Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவை அச்சுறுத்தும் விடுதலைப் புலிகளின் ஆவி?

Featured Replies

 

மகிந்தவை அச்சுறுத்தும் விடுதலைப் புலிகளின் ஆவி?
[ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 09:00.41 AM GMT ]
mahinda_ghost_001.jpg
மகிந்த ராஜபக்சவை ஆவிகளிடமிருந்து பாதுகாக்க அரசு மாதாந்தம் மூன்று கோடிக்கு மேல் செலவு செய்கின்றது.

தனக்கு கொலை அச்சுறுத்தல், பயமுறுத்தல் என்பன விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி, இதில் இருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ள அரசு தனக்கு மேலதிக பாதுகாப்பை கோரி இருந்ததையும்,

இதற்கு அரசு இவரின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விபரங்களை கடந்த மாதம் பிரதமர் ரணில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்ததையும் கண்டு நாட்டின் பொதுமகன் என்ற முறையில் அதிர்ச்சியடைந்தேன்.

காரணம் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஓர் முன்னாள் ஜனாதிபதி. அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற வரப்பிரசாதம் வழங்கப்படல் வேண்டும். இதில் எதுவித தவறும் கிடையாது.

ஆனால் பிரதமரின் கூற்றின்படி தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பைவிட அதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். காரணம் இவருக்கு மெளனித்த விடுதலைபுலிகளின் கொலை பயமுறுத்தல் உண்டாம். இது எவ்வாறு என்பது எமக்கு குழப்பமாக இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் காலத்திலும் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையே சண்டை நடந்துள்ளது.

அதே போல் மகிந்த காலத்தில் கடும் போர் நடந்து. புலிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் கொன்று அழித்துவிட்டதாக இதே மகிந்த இந்த நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

இனி புலிகள் இல்லை அவர்களை அழித்து விட்டேன் மீண்டும் அவர்கள் மீள் ஏழ எந்த காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டேன் மக்கள் இப்பொழுது முழு சுதந்திரத்துடன் வாழலாம் என்றெல்லாம் நாடெங்கும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முழு இலங்கையிலும் குறிப்பாக சிங்கள பிரதேசங்களில் ”பால்சோறு” வழியெங்கும் அனைவருக்கும் வழங்கி கொண்டாடினார்கள். அது இன்றும் எமது மனக்கண் முன் நிற்கின்றது.

அது மாத்திரமா, தேர்தல் காலங்களிலும் போர் இடம் பெற்ற கால ஒளி ஒலி காட்சிகளை கிராமம், நகரம் என்று பொது மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டது.

அது கடந்த ஆறு மாத காலமாகதான் சற்று ஓய்வில் இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதியின் தேர்தல் முடிவு சற்றும் எதிர்பாராதவகையில் மகிந்தவிற்கு தோல்வியை தந்த போதும் அவர் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவராகவே ஜனாதிபதி இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

எனினும் அவர் தமது சொந்த கிராமத்திற்கு சென்று தமிழர்களினால் தான் தோல்வியடைந்ததாக அவ்வூர்மக்களுக்கு தனது உள்ள குமுறலை இன துவேசத்துடன் வெளியிட்டதும் மறக்க முடியாத ஒன்றே.அதன் பின்பே இவரின் தோல்வியின் பின் சதி முயற்சி செய்து ஆட்சியை கைப்பற்றதிட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பேசப்பட்டது.

இந் நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கு எவ்வாறு அழிக்கப்பட்ட விடுதலை புலிகளினால் ஆபத்து வரமுடியும்? என்ற கேள்வி சாதாரண பொதுமகனுக்கு ஏற்படுவது சகஜமே. பிரதமரின் கூற்றின்படி மகிந்த ராஜபக்ச ஓர் கூட்டத்தை நடாத்த வேண்டுமானால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுபாப்பு அதிகாரிகள் 213 மற்றும் சாரதிகள் 25 உத்தியோகத்தர்கள் என்று பார்க்கும்போது அவர் செல்லும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 500 மேற்ப்பட்ட அரசாங்க வேதனம் பெற்றுள்ளவர்கள் அடங்கியுள்ளனர்.

அதற்கு மேல் வருபவர்களே ஆதரவாளர்கள் எனலாம். 500 மேற்பட்ட ஆயுதம் தரித்த ஊழியர்களுடன் செல்லும் ராஜபக்சவிற்கு எப்படி கொலை பயமுறுத்தல் விட அழிக்கப்பட்ட விடுதலை புலிகளால் முடியும்? அதுவும் அவரின் சொந்த பிரதேசங்கள் அல்லது சிங்கள பெரும்பான்மையினர் உள்ள பகுதியில் இது எனக்குள்ளே எழுகின்ற வினா?

இதை தவிர்த்து அந்தந்த பகுதி பொலிஸார் மற்றும் அவரின் விசுவாசிகள் புலனாய்வுதுறையினர் என்று கணக்கெடுத்து பார்த்தால் ஆயிரத்திற்கு மேல் அவரை சுற்றிய பாதுகாப்பு உள்ளது. அதை மீறி எந்தவொரு தனிப்பட்ட வெளி நபராலும் செல்ல முடியாது என்பது எனது கருத்தாகும்.

எனினும் பாதுகாப்பு என்பது மிக அவசியமே! அதற்கு மக்கள் பணத்தை வாரி வீணடிக்கும் வகையில் சுமார் 213க்கும் மேற்பட்ட திறமையான அதிகாரிகளை நியமித்து இருப்பதும் அவர்களின் திறமைகள் அடிப்படையில் பார்க்கும் போது மாதாந்த வேதனம் மற்றும் இதர கொடுப்பனவுகள்,

வாகனம், எரிபொருள் , பராமரிப்பு செலவு என்று கணக்கிட்டால் பொதுமக்களின் வரிப்பணம் குறைந்தது மாதாந்தம் சுமார் மூன்று கோடியை தாண்டும் அளவிற்கு பாதுகாப்பு கொடுக்க ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது போன்ற பாதுகாப்பா வழங்கப்படுகின்றது?

மகா
madhavan@hi2mail.com

http://www.tamilwin.com/show-RUmtyHTXSUer7J.html#

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.