Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வங்கத்தில் இருந்து இந்தியா செல்லும் ஒரு குடும்பம்

Featured Replies

150731152642_bangladesh_family_india_640

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே சிறு நிலப்பரப்புக்கள் பரிமாறிக்கொள்ளப்படும் நிலையில், இதுவரை நாடற்றவராக இருந்த பலருக்கு ஒரு அடையாளம் கிடைக்கவிருக்கிறது.
ஆனால், வேடிக்கையென்னவென்றால், இதனால், இந்தியாவைவிட்டு சிலர் வெளியேற நினைக்கும் அதேவேளை, மறுபுறம் வங்கதேசத்தைவிட்டு இந்தியாவுக்கு செல்ல பலர் தயாராகுகிறார்கள்.
நல்ல வாழ்வைத் தேடி இந்தியாவுக்கு செல்வதற்காக தமது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை இது.
ஆனால், நாடு விட்டு நாடு போவது ஒன்றும் இவர்களுக்கு இலகுவான ஒரு முடிவல்ல.

பிபிசியின் ஒரு காணொளி

 

http://www.bbc.com/tamil/global/2015/07/150731_banglavt

இந்தியாவும் வங்கதேசமும் எல்லையில் உள்ள மற்றவரின் பகுதிகளை பரிமாறிக்கொள்கின்றன

150731062925_india_bangladesh_enclave_62

இந்தியாவும் வங்கதேசமும் தம்மிடையிலான எல்லையில், நூற்று அறுபதுக்கும் அதிகமான சிறு நிலப்பரப்புகளை பரிமாறிக்கொண்டுள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவோடு உலகின் மிகவும் சிக்கலான எல்லைத் தகராறு ஒன்று முடிவுக்கு வருகிறது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு சொந்தமான சிறு இடங்கள் பலவும் அதேபோல இந்தியாவில் வங்கதேசத்துக்கு சொந்தமான சிறு இடங்கள் பலவும் உள்ளன.

பதினெட்டாம் நூற்றாண்டில் அப்பகுதியில் உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் வழியாக உருவாக்கப்பட்ட அலகுகள் இவை.
இந்த இடங்களில் வாழ்ந்துவந்த கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் யதார்த்தத்தில் நாடற்றவர்களாகவே இருதரப்பாலும் நடத்தப்பட்டு வந்துள்ளனர்.

இந்த சிறு பகுதிகள் தற்போது அது அமைந்துள்ள நாட்டுடனேயே சேர்க்கப்படுகிறது.
அதில் வாழும் மக்கள் எந்த நாட்டின் பிரஜாவுரிமை தமக்கு வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தாங்கள் வாழும் இடம் எந்த நாட்டோடு சேருகிறதோ அந்த நாட்டின் பிரஜாவுரிமையை அந்த மக்களில் பெரும்பான்மையானோர் தெரிவுசெய்வார்கள் என்பதால் பலர் குடியுரிமையை மாற்ற வேண்டி வரும் எனத் தெரிகிறது.
ஆனால் வங்கதேசப் பக்கத்தில் வாழும் இந்தியர்கள் சுமார் ஆயிரம் பேர் தமது இந்தியக் குடியுரிமையை தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் அவர்கள் இந்தியப் பக்கத்தில் வந்து குடியேறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india/2015/07/150731_indiabangladesh

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.