாண்டோ, இறந்தவர்களையும் அவர்கள் இறந்துபோன அந்தச் சந்தர்ப்பங்களையும் மக்கள் நினைவு கூரும்போது உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அங்கு என்ன நடந்தது என்பதுபற்றிய உண்மை வெளியில் தெரியவரலாம் என்று அஞ்சிய அரசாங்கம் அப்படி தெரியக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு தடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

அதேசமயம், விடுதலைப்புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இத்தகைய நினைகூரல்கள் அமைந்துவிடும் என்று அரசாங்கம் எண்ணியிருக்கவும் கூடும் என்றும் ருக்கி பெர்னாண்டோ தெரிவித்தார். பொதுவாகவே அரசாங்கமும் சரி, ஜேவிபி, மற்றும் விடுதலைப்புலிகள் போன்றவர்களும் சரி, தாங்கள் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும் அத்துடன் இவ்வாறான நினைவுகூர்தலின் மூலம் அந்தத் தவறுகள் தொடர்ந்தும் நினைவுபடுத்தப்படுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே தங்கள் தரப்புத்தவறுகள் வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அவர்கள் எதனையும் செய்வதற்குத் தயாராகவும் இருந்திருக்கின்றார்கள் என்றும், குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக முன்னைய அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இது மிகவும் தவறானது என்றும் தெரிவித்தார் ருக்கி பெர்னாண்டோ.

 

இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ, சமூகக்குழுமமாகவோ நினைவுகூரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது என்றும் அதனைத் தடைசெய்ய முடியாது என்றும் ருக்கி பெர்னாண்டோ கூறினார்.

நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவுவதாகக் கூறப்பட்ட போதிலும், யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வது பற்றியோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ புதிய அரசாங்கம் சாதகமாக இன்னும் எதனையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்த ருக்கி பெர்னாண்டோ, இம்மாதம் 18 ஆம் தேதி அதைப்பற்றிய தனது நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

jaffna-meeting-110515-seithy%20%281%29.J

 

jaffna-meeting-110515-seithy%20%282%29.J

 

jaffna-meeting-110515-seithy%20%283%29.J

 

jaffna-meeting-110515-seithy%20%284%29.J

http://www.seithy.com/breifNews.php?newsID=131874&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.