Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோப்பை வென்றது பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தல் (படங்கள் இணைப்பு)

Featured Replies

கோப்பை வென்றது பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தல்

 

29vyrs5.jpg

 

பெர்லின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி கோப்பை வென்றது. பைனலில் ஜூவான்டஸ் அணியை வீழ்த்தியது.

ஐரோப்பாவில் உள்ள கால்பந்து கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடக்கும். பெர்லினில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில் பார்சிலோனா, ஜூவான்டஸ் அணிகள் மோதின. போட்டியின் 4வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரேக்டிக் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் எதிரணியால் இதற்கு பதிலடி தர முடியவில்லை.

 

இரண்டாவது பாதியில் ஜூவான்டஸ் அணிக்கு மொராட்டா (55வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். சாரஸ் (68) ஒரு கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய பார்சிலோனா அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் கூடுதல் (90+7) நேரத்தில் ஒரு கோல் அடித்தார். முடிவில், பார்சிலோனா அணி 3–1 என்ற கோல் கணக்கில் கோப்பை வென்றது.

 

5வது முறை

இத்தொடரில் பார்சிலோனா 5வது முறையாக கோப்பை வென்றது. ஏற்கனவே 1992, 2006,09,11ல் பட்டத்தை கைப்பற்றியது. தவிர, இதில் அதிக (5) முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் பட்டியலில் 3வது இடத்தை பேயர்ன் முனிக், லிவர்பூல் அணிகளுடன் பகிர்ந்து கொண்டது.

சாதனை

 

கடந்த 2008–09‘ சீசனில்’ ஐரோப்பாவில் நடந்த லா லிகா, கோபா டெல்ரே, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா கோப்பை வென்றது. இந்த ‘சீசனில்’ மீண்டும் பார்சிலோனா அணி இதை எட்டியுள்ளது. இதன் மூலம், ஐரோப்பாவில் நடந்த மூன்று வித தொடர்களிலும் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முதல் அணி என்ற சாதனை படைத்தது.

 

http://sports.dinamalar.com/2015/06/1433657309/neymarsoccer.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா 5வது முறையாக சாம்பியன் !

347ybk0.jpg

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று பெர்லினில் நடந்த  இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜுவான்டஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றது. பார்சிலோனா தரப்பில் ரக்டிக்,சுவாரஸ்,நெய்மர் ஆகியோர் கோல் அடித்தனர்.

 

ஒலிம்பிக் மைதானத்தில் நடந்த இந்த போட்டியை காண 70 ஆயிரத்து 442 ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடக்கத்தில் பார்சிலோனா தரப்பில் இனியஸ்டா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்தில் இனியஸ்டா கொடுத்த பாசை ரக்டிக் எளிதாக கோலாக மாற்றினார். பார்சிலோனா முன்னணி பெற்றது.

291zx4l.jpg

அல்வாரோ மாரட்டா 55வது நிமிடத்தில் ஜுவான்டசுக்கான முதல் கோலை பதிவு செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்று சமநிலையடைந்தது. இந்த சமயத்தில் ஜுவான்டஸ் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தி சில முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றை பார்சிலோனா கோல்ப்கீப்பர் முறியடித்து விட்டார்.

 

பார்சிலோனா அணி 68வது நிமிடத்தில் 2வது கோலை அடித்தது. இந்த கோலை சுவாரஸ் அடித்தார். முன்னிலை பெற்ற பார்சிலோனா 90வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை திணித்தது.. இந்த முறை கோல் அடித்தவர் நெய்மர். இறுதியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை 5வது முறையாக கைப்பற்றியது. பிற்பாதியில் பார்சிலோனா அணியின் கேப்டன் பொறுப்பை 78வது நிமிடத்தில் இனியஸ்டாவுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய சேவி ஏற்றுக்கொண்டார்.

2h6d8hx.jpg

பார்சிலோனாவுக்காக சேவி ஆடிய கடைசி ஆட்டம் இது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற கவுரவத்துடன் அவர் பார்சிலோனாவில் இருந்து விடை பெற்றார்.நடப்பு சீசனில் ஸ்பானீஷ் லீக், கோபா டெல்ரே, சாம்பியன்ஸ் லீக் என 3 தொடர்களில் கோப்பையை வென்று அசத்தியது.

xn54dk.jpg

கோப்பையை வென்ற பார்சிலோனா அணி வீரர்கள் வெற்றிகளிப்பில் திளைத்தனர். தோல்வியடைந்த ஜுவான்டஸ் வீரர்கள் கண்ணீர் சிந்தினர். குறிப்பாக அந்த அணியின் மூத்த வீரரான பிர்லோ கண்ணீர் விட்டது ரசிகர்களை நெகிழச்செய்தது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47614

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றி : கோல்வலையை அறுத்தெடுத்த பார்சிலோனா வீரர்கள்

s3kdjr.jpg

 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் ஆனதையடுத்து, அந்த அணியின் வீரர்கள் வெற்றியை பல வகைகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பெர்லினில் நடந்த  இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜுவான்டஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றது. பார்சிலோனா தரப்பில் ரக்டிக்,சுவாரஸ்,நெய்மர் ஆகியோர் கோல் அடித்தனர்.

2qk8bhf.jpg

இந்த வெற்றியைடுத்து பெர்லின் ஒலிம்பிக் மைதானத்தில் வெற்றி பவனி வந்த பார்சிலோனா வீரர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். அந்த அணியின் நடுகள வீரரும் பிரபல பாடகி சகீராவின் கணவருமான ஜெரார்ட் பிக்கே பெர்லின் மைதானத்தில் இருந்த கோல்வவலையை அறுத்தெடுத்து நினைவாக எடுத்து சென்றார்.

28vubzq.jpg

 

பார்சிலோனா அணியின் வெற்றிக்கு காரணமான மூவர் கூட்டணியான நெய்மர், மெஸ்சி, சுவாரஸ் ஆகியயோர் சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பிரேசிலை சேர்ந்த நெய்மர் வெற்றியை அடுத்து இதற்கு 100 சதவீதம் கிறிஸ்து இயேசுவே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் தனது தலையில் 100 சதவீதம் ஜீசஸ் என்ற வாசகத்தை எழுதியிருந்தார்.

xgm8om.jpg

ஜெரார்ட் பிக்கே கட்டலான் மாகாண கொடியை பெர்லின் மைதானத்தில் மத்திய பகுதியில் நட்டு வைத்தார். டிரெஸ்சிங் அறையில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையின் மேல் கால் வைத்து சிகரெட் குடிப்பது போன்ற ஜெரார்ட் பிக்கேவின் புகைப்படம் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

2lbgqkp.jpg

வெற்றியை அடுத்து பெர்லின் நகரில் உள்ள கெனாலேடஸ் சதுக்கத்தில் குவிந்த பார்சிலோனா ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.பார்சிலோனா நகரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரமாண்ட திரையில் போட்டியை ரசித்தவர்கள் இறுதி விசில் ஊதியதும் இரவு முழுவதும் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.

15gvz4i.jpg
பார்சிலோனா அணியின் வீரர்கள் அனைவருமே தங்கள் குடும்பத்தினரை அழைத்து வந்தனர். போட்டி முடிந்ததும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47616

  • தொடங்கியவர்

'ஸ்பெயினில் இருந்து கட்டலானை பிரி...!'- பார்சிலோனா வெற்றி ஊர்வலத்தில் கோஷம்

 

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கோப்பையை வென்ற பார்சிலோனா அணி வீரர்கள், நேற்று திறந்தவெளி பேருந்தில் வெற்றி பவனி வந்தனர்.

 

245mz45.jpg

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நேற்றுமுன்தினம் பெர்லினில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா அணி, ஜுவான்டஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றது. நடப்பு சீசனில் ஏற்கனவே ஸ்பானீஷ் லீக்கில் சாம்பியனான பார்சிலோனா, 'கோபா டெல்ரே' என்று அழைக்கப்படும் கிங்ஸ் கோப்பையையும் வென்றது. ஆக நடப்புத் தொடரில் மூன்று கோப்பைகளை வென்ற பார்சிலோனா வீரர்கள், சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் முடிந்தவுடன் பெர்லினில் இருந்து பார்சிலோனா திரும்பினார்.ஒரே சீசனில் 3 கோப்பைகளையும் பார்சிலோனா அணி வெல்வது இது இரண்டாவது முறை ஆகும்.

 

2j32ux1.jpg

பார்சிலோனா விமானநிலையத்தில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் வந்திறங்கிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க்கப்பட்டது. விமானநிலையத்தில் இருந்து அணிவீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வரை, வழிநெடுகிலும் பார்சிலோனா மக்கள் கூடியிருந்தனர். பின்னர் பார்சிலோனாவின் கேம்ப்நியூ மைதானத்தில் இருந்து திறந்த வெளி பேருந்தில் பார்சிலோனா வீரர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். பேருந்தில் சாம்பியன்ஸ் ஐரோப்பா என்று எழுதப்பட்டிருந்தது.

 

பார்சிலோனா அணியின் ஜெர்சி அணிந்து, ஆயிரக்கணக்கான மக்களிடையே அப்பேருந்து ஊர்வலமாக வந்தது. பேருந்தின் முகப்பில் சாம்பியன்ஸ் லீக் கோப்பை, ஸ்பானீஷ் லீக் கோப்பை, கிங்ஸ் கோப்பை ஆகியவை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியில் கோல் அடித்த சுவாரஸ் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்தார். பார்சிலோனாவின் இருந்து விடைபெறும் அந்த அணியின் கேப்டன் சேவி, கட்டலான் மாகாண கொடியை தனது உடலில் போர்த்தியவாறு பேருந்தில் உற்காசம் பொங்க காணப்பட்டார். மெஸ்சி,யெம்ர் போன்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ரக்டிக், மச்சாரானோ,ஜெரார்ட் பிக்கே,இனியஸ்டா, உள்ளிட்ட வீரர்களும் ஆரவாரத்தில் இருந்தனர்.

1pb2tw.jpg

 

நகரம் முழுக்க சுமார் 5 மணி நேரம் பார்சிலோனா வீரர்களின் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிந்ததும் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பார்சிலோனா வீரர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் பார்சிலோனா ரசிகர்களிடையே பேசிய பயிற்சியாளர் லூயீஸ் என்ரிக்,  அணியில் இருந்து விடை பெறும் கேப்டன் சேவியை வெகுவாக பாராட்டினார். ஐரோப்பிய கால்பந்தில் பார்சிலோனா அணி மிகப் பெரிய வெற்றியை பெறும் போதெல்லாம் 'ஸ்பெயினில் இருந்து பார்சிலோனாவை பிரித்து தா...!' என்ற கோஷம் எழுவது வழக்கம்.

 

நேற்று நடந்த பார்சிலோனா அணியின் வெற்றி ஊர்வலத்தின் போதும் 'கட்டலான் மாகாணத்தை பிரித்து தா..!' என்ற கோஷம் எழத் தவறவில்லை.

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47649

  • தொடங்கியவர்

'ஏ... குழந்தை பையா...!'- ரொனால்டோவை கலாய்க்கும் மெஸ்சி ரசிகர்கள்

 

கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி பரம விரோதிகள் போல அடித்து கொள்கின்றனவோ அது போல கால்பந்து விளையாட்டில் ரியல்மாட்ரிட், பார்சிலோனா அணிகள் பரம எதிரிகள்தான்.

14y3bpg.jpg

ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட் நகரை சேர்ந்தது ரியல்மாட்ரிட் அணி. ஸ்பெயினின்  கட்டலான் மாகாணத்தின் தலைநகரான பார்சிலோனாவில் செயல்படுகிறது எப்.சி பார்சிலோனா அணி. இந்த இரு அணிகளும் விளையாடும் 'எல்கிளாசிகோ' மோதல்,  உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்துக்கு நிகரானதாக கருதப்படுகிறது. ரியல்மாட்ரிட்டுக்கு 'கேபிடல் கிளப்' என்றும்,  பார்சிலோனாவுக்கு 'கட்டலான் ஜையன்ஸ் 'என்ற வேறு செல்லப் பெயர்களும் உண்டு.

 

தற்போதைய கால்பந்து உலகில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சியும் முன்னணி நட்சத்திர வீரர்கள். இதில் ரொனால்டோ,  ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக விளையாடுகிறார்.. கால்பந்து உலகின் உயரிய விருதான 'பல்லான் டி ஆர்' (தங்கபந்து) விருதை பெறுவதில் இருந்து ஒவ்வொரு விருதையும் தட்டி செல்ல ரொனால்டோ மற்றும் மெஸ்சிக்கிடையே போட்டி எழுவது உண்டு. இந்த போட்டி இந்த இரு வீரர்களின் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலையும் ஏற்படுத்தும்.

 

ரியல்மாட்ரிட் அணியின் ரசிகர்கள் ரொனால்டோவுக்கு ஆதரவாக இணையங்களில் செயல்படுகின்றனர். பார்சிலோனா மற்றும் மெஸ்சி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் செயல்படுகின்றனர். இரு பக்க ரசிகர்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பார்கள். மெஸ்சியை பற்றி ரொனால்டோ தரப்பும்,  ரொனால்டோ பற்றி மெஸ்சி தரப்பும் அவதூறுகளை பரப்புவது, கெட்ட பெயரை ஏற்படுத்துவது போன்ற படங்களை பகிர்வதுதான் முக்கிய பணி.

2w6ykcl.jpg

 

இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான ரியல்மாட்ரிட் அணி,  அரையிறுதியில் ஜுவான்டஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. அதோடு கோபா டெல்ரே, ஸ்பானீஷ் லீக் தொடர்களிலும் ரியல்மாட்ரிட் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. மிக முக்கியமான இந்த 3 போட்டிகளிலும் பார்சிலோனா அணிதான் தற்போது சாம்பியனாகியுள்ளது. இதனால் உலகின் விலை உயர்ந்த கால்பந்து வீரரான ரொனால்டோ, நடப்பு சீசனில் வெறுங்கையுடன் வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

 

தொடர் தோல்விகளையடுத்து இணைய தளங்களில் மெஸ்சி தரப்பு, ரொனால்டோவை கடுமையாக கிண்டலடித்து வருகிறது. . சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் மெஸ்சி தனது மகனுடன் இருப்பது போன்ற படங்கள் அண்மையில் வெளி வந்தன. தற்போது அந்த படத்தில் மெஸ்சி குழந்தையை நீக்கி விட்டு அதில் ரொனால்டோவின் படத்தை ஒட்டி 'குழந்தை பையா...!' என்பது போல சித்தரித்து மெஸ்சி தரப்பு இணைய தளங்களில் வெளியிட்டு திருப்திபட்டு வருகிறது. இது ஒரு சாம்பிள்தான்... இது போன்று ஏராளமான படங்களை வெளியிட்டு, மெஸ்சி ரசிகர்கள் ரொனால்டோவை கலாய்த்து வருகின்றனர்.

2iu3vad.jpg

 

கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல்மாட்ரிட் அணி வென்ற போது, ரொனால்டோ ரசிகர்கள் மெஸ்சியை கலாய்த்து பல்வேறு படங்களை வெளியிட்டு வந்தனர். தற்போது அதற்கு மெஸ்சி தரப்பு பதிலடி கொடுத்து சந்தோஷப்பட்டு வருகிறது.

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47696

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.