Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேபாளத்தில் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம்

Featured Replies

நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
 
150512083007_cn_nepal_quake_kathmandu_ev
நேபாளத்தில் மீண்டும் பெரும் பூகம்பம்
 
இந்த புதிய பூகம்பத்தின் அளவு 7.4 புள்ளிகள் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
30 செக்கன்களுக்கு இது நீடித்துள்ளது.
 
150512081812_cn_nepal_quake_kathmandu_51
நேபாளத்தில் மீண்டும் பெரும் பூகம்பம்
 
நேபாள தலைநகர் காத்மண்டுவிலும், இந்திய தலைநகர் டில்லியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.
கடந்த மாதம் தாக்கிய பூகம்பம் 7.8 புள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதில் 7000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
தற்போதைய பூகம்பம் காத்மாண்டுவுக்கும், எவரெஸ்ட் சிகரத்துக்கும் இடையில் மையம் கொண்டிருந்தது.
 

நேபாளத்தில் நிலநடுக்கம்: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு

 

நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

 
சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.
 
தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்தில் 13 மாவட்டங்கள் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும், குஜராத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆந்திர மாநிலத்துலும் நில அதிர்வு உணரப்பட்டது.
 
டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தம்
 
நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடுக்கிவிட்டுள்ளார்.
 
நேபாளத்தில் மையம்:
 
சரியாக செவ்வாய்க்கிழமை மதியம் 12.35 மணியளவில் நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
நேபாளத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
 
மேலும், நேபாளத் தலைநகர் காத்மாண்டு அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். அதன் தாக்கமே வடமாநிலங்களில் நில அதிர்வை ஏற்படுத்தியிருப்பதகாவும் தெரிவித்துள்ளது.
 
ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இருந்ததாகவும். காத்மாண்டுவில் இருந்து 83 கி.மீ. தூரத்தில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிந்துபால் சவுக் பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 12 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இரண்டாவது முறையாக...
 
நேபாளத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் 6.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
ஆப்கானிஸ்தானிலும், 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
பிரதமர் மோடி உத்தரவு:
 
நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
 
ராஜ்நாத் தகவல்:
 
நில அதிர்வுகளால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் திரட்டப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 8,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்
7.5 ரிக்டர் அலகில் மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி - 1000 பேர் படுகாயம்; டெல்லி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
 
நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 57 பேர் உயிரி ழந்தனர். இந்த நிலநடுக்கம் பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங் களில் கடுமையாக உணரப்பட்டது. இங்கு 17 பேர் பலியாயினர்.
 
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபா ளத்தை நிலநடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதன்பிறகு நேபாளம் முழுவதும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் நீடித்தன.
 
எவரெஸ்ட் அருகே மையம்
 
இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 25 விநாடிகள் நீடித்தது. கிழக்கு நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் அருகில் நாம்சி நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
 
இதில் தலைநகர் காத்மாண்டு உட்பட அந்த நாடு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை, தெருக்களில் தஞ்சமடைந்தனர். நேபாள நாடாளுமன்ற கட்டிடம் குலுங்கி யதால் அவையில் இருந்த எம்.பி.க்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
 
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.3 ஆகப் பதிவானது. அடுத்தடுத்து மொத்தம் 7 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதாக நேபாள புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
57 பேர் பலி
 
சாதரா, சான்கு, சிந்துபால் சவுக், லூக்லா, ராமேசாகப், டோலகா, பக்தாபூர், லக்திபூர், தலைநகர் காத்மாண்டு ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்புகள் நேரிட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 
சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் இப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் அரை மணி நேரம் மூடப்பட்டது. நகரில் பல மணி நேரம் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
 
இந்தியாவில் கடும் பாதிப்பு
 
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் கடுமை யாக உணரப்பட்டது. தலைநகர் டெல்லி, பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
 
பிஹார் மாநிலத்தில் தலைநகர் பாட்னா உட்பட பல்வேறு இடங் களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாட்னா, சிவன், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப் புகள் நேரிட்டுள்ளன. அந்த மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
தலைநகர் டெல்லியில் சில விநாடிகள் நிலஅதிர்வு நீடித்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வீடுகள், அலுவலகங்களில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்து சாலை, தெருக்களில் குவிந்தனர்.
 
கொல்கத்தாவில் அதிர்வு
 
மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் சாலை களில் திரண்டனர். லேக் டவுன், சால்ட் லேக், தல்ஹவுசி மற்றும் பார்க் ஸ்ட்ரீட், சிலிகுரி ஆகிய பகுதி களிலும் நிலநடுக்கம் உணரப் பட்டது. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. தனது வீட்டில் இருந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதுகாப்பு அலுவலர்களுடன் வெளியே வந்தார். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது.
 
அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7.1 ஆகப் பதிவானது. வீடுகள் மற்றும் அலுவல கங்களில் இருந்து மக்கள் பதறி யடித்துக் கொண்டு வெளியே வந்தனர். எனினும் பொருட் சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்ட தாகத் தகவல் இல்லை
 
குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர், சூரத், வடோதரா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப் பட்டது. இங்கு அது ரிக்டர் அலகில் 3 ஆகப் பதிவானது. ஒடிசாவில் கட்டாக், பலசூரு, சம்பல்பூர், பெர்ஹாம்பூர், குர்தா, ரூர்கேலா, கஞ்சம், பரிபடா, கேந்திரபரா, நபரங்பூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 
உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூன், ஹரித்வார், நைனிடால் மற்றும் பிதோராகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 17 பேர் உயிரிழந்தி ருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் டெல்லி மற்றும் காத்மாண்டில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
 
நேபாளம், இந்தியா தவிர்த்து சீனா, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான் உள்ளிட்ட நாடுக ளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த நாடுகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
 
http://tamil.thehindu.com/india/75-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-57-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-1000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7197230.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.