Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள்(மேலதிக இணைப்புடன்)

Featured Replies

வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள்

JUL 23, 2015 | 1:14by புதினப்பணிமனைin செய்திகள்

white vanமிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு  கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவினால் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  அவரது சொந்தப் பாதுகாப்புக்காக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் இது வழங்கப்பட்டது என்றும் விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வெள்ளை வான் மிரிஹான பிரதேசத்தில் சுற்றித்திரிந்த வேளையில், ஒப்பந்த நிறுவனமொன்றின் வாகனத்துக்குரிய இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வானில் இருந்த மூன்று சிறிலங்கா இராணுவ வீரர்களில் ஒருவர், கொமாண்டோ படைப்பிரிவையும், ஏனைய இருவரும் காலாற்படைப் பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்துவரும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு, சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாவலர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெள்ளை வான் விவகாரம் அரசியலில் பெரும் பூதாகாரம் எடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு செயலர் யூ.பி.டி.பி.பஸ்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த எ சில்வா ஆகியோர், இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இராணுவ காவல்துறைக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குப் புறம்பாக, மிரிஹான காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மிரிஹான காவல் நிலையத்துக்குச் சென்று மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதேவேளை, வெள்ளை வானுடன் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர்  மூவரும் நுகேகொட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

ஆனாலும், அவர்கள் இராணுவக் காவல்துறையினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,Brigadier-Jayanath-jayaweera

“தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மற்றும் மூன்று இராணுவத்தினர் தவறுகள் இழைத்திருந்தமை உறுதி செய்யப்பட்டால், அவர்களின் பதவிநிலையை பாராது இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இராணுவத் தளதி, இராணுவ காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

போலி இலக்கத்தகட்டைப் பயன்படுத்தி குறித்த வாகனத்தில் அந்த இராணுவத்தினர் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் நிலவுகிறது.

கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் இராணுவத்துக்காக கொள்வனவு செய்யப்பட்டதா- அல்லது வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டதா- என்பதை விசாரணைகளின் பின்னரே தெரிவிக்க முடியும்.

இராணுவ வாகனங்களுக்கு சில சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் சிவில் இலக்கத்தகடுகளைப் பொருத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவ்வாறு செய்யக் கூடாதென்று இராணுவத் தலைமையகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவோ, வேறு உயர் அதிகாரிகளோ தமது தனிப்பட்ட ஆயுதத்தை பாதுகாப்பு அமைச்சுக்கோ தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கோ கொண்டு செல்ல முடியாது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த ஆயுதத்தை தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் கையளித்து விட்டுச் செல்ல வேண்டும்.

அந்த அதிகாரிகூட இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் முறையை நன்றாகப் பயிற்சிபெற்றவராக இருக்க வேண்டும்.

போலி இலக்கத் தகட்டைக் கொண்ட வாகனம் அரசியல் நடவடிக்கைக்காகவோ அல்லது தனிநபரின் பாதுகாப்புக்காகவோ பயன்படுத்தப்படவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/23/news/8067

தீவிர அரசியல் பரப்புரையாக மாறியுள்ள வெள்ளை வானும் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும்

JUL 23, 2015 | 2:27by கார்வண்ணன்in செய்திகள்

meerihana-white van (1)போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானுடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி, மற்றும் அவரது மெய்க்காவலர்கள் மீரிஹானவில் பிடிபட்ட விவகாரம் சிறிலங்கா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரத்தை இரு கட்சிகளும் முக்கிய தேர்தல் பரப்புரையாக மாற்றியுள்ளன.

மீரிஹான பகுதியில் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் வதிவிடங்கள் உள்ள நிலையில், இது அவர்களை படுகொலை செய்யும் முயற்சி என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமல் வீரவன்ச, ஜி.எல்.பீரிஸ், கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர், இந்த வெள்ளை வான் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், ஐதேகவும் பதிலடி கொடுத்து வருகிறது.

நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் வடக்கில் புலிகளால் பயன்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது என்றும், அதனை கோத்தாபய ராஜபக்சவே பாதுகாப்புச் செயலராக இருந்த போது இராணுவத்தில் இணைத்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாமல் இராணுவத்தினர் அதனைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்று வடக்கில் கைப்பற்றப்பட்ட 100இக்கு மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட படையினர் எவரும் கோத்தாபய ராஜபக்சவே இந்தக் கைத்துப்பாக்கியை வழங்கியதாக வாக்குமூலம் அளிக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/23/news/8076

இந்த நிகழ்வானது இலங்கையின் ராணுவத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது..அதே நேரம் மஹிந்த மற்றும் கோததபாயாவின் வதிவிடங்களை அண்மித்த பகுதியாகையால் யாரைக்குறி வைத்த பயணமாயிருக்கும்?

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.