Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குசும்பு: வீட்டுக்கொருவரை கொடுத்தோரே “வீட்டு”க்கு ஒரு வோட்டு!

Featured Replies

சிறி-குசும்பு

வணக்கம்

வீரயுகத்தை பிரசவித்த மண்ணிலிருந்து உங்கள் சமூகசேவை வள்ளலின் வணக்கங்கள்.

தாய் மண் பற்றும் தமிழ் மொழி என்ற சிறப்பும் எங்கள் தலைவன் பிரபாகரன் காட்டிய மரபும் நாங்கள் மறக்கமுடியாத வரலாற்று பொக்கிசங்கள்.

தந்தை செல்வா காட்டிய 30 வருச அறநெறியும் தலைவன் பிரபாகரன் காட்டிய 30 வருச களநெறியும் எங்கள் தானைத்தலைவன் சம்பந்தர்காட்டப்போகும் புதுநெறியும் கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க்குடிக்கு தலைப்பா கட்டும் காலங்கள்.

என்ன அப்பு என்ன நடந்தது என்று கேப்பிங்கள். பொறுமையாக கேளுங்கோ.

இது தேர்தல் காலம் என்பதற்காய் சொல்லவில்லை. ஆனாலும் சொல்கின்றேன். ஆனந்தபுரத்தில் அலையாய் வந்து எதிர்த்தோரை மலையாய் எதிர்த்தவீரனின் மட்டற்ற உறவு மட்டுமல்ல. எங்கள் தலைவன் பிரபாவின் மகனுக்கு அகரம் புகட்டிய பள்ளியின் முதல்வன் நான்.

தமிழ்வீரம் எழுந்து களமாடிய பொழுதுகளில் அதன் காற்றை சுவாசித்த நான் மீண்டும் காலத்தின் தேவையறிந்து தானைத்தளபதி சம்பந்தர் அவர்களையும் அவரின் எல்லாமுமாக இருக்கின்ற சுமந்திரன் என்ற விற்பன்னனுக்கு தோள்கொடுக்க துணிந்தமை வரலாற்றின் வழியேயன்றிவேறொன்றுமல்ல.

காலச்சுழியில் கட்டுடைத்துப்போன தமிழர்சேனையின் காலப்பெருவெளியை நிரப்பவந்த சம்பந்தர் சேனைக்கு துணைசெய்து நிற்பதே என்வாழ்வுக்கு பெரும்பணியாகும் என அறிந்து கடும்பணியாற்ற துணிந்தேன்.

யாழ்ப்பாண மண்ணுக்கு இம்முறை ஏழு சீற்றுத்தான் வரும் என்று இடியான செய்தி வந்தபோது விழித்துக்கொண்டேன். புறநானூற்றை விஞ்சிய எம்புலிமறவர்களே துணையாக பொழிவாற்ற விழைந்தேன் நான்.

எனக்குப் பெரிய பலம் இணையற்ற ஊடகங்கள். அதனிலும் என்னுறவின் இரத்தம் ஓடுவதால் தான் ஆடாவிட்டாலும் தசையாடும் மரபை மறக்காது. இலங்காசிறி என்றும் தமிழை வின்னென்றும் மனிதன் ஆகி மாசுற்ற ஜேவிபிநியுஸ் ஆகி எத்தனையோ பெயர்களில் என் குரல்  ஒலிக்கும்.

வாய்ப்புகள் ஏழு என்பதால் எங்களுக்கு நாலு சீற்தான் உறுதி என்று வருகின்றன செய்திகள். இருப்பவர்களை இழுத்து விழுத்துவதே ஏற்றத்திற்கு வழிஅல்லது இருக்காது உன்சீற்று. இதுவே இப்போது எனக்குள்ள வழி.

தன்னவனை தொலைத்து மண்ணின் வீரத்தோடு அடங்காத ;தமிழச்சியாய் ஒருத்தி ஆவேசமாய் வருகின்றாள். நீதி கேட்காமல் ஓயாது அவள் பயணம்.

ஆனால் அரசியலே தொழிலாய் போன எமக்கு வேறு வழியில்லை. அவளுக்கு இடம் கொடுத்தால் எங்கள் கதிரை ஆட்டங்காணும். என்ன செய்ய?

ஆனாலும் எனக்கு இடக்கில்லா ஆட்களும் இருக்கிறார்கள். சுமந்திரர்களின் வாக்கு எனக்கும் பலம். எனது ஆதரவு அவர்களுக்கும் உரம்.

எனவே தான் எழுதப்படாத விதியை ஏற்றுக்கொண்டோம். தவறாய் கொள்ளவேண்டாம்.

அவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான். என்னைப்போல எம்வீரர்களை புகழ்ந்துரைக்க மாட்டார்கள்.

காதோடு சொல்கின்றேன். அவர்களைவீட்டிற்கு அனுப்புவது என நீங்கள் முடிவெடுத்தால் மனதார ஏற்பேன் நான்.

ஏற்றிவைத்தும் நாணயம் போடலாம். இறக்கிவைத்தும் நாணயம் போடலாம்.

முன்னதை தெரிந்தெடுத்தோம். ஏனெனில் அதுவே புலிகளின் புதிய போர்முறையாய் இருந்தது கூட்டமைப்பை தொடங்கியபோது.

எனினும் உங்கள் சொல் கேட்போம். தேர்தலிலே சொல்லுங்கள்.

அப்பு அப்பு பொறுங்கோ என்ன நடந்தது உங்களுக்கு? நீங்கள் கேட்பது வடிவாய்க் கேக்கிறது.

நான் சிலவற்றை சொல்வேன். மற்றயவற்றை மற்றவர்கள் சொல்வார்கள்.

எனதருமை செயலாளர் பொன்னான காந்தம் புறநானூற்று மெடுக்கொடு பொறுப்பாய் சொல்வார். அதற்கும் மேலாய் எனதருமை பேச்சாளர்கள்இருக்கவே இருக்கின்றார்.

அன்னை பூபதிக்கு சிலை வைப்போம் என்று நான் சொன்னால் அங்கயற்கண்ணிக்கே சிலை வைப்போம் என முழக்கமிடுவார்கள் அவர்கள்;.

யாரைப்பிடித்தேனும் நாடாளுமன்றம் செல்வோம். யாரோ தந்த ரிக்கற்றில் ஒருமுறை சென்றேன். வென்றேன். ஐங்கரநேசனும் அதனையே செய்தார்.அதனால் சுரேசிடம் இனிக்கேட்க முடியாது. தமிழரசுகட்சி தரவேண்டும் ரிக்கற். தருவாரா? எனை வெல்ல விடுவாரா?

கடந்த வருடத்தில் எங்கள் தேசத்தின் குருத்துகள் தெய்வீகன் கோபி  விழுந்தபோது என்னைச்சுற்றி சந்தேகங்கள். எதற்காக விளங்கவில்லை. சத்தியமாய்சொல்கின்றேன் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

காற்றோடு சிலர் கதை பரப்புகின்றார்கள். நம்பாதீர் மக்களே!

தேர்தல் தெருமுனையில் நிற்பதால் தேர்தல் கோசங்கள் தயார்படுத்தவேண்டும். யாரங்கே?

இராசதந்திர சிங்கம் இராஜவரோதயம் சம்பந்தர்

 

ஒற்றையாட்சியை ஒழித்த ஆபிரகாம் சுமந்திரன்

 

மண்ணின் மைந்தன் சிறிதரன்

 

வீரம் படைத்த மண் வீழாது.

 

வாழ வேண்டும் வீடு. ஆள வேண்டும் வீடு.

 

வீட்டுக்கொருவரை கொடுத்தோரே உங்கள் வீட்டுக்கு கொடுங்கள் ஒரு வோட்டு!

எப்படியிருக்கிறது எங்கள் கோசம்.

மலைத்துப்போகாதே என் சனமே! மறுபடியும் வருவேன்!!

http://tamilleader.com/?p=49761 குசும்பு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.