Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

UNPயின் ஆட்சி அவசியம் என வடக்கின் முதலமைச்சர் விரும்புவதாக கூறுகின்றார் விஜயகலா

Featured Replies

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே அவசியம் என்பதே வடமாகாண முதலமைச்சரின் எண்ணமாக உள்ளதாம் என்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன்.

யாழில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரை பொது கூட்டம் வெள்ளிக்கிழமை சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார்.

சமாதான முயற்சி மூலம் தீர்வை காணக்கூடியவர்களுக்கு அவர் மக்களை கோரி இருக்கின்றார். அடுத்த ஆட்சியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அவசியம் ஆகும்.

 இதனால் எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணமாக உள்ளதாகவே தெரிகின்றது எனவே முதலமைச்சரின் கருத்து குறித்து குடா நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடமாகாண முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் பனிப்போர் இடம்பெற்று வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சி கோஷம் எழுப்புபவர்களுக்கு வாக்களித்து பயனில்லை.

உணர்ச்சி கோஷங்களை எழுப்புபவர்களுக்கு வாக்களிப்பதனால்  எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் யாழில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 

கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாம் சரியான தீர்மானத்தை எடுத்து இருந்தால் இத்தகைய அழிவுகள் எமக்கு ஏற்பட்டு இருக்காது. இதனால் நாம் இந்த முறை தேர்தலிலும் கடந்த கால தவறுகளை விடாது அடுத்த அரசாங்கத்தில் எமது பிரதிநிதிகள் அதிகரிக்கப்பட்டு நாம் பங்காளிகள் ஆக வேண்டும் அதற்காக நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் 

 
 
வெறும் உணர்ச்சி கோஷங்களை எழுப்புபவர்களுக்கு வாக்களிப்பதனால்  எந்த பயனும் ஏற்படப்போவதில்லை கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது பகிஸ்கரிக்க வேண்டும் என கோரி மஹிந்த ராஜபக்ஷே வுக்கு ஆதரவு அளித்தவர்களும் இன்று இந்த மண்ணிலே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
 
இவ்வாறனவர்களுக்கு வாக்களித்தால் என்ன ஆகும் என்பதனை நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆனது இன்று பிளவு பட்டு உள்ளது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவுக்கும் உறவேதும் இல்லை என அறிவித்து விட்டார்.
 
அவரை ஒரு போதும் பிரதமர் ஆக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார் இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷே குழுவினர் சிறுபான்மைஇனத்திற்கு எதிரான இனவாத கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் கூறி வாக்கு பெற முனைகின்றனர்.
 
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா வுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் ஆயின் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும் நாம் தவறிழைத்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷே தலைமையில் அரசு உருவானால் என்ன நடக்கும் என்பதனை சிந்திக்க வேண்டும் 
 
ஆகவே ஐக்கிய தேசிய கட்சி யாழ்.மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை ஆவது பெற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு மூன்று உறுப்பினர்கள் தெரிவானால் அரசாங்கத்தில் பேரம் பேசும் சக்தியாக நாம் இருக்க முடியும்.
 
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைக்கும் அடிப்படை பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் ஆயின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும் 
 
யாழ்.மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இன்னமும் கட்டி எழுப்பப்படவில்லை பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் இன்னமும் கஷ்டங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றன.
 
இத்தகையானவர்களின் வாழ்வாதாரம் கட்டி எழுப்ப படவேண்டும். அதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முனைந்தால் அவர்கள் மீது புலி முத்திரை குத்தப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் எனக்கும் புலி முத்திரை குத்தப்பட்டது.
 
மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முனைகையில் எனக்கு புலி முத்திரை குத்தப்படுமாயின் அதனை நான் ஏற்று கொள்ள தயாராக இருக்கின்றேன்.என தெரிவித்தார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

விஜய கலா, கண்ட படி.... வாயை திறக்காமல் இருந்தால்.... ஒரு சீட்டு, உங்களுக்கு கிடைக்கும்.
அளவுக்கு... மிஞ்சி,  உங்கள் கட்சியின் புராணம் பாடினால்.....
நீங்களும்.... சம்பந்தன், சுமந்திரன் மாதிரி.... முன்னாள்... பா. உ. ஆகி விடுவீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.