Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உழைப்பிலும் அறம் காத்த உத்தம பெருந்தகை நடராஜா

Featured Replies

6437.jpg

அண்ணா தொழிலகத்தின் தொழிலதிபர் பொ.நடராஜா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இதயத்தை நெருட வைக்கிறது.

மிக உயர்ந்த பண்பாளன் என்பதற்கப்பால்; தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளுக்கு உதாரண புரு­ராக விளங்கியவர் அவர்.தனது சொந்த முயற்சியால் சிறுதொழில் முயற்சியை ஆரம்பித்து படிப்படியாக உயர்வடைந்து உச்சமான தொழிலதிபராக உயர்ந்தவர் என்ற பெருமை நடராஜா அவர்களுக்கு உரியது.

பணபலம்; பொருட்பலம்; செல்வாக்குப் பலம் அனைத்தும் இருந்தபோதிலும் பணியுமாம் பெருமை என்பதில் இம்மியும் பிசகாமல் வாழ்ந்த ஒரு அற்புத மனிதரை தமிழ்மண் இழந்துவிட்டது.

எங்கள் முற்றத்தின் மல்லிகை அவர். சிரித்த முகம்; எவரையும் மதிக்கும் உயர்ந்த பண்பு; நடந்து வந்த பாதையை நினைக்கின்ற உயர்ந்த குணம் அத்தனை சால்புகளும் நடராஜா அவர்களின் அணிகலன்கள்.

எங்கள் தமிழ் மண்ணின் விவசாய உற்பத்தி களுக்கு ஊக்கமளித்து -தொழில் முயற்சிகளுக்கு வழிகாட்டி - உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்து எங்கள் மண்ணில் தொழிற்துறை ஓங்க உழைத்த ஒரு ஒப்பற்ற மனிதருக்கு தமிழ் மண் என்றும் நன்றிக் கடன்பட்டது.

தொழிலதிபர் நடராஜா அவர்களின் கடும் முயற்சியை, நிர்வாகத் திறனை, மனிதநேயத்தை மதித்து பல அமைப்புக்கள் அவருக்கு விருதுகள் வழங்கிக் கெளரவித்தன.

மனிதநேயம் படைத்த நடராஜா அவர்களை கெளரவிக்கும் நிகழ்வொன்றில் உரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள், தொழிலதிபர் நடராஜா அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஒருவர், நடராஜா அவர்களுக்கு கலாநிதிப் பட்டம் வழங்க வேண்டும் எனப் பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டதன் மூலம் அந்தப் பட்டம் நடராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள், நடராஜா அவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் ஊடாக நடராஜா அவர்களின் முயற்சி, ஆளுமைத்திறன், நற்பண்பு, சமூக சேவை என்பன மிக உன்னதமாக மதிக்கப்படுகிறது என்ற உண்மை வெளிப்படுவதைக் காண முடியும்.

யுத்த சூழ்நிலையிலும்  நேர்மையோடு, நியாயத்தோடு, பண்புமிக்க மனிதராக இருந்து மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை இயக்கி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறத்தைப் பாதுகாத்த தொழிலதிபர் நடராஜா அவர்கள் முயற்சியால் உயர்ந்த உத்தமர் என்ற இலக்கணத்திற்கு அடையாளமானவர்.

எங்கள் இனத்தின் எதிர்காலச் சந்ததிக்கான கற்றல் துறையில் அமரர் பொ.நடராஜா ஒரு பாடவிதானம். வருங்காலத் தொழிலதிபர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி.

தொழில்முயற்சியை தர்மத்தோடு செய்து சமூகப் பணியிலும் தன்னை அர்ப்பணித்த அந்தப் பண்பாளனுக்கு தமிழ்த் தாய் தலைவணங்கி விடை கொடுக்கிறாள்.சென்று வருக!

http://www.valampurii.lk/valampurii/content.php?id=6437&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.