Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனையிறவு உப்பளத்திலும் குடியேற்றம்! சந்தேகம் எழுப்புகின்றது ஊழியர் சங்கம்!!

Featured Replies

ஆனையிறவு உப்பளத்தினில் புதிய குடியேற்றத்திட்டங்கைள தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் மூலம் உருவாக்க அரசு முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பினில் உப்பள ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள குற்றச்சாட்டினில் தெரிவிக்கையினில்

ஆனையிறவு உப்பளமான பிரித்தானிய அரசாங்கள் ஆட்சிக்காலத்தில் 1938ம் ஆண்டு சிறையிலிருந்து நன்னடத்தையால் வெளிவந்த சிறைக்கைதிகளையும், பாதுகாப்புசேவை அதிகாரிகளையும் உள்ளடக்கி உப்பு திணைக்களம் அமைக்கப்பட்;டு இயங்கி வந்தது. பின் இலங்கையிலுள்ள உப்பளங்கள் யாவும் 1966ம் ஆண்டு அரசியிலால் இலங்கை தேசிய உப்பு கூட்டுதாபன்த்தில் உள்வாங்கப்பட்டது. ஆனையிறவு , குறிஞ்சாதீவு, செம்மணி, கல்லுன்டாய், திருக்கோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டிய,நிலாவெளி ஆகிய உப்பளங்கள் இலங்கை தேசிய உப்புகூட்டுத்தாபனத்தின் வடபிராந்தியத்தில் அமைந்த உப்பளங்களாகும். இதன் பிராந்திய நிர்வாகம் வடபிராந்திய முகாமையாளரினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. உப்பளங்களின் நிர்வாகம் உப்பளங்களினை உள்ளடக்கிய அமைச்சினால் நியமிக்கப்பட்ட தலைவர், இயக்குனர்சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.பதிவு இணைய செய்தி

ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளங்களின் உயர் உற்பத்தி வருடத்திற்கு 86000 மெற்றிக்தொன் .குறைந்த உற்பத்தி வருடத்திற்கு 60000 மெற்றிக்தொன்னுமாகும். சாதாரணமாக உப்பின் உற்பத்தி செலவு ரூபா 5.00 மேற்படாமலேயே இருந்து வந்துள்ளது. இதனுள் நடைமுறைச்செலவு, உற்பத்தி செலவு, வரி என்பன உள்ளடங்கும். இதில் ஆனையிறவிலிருந்து அதிகூடிய உற்பத்தியாக 43000 மெற்றிக் தொன்னும், குறைந்த உற்பத்தியாக 30000 மெற்றிக் தொன்னும் பெறப்பட்டுள்ளது. சாதாரணமாக 01 தொன் உப்பின் விலை ரூபா 9000.00 , ரூபா 10000.00
உப்பின் உற்பத்தி செலவு 01 தொன் --   4500.00---5000.00
எனவே லாபமாக (குறைந்த உற்பத்தியினை கணக்கில் கொன்டால்)
ரூபா 4500.00 ஒ 30000  --------5000.00 ஒ 30000
         135000000.00  -----   150000000.00
13.5 கோடி முதல் 15 கோடீ இலாபமாக ஈட்டமுடியும்.

ஆனையிறவு உப்பளத்திற்கான நிர்மான செலவு தெற்கு ரூபா 10 கோடி  வடக்கு 10 கோடி மொத்தம் 20 கோடி.பதிவு இணைய செய்தி

எனவே ஆனையிறவு உப்பளத்தின் தொகுதி 1 இனை அரசாங்கம் அளித்த மானியத்தின் உதவியோடு  செய்து முடித்து உப்பு உற்பத்தியினை முடித்தால் இரண்டு வருடங்களில் ரூபா 15 கோடியினை லாபமா ஈட்ட முடியும். எனினும் உற்பத்தியினை முன்னெடுப்பதற்கு ரூபா 5 கோடி உற்பத்தி, நடைமுறைச் செலவு அடங்களாக தேவையேற்படும்.

அத்தோடு ஆனையிறவு , குறிஞ்சாதீவு உப்பளத்தின் தரம் மற்றய உப்பள உற்பத்தியிலும் பார்க்க சிறந்தது. அதனாலேயே 1981ம் ஆண்டு உப்பு தான்கீயா போன்ற நாடுகளுக்கு காங்கேசன்துறையூடாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

இங்கு விளையும் உப்பு அம்பாந்தோட்டை, புத்தளம்  உப்பளம் போன்றவற்றை போன்று இயந்திரங்களினைக் கொன்டு சுத்திகரித்தால்  இலங்கையில் உற்பத்தியாகும் உப்புக்கள் எல்லாவற்றிலும் ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளங்களின் உப்பே தரமாக அமையும்.பதிவு இணைய செய்தி

1990ம் ஆண்டு பேர்ஸின் பரிந்துரைக்கு அமைய இலங்கை தேசிய கூட்டுத்தாபனம் இல்லாதொழிக்கப்பட்டு இலங்கையிலுள்ள உப்பளங்கள் எல்லாவற்றையும் ஒன்றினைத்து லங்கா உப்பு லிமிடெட் என்ற உப்பு கொம்பனி உருவாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு யுத்தம் காரணமாக சிவில் நிர்வாகம் நடைமுறையில் இல்லாமையினால் வடக்கு, கிழக்கில் உள்ள உப்பளங்களினை லங்கா உப்பு லிமிடெட் பொறுப்பு எடுக்க வில்லை.பதிவு இணைய செய்தி

2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல் விசேட வர்த்தகமானி அறிவித்தலின் பிரகாரம் வடக்கு கிழக்கில் உள்ள உப்பளங்கள் யாவும் வடக்கின் புனர்நிர்மான புனரமைப்பு மற்றும் தமிழ்மொழியாக்கல் மற்றும் இந்து கலாச்சார அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டு ‘மாந்தை உப்பு லிமிடெட்’ உருவாக்கப்பட்டது. முன்பு மன்னார் உப்பளம் மேற்கு பிராந்தியத்தில் இருந்திருப்பினும் அது வடகிழக்கு மாகானத்தினுள் அமைந்து இருந்ததினால் அதுவும் மாந்தை உப்பு லிமிடெட்டில் உள்வாங்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக ஆனையிறவு , குறிஞ்சாதீவு உப்பளத்தின் அபிவிருத்தி வேலைகளினை அரசினால் முன்னெடுக்க முடியவில்லை. அத் தோடு ஆனையிறவு , குறிஞ்சாதீவு உப்பளங்களினை பொருன்மியம் பாரமெடுத்து செய்ததினால் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும்வரை இதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட வில்லை.பதிவு இணைய செய்தி

2009ம் ஆண்டு விசேட கெசற் அறிவித்தலின் படி ஆனையிறவு , குறிஞ்சாதீவு உப்பளங்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சி அமைச்சின் கீழ் கொன்டு வரப்பட்டது. இதற்கான வேலைத்திட்ட நகல் தயாரிக்கப்பட்டு 2010ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதற்கான நிதி ஒதுக்கீடு 100 மில்லியன் 2014ம் ஆண்டு ஆனி மாதம் ஒதுக்கப்பட்டது.

அந்தப் பணத்தினை கொன்டு அபிவிருத்தி வேலைகள் கிராம மட்டத்தில் உள்ள அபிவிருத்தி சங்கங்கள் ஆகிய வற்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு செய்யப்பட்டு வந்தது. இதற்கான அபிவிருத்தி வேலைகள் ஜப்பசி மழைகாலத்திற்கு முடிப்பதற்காக துரிதமாக நடைபெற்றது. எனினும் எதிர்பாராத கடும் மழையினால் அபிவிருத்தி வேலைகள் தாமதம் அடைந்தது. இருப்பினும் மழைநேரத்தில் கூட நீர்பம்;பி செய்து அபிவிருத்தி வேலைகளினை முடித்து உற்பத்தியினை 2015ம் ஆண்டு உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.பதிவு இணைய செய்தி

2015ம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன் அமைச்சுக்கள் மாற்றமடைந்தது. ஆனையிறவு உப்பளம் எந்த அமைச்சின் கீழ் என்பதற்கான கலக்கம் 02 மாதம் நீடித்தது. அதன் பின் ஆனையிறவு உப்பளம் புனர்வாழ்வு பனரமைப்பு மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் கீழ் அமைவதாக விசேட கெசற் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அமைச்சு உப்பளத்தினை பாரதீனப்படுத்த தயங்கியதாக தெரிகின்றது. அதன் பின் இதை கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சு பொறுப்பெடுத்து மாந்தை உப்பு லிமிடெட் உடன் இனைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சு செயளாளரினால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு மாந்தை உப்பு லிமிடெட் நிர்வாக வேலைகளினை பங்குனி 01ம் திகதி தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக அறிகின்றேம். அவர்கள் முன்பு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேன்டிய பகுதி வேலை ஒப்பந்தக் கொடுப்பனவுளை வழங்கியுள்ளனர்.

அவர்களுக்கு கூட உற்பத்தி பற்றி அதிகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. மின்பம்பி பூட்டுவதற்காக மின் அழுத்தியினை மாற்றும்படி பணிக்கப்பட்டும் அதற்கான பணம் இல்லை என அந்த வேலை தாமதம் ஆகின்றது. இரண்டு மின் பம்பினை இயக்குவதற்கான ஒழுங்குகள் செய்தும் அதுவும் இதுவரை பூர்த்தியாக்கப்படவில்லை.பதிவு இணைய செய்தி

இக் காலதாமதத்தினால் உப்பு உற்பத்தியில் தாமதம் ஏற்படாமல் தொடங்க இங்கு உள்ள 6’’ ஒ 6’’ டீசல் பம்பினை இயக்க தேவையான டீசல் ,இயக்குநர்  கேட்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளோம். டீசல் வாங்குவதற்கான பணம் இது வரையில் கொடுக்கப்படவில்லை. அத்தோடு இங்கு முன் பம்பியில் வேலை செய்தவர்களினை தற்காலிகமாக வேலைக்கமர்த்தி பம்பி செய்ய உள்ள அதிகாரிகளினால் தீமானிக்கப்பட்டு மாந்தை உப்பு லிமிடெட் தகுதியான ஊழியர்களின் பெயர் சிபார்சு செய்யப்பட்டதாக அறிகின்றேம். அதற்கு அவர்கள் இதில் நீங்கள் தலையிட வேன்டாம் தேவையான ஆட்களினையும் பட்டியல் இட்டு தந்தால் நாம் உரியவர்களினை வழங்க முடியும் என்று தெரிவித்து அதிகாரிகள் கண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மாதம் உப்பு நீர் பம்பி செய்தாலேயே உப்பு விளையும் காரநீர் 25பாகை பேமியினை 90 ---120 நாட்களில் பெறமுடியும். அதன் பின் 25பாகை காய்ந்த நீர் உப்பு பாத்தியினுள் வைத்து காயவைத்தாலேயே உப்பு பெறமுடியும். 04 அல்லது 05 மாதங்கள் உப்பு உண்டாவதற்கு தேவை. இந்த மாதம் கடல்நீர் பம்பி செய்தால் புரட்டாதி மாதக் கடசியிலேயே உப்பு அறுவடை செய்யமுடியும். புரட்டாதி மாதம் அநேகமாக மழைகாலம் ஆரம்பமாகும். என்பதினால் இந்த வருடம் உப்பு செய்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிகின்றது.
இவ்விரு உப்பளங்களும் ஆரம்பமாகின் குறைந்தது 300 நிரந்தர ஊழியர்களுக்கும் ,2000 பருவகால,தற்காலிக ஊழியர்களுக்கும் வேலை கிட்டும் வாய்புண்டு. எமது பிள்ளைகள் ஆனையிறவு உப்பளத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தமக்கு உப்பளத்தின் தொழில் கிட்டும் என காத்திருக்கிறார்கள். அத்தோடு அயடின் உப்பு உற்பத்தி ஆரம்பமாகின் ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்புண்டு.பதிவு இணைய செய்தி

எமது சந்ததியினரின் கனவு நனவாகுமா? அல்லது காலதாமதமாகுமா என்ற எமக்கு எழுந்துள்ளது. முதல் கட்டமாக உப்பள அனுபவமே இல்லாத ஒருவரினை தற்காலிக உப்பள முகாமையாளராக அமைர்த்தப்பட்டுள்ளார். அவரின் ஊடாகவே எல்லா செயல் திட்டமும் நடைமுறைப்படுத்த வேன்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவி அதிகாரிகள் மனமும் இதனால் மாற்றம் கண்டுள்ளது. உப்பள அபிவிருத்தி இவ்வளவுதானா என்ற கேள்வியும் எழுகின்றது. தேர்தல் காலத்தில் அபிவிருத்தி வேலைகள் நடந்த வேளையில் பணி புரிந்த அதிகாரிகளுக்கு தை, மாசி கொடுப்பனவு அமைச்சு வழங்கும் படி தெரிவித்தும் இன்று வரை வழங்கப்படவில்லை. அப்படி செய்தால் அவர்கள் விலகிச்செல்வார்கள் என நிர்வாகம் நினைப்பதாக எண்ண வேன்டியுள்ளது.பதிவு இணைய செய்தி

இங்கு தென்னிலங்கையினை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்பு வழங்கி புத்தளம், சிலாவத்துறை, மன்னார் பகுதியிலுள்ள வர்களை குடியேற்றுவதற்கான முன்னெடுப்பு எடுத்து அவர்களது விகிதாசாரத்தை அதிகரித்து தமிழ் பாராளமன்ற உறுப்பினரின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான முன்னெடுப்பாக இருக்குமா என்று சந்தேகம் எழுகின்றதெனவும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.  http://www.pathivu.com/news/40079/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இங்கு தென்னிலங்கையினை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்பு வழங்கி புத்தளம், சிலாவத்துறை, மன்னார் பகுதியிலுள்ள வர்களை குடியேற்றுவதற்கான முன்னெடுப்பு எடுத்து அவர்களது விகிதாசாரத்தை அதிகரித்து தமிழ் பாராளமன்ற உறுப்பினரின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான முன்னெடுப்பாக இருக்குமா என்று சந்தேகம் எழுகின்றதெனவும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

அவைதான் போறவாற இடமெல்லாம் நித்திரை கொள்கினம் வரும் தேர்தலில் சனம் முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் வரை பிரச்சனைதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.