Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணப் பொது நூலக நினைவு நாளும், தாவீது அடிகள் நினைவும்

Featured Replies

jaffna%20public%20library%2045455.jpg

 

தாவீது அடிகளார் நினைவு தினம் நாளைமறுதினம் திங்கட்கிழமை யாழ். பொது நூலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் வண. பிதா தாவீது அடிகள் நினைவும் பொது நூலகம் பற்றிய உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது. மத்திய இலவச வாசிகசாலை என்ற அமைப்பை முதலில் உருவாக்கிய நூலகத்தின் ஸ்தாபகர் புத்தூர் சக்கடத்தார் திரு. க .மு. செல்லப்பா அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில், நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது அமைப்பை உறுதிசெய்யும் கடிதத்தை வழங்கி குறித்த நூலின் பிரதியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

jaffna%20library_CI.jpg




இலங்கையின் இனப்பிரச்சினையில் ஓர் முக்கிய நிகழ்வாககு விளைவுகளை உருவாக்கிய வன்முறையாக அமைந்த யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இந்தக் கொடுஞ் செயல் இடம்பெற்றது. 

ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு  20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120338/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.