Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் பிரச்சினை: இந்தியாவின் நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினை: இந்தியாவின் நிலை என்ன?

"ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையும், இந்திய அரசின் கடமையும்" என்னும் தலைப்பில் கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் உள்ள சிங்கள அரசு, அத்தீவில் வாழும் பூர்வீக மக்களான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் படுகொலையில் திட்டமிட்ட வகையில் மூர்க்கத்தனமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் படுகொலையை (ழுநnடிஉனைந)த் தடுக்க அய்.நா. உள்பட எந்த அமைப்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது பெரும் வேதனைக்குரியதாகும்.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உரிமை படைத்த இந்திய அரசும் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததோடுஇ அதன் அணுகுமுறை இலங்கைப் பேரினவாத அரசுக்குச் சாதகமாக இருந்து வருவதாகவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதாபிமானிகளும் கருதுகிறார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எச்சரித்ததுபோலவே, இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்த உணவுப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிக்குப் போய்ச் சேராமல் தடுக்கப்படுவதைப் பார்த்த பிறகும் இந்திய அரசு தலையிடாதது வருந்தத்தக்கதாகும்.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்துக்கு இந்திய அரசு ஆக்க ரீதியான வகையில் செயல்பட வேண்டும்.’’என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைத் தீவில் ஓர் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் தமிழர்கள் அம்மண்ணின் பூர்வீகக் குடிகள் - சிங்களவர்களோ வந்து குடியேறியவர்கள். எண்ணிக்கைப் பலத்தால் மிருகத்தனமாகத் தமிழர்களிடம் நடந்துகொள்கிறார்கள். ஈழத்தில் நம் தமிழர்களைக் கொன்று குவிக்கும் அந்நாட்டின் அதிபரான ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது வெட்கக்கேடானது.

சென்னையில் நேற்று (27.11.2006) வள்ளுவர் கோட்டம் அருகில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது, தமிழர்களைக் கொன்று குவித்த அந்தச் சிவப்பு ரத்தக் கரத்தோடு இந்திய அரசு கைகுலுக்குவதாகப் பொருள்’ என்று மிகச் சரியாகவே சொன்னார்.

இந்தியாவில் ராஜபக்சே தங்கியிருக்கும் அதே காலகட்டத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இத்தகையதோர் போராட்டத்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மேயர்கள் மாநாட்டில் ராஜபக்சே பங்கு கொள்கிறார் என்பதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மேயர்களும்இ கட்சிகளைக் கடந்துஇ அம் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது - ராஜபக்சேவுக்குச் சரியான மூக்கறுப்பாகும். பாசி°ட்களுக்கு அதெல்லாம் எங்கிருந்து உறைக்கப் போகிறது.

விடுதலைப் புலிகள் வலிமை பெற்றால் அது சிறீலங்காவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தல் என்று கூறுகிறார் ராஜபக்சே.

ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லப்பட்ட நரி, "உலகம் போச்சு, உலகம் போச்சு!" என்று கூக்குரல் கொடுத்த கதைதான் நினைவிற்கு வருகிறது.

உண்மையைச் சொல்லப் போனால், இலங்கை அரசின் மீது இந்திய அரசுக்குத் தார்மீக ரீதியாகக் கோபப்பட காரணம் கூட உண்டு.

இந்தியாவுக்கும்இ பாகிதானுக்கும் போர் நடந்த போது பாகிதான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்ள வசதி செய்து கொடுத்தது இலங்கை அரசுதான் என்பதை இந்தியா நினைவு கொண்டால், இலங்கை அரசை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கவேண்டும் என்ற உண்மை தெரியாமல் போகாது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை உதாசீனப்படுத்தியுள்ளதே - இந்தியா என்ற 110 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடுஇ ஒரு சுண்டைக்காய் நாட்டை தட்டிக் கேட்க வக்கில்லையே! இந்தியாவின் ஆளுமைத் தன்மை இதுதானா என்ற கேள்வி எழ இடந்தரலாமா?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வைப் பிரதிபலிக்கும் தீர்மானங்கள் சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்டுள்ளது - மத்திய அரசின் காதுகளுக்கு அடுத்த சில மணிநேரங்களிலேயே எட்டியிருக்கக் கூடும். தமிழர்களின் உணர்வை ஊனப்படுத்தாமல் இந்திய அரசு செயல்படுமாக!

-விடுதலை

------------------------------------------------------------

அடுத்த போராட்டம் மதுரையில்! ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்திய அரசு உடனே தலையிட வேண்டும்!

சென்னையில் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து தமிழர் தலைவர் பேச்சு

சென்னையில் நடைபெற்ற இந்த பட்டினி அறப் போராட்டம் மதுரையில் போராட்டமாக அடுத்து அங்குத் தொடங்க வேண்டும். ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு ராஜபக்சேவை உடனே வலி யுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து விளக்கவுரையாற்றினார்.

உண்ணாவிரத அறப்போரை முடித்துவைத்து, தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இலங்கையில் நவீன இட்லர் ஆட்சி

இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் நமக்கு தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். அவர்கள் தினந்தோறும் படுகொலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குண்டு மழையால் மட்டும் ஈழத் தமிழர்கள் சாகக் கூடாது, பசி, பட்டினியாலும் சாக வேண்டுமென்று திட்டமிட்டு சதிச் செயலை அங்கே நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இலங்கையிலே கொடுங்கோல் ஆட்சி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நவீன இட்லருடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதைப் பார்த்து எழுச்சி, உணர்ச்சி ஏற்படுவது ஏதோ அரசியல் கட்சிகளுக்கு மாத்திரம் ஏற்படுவது, சமுதாய இயக்கங்களுக்கு மட்டும்தான் உரியது என்று இல்லாமல், இன்றைக்கு இன உணர்வாளர்கள் எல்லோரும் திரண்டிருக்கிறார்கள்.

மகளிர் குலம் கையிலெடுத்திருக்கிறது ஒரு பூனைக் குட்டியைக் கூட ஒரு அறையிலே போட்டு அடித்தால் அது பொங்கி எழும். இன்றைக்கு வீரத்தையும், விவேகத்தையும் மகளிர் குலம் கையிலே எடுத்துக் கொண்டுள்ளது (பலத்த கைதட்டல்). கவிஞர் கனிமொழி துவக்கியிருக்கிறார்கள் உணர்வுபூர்வமான ஒரு வாய்ப்பை இன்றைக்கு கவிஞர் கனிமொழி அவர்கள் துவக்கியிருக்கிறார்கள். கவிஞர் கனிமொழி அவர்கள் பெரியாரின் மாணவி. என்னுடைய மாணவி அல்ல. எனவே பெரியாரின் மாணவி என்று சொல்லும் பொழுது அதற்குரிய அறிவு தன்மை இருக்கும்.

கலைஞரின் தனித்தமிழர் ஆட்சி

பெரியாரின் மாணவராக அந்தத் தலைமுறை இருக்கின்ற காரணத்தால் கலைஞர் அவர்கள் இன்றைக்குத் தனித் தமிழர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார் (பலத்த கைதட்டல்). அவர்களே சற்று நாள்களுக்கு முன்பு எங்களுடைய கல்வி நிறுவனத்திலே பேசும்பொழுது ஒன்றைச் சொன்னார்கள்.

கலைஞரின் காதுகளில் பெரியார் - அண்ணா சொன்னது

என்னுடைய இரு காதுகளிலே ஒரு காதிலே அண்ணா அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார், "பொறுத்திரு, பொறுத்திரு" என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு காதிலே பெரியார் அவர்கள், "பொறுத்திருக்காதே, பொறுத்திருக்காதே, பொங்கி எழு, பொங்கி எழு" என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று சொன்னார்.

"பொறுத்திரு, பொங்கி எழு"பொறுத்திருப்பது இன்றைக்கு ஆட்சியாக இருக்கிறது. பொங்கி எழுந்திருப்பது இன்றைக்கு காட்சியாக இருக்கிறது (பலத்த கைதட்டல்). இந்த உண்ணாவிரதத்தை கவிஞர் கனிமொழி அவர்களும், எழுத்தாளராக இருக்கக்கூடிய ரவிக்குமார் அவர்களும், இன்னும் பலரும் சேர்ந்து இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எல்லாருடைய பெயரையும் எல்லாம் இங்கே தனித்தனியே சொல்ல முடியவில்லை. இந்த உண்ணாவிரதத்தில் தன்னுடைய பங்கும் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக கலைஞர் அவர்களுடைய வாழ்விணையர் (ராஜாத்தி அம்மையார்) அவர்களும் இங்கு வந்திருக்கின்றார். கலைஞர் அவர்கள் இந்த நாட்டு மக்களை வாழ வைக்கிறார். அவரை நான் வாழ வைக்கின்றேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற அம்மா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார்.

முடித்து வைக்க வந்திருக்கிறேன்

காலையிலே வராமல் மாலையிலே இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வந்திருக்கிறாரே என்ற அய்யம் சிலருக்கு இருக்கும். என்னை இந்த உண்ணாவிரதத்திற்கு நீங்கள் முடித்து வைக்கவேண்டும் என்று கவிஞர் கனிமொழி கேட்டவுடனே ஒன்றை தொலை பேசியில் அவர்களிடம் சொன்னேன். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே, தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டர்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் எல்லாவிதமான போராட்டங்களிலும் ஈடுபடுவோம். ஒரே ஒரு போராட்டத்தில் மட்டும் நாங்கள் கலந்துகொள்வதில்லை. அதுதான் உண்ணாவிரதப் போராட்டம்.

அதே நேரத்திலே அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்றால், நிச்சயம் நான் வருகிறேன். அதைத் துவக்கிவைக்க வேண்டும் என்று நான் விரும்புவதில்லை என்று சொன்னேன். ஏனென்றால் இதைவிட வேகமாக நாம் செல்லக்கூடியக் காலகட்டம் இப்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், உணர்ச்சியின் வெளிப்பாட்டை பீறிட்டுக் கிளம்பக் கூடிய உணர்வை இங்கு எல்லோரும் காட்டியிருக்கின்றார்கள். இதை இன்றைக்கு மட்டும் நான் சொல்லவில்லை.

தமிழ்நாட்டிலே வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள் அரசு அனுமதியோடு தம்பி பிரபாகரன் மற்றும் அவர்களுடைய தோழர்கள் சென்னையிலே இருந்தார்கள்.

பிரபாகரனிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தார்கள்

விடுதலைப்புலிகளினுடைய கைகளிலே இருந்த ஆயுதங்கள், அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்களை திடீரென்று பறித்தார்கள். தங்களுடைய பாதுகாப்பு மட்டுமல்ல தமிழர்களுடைய பாதுகாப்பும் இதில் அடங்கியிருக்கிறது என்பதற்காக அவர்களுடைய தோழர்களைக் கூட கலந்து ஆலோசிக்காமல் திடீரென்று உண்ணாவிரதம் இருந்தார் தம்பி பிரபாகரன் அவர்கள்.

போராளிகளைப்பற்றி விடுதலையில் எழுதினேன்

நான் அப்பொழுது விடுதலை இதழிலே தந்தை பெரியார் மொழியில் ஒரு கடுமையான அறிக்கையை எழுதினேன். போர்க்களத்திலே நிற்க வேண்டிய போராளிகள் உண்ணாவிரதம் என்ற இந்த ஆயுதத்தை நீங்கள் எடுக்கக் கூடாது. (பலத்த கை-தட்டல்). வேறு வகையான ஆயுதத்தைத் தான் நீங்கள் எடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தோம். எனவே நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு அவர்களிடம் கேட்டோம்.

பிரபாகரன் செவி சாய்த்தார்

பிரபாகரன் அவர்கள் அதற்கு செவி சாய்த்தார். அந்த உண்ணாவிரதத்தை நான்தான் முடித்து வைத்தேன். அவருக்கு ஒரு குவளை பழ ரசத்தைக் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன். அந்தப் படம் 'இந்து' பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்தது அதிசயமாக!

முதலில் ஒரு வீரர் இரண்டாவது ஒரு வீராங்கனை

நான் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்கு வருவது இது இரண்டாவது முறை. முதலில் ஒரு வீரர். இரண்டாவது ஒரு வீராங்கனை என்று சொல்லக் கூடிய அளவிற்கு இந்த வாய்ப்பு இங்கே ஏற்பட்டிருக்கின்றது.

கவிஞர் கனிமொழி அவர்களும், எழுத்தாளர் ரவிக்குமார் அவர்களும் இங்கு சொன்னார்கள். நாங்கள் யாரும் அழைக்கவில்லை. ஆனால் பலரும் திடீரென்று வந்திருக்கிறார்கள் என்று ஏற்பட்டிருக்கின்ற உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அழைப்பு கொடுத்து அழைப்பது திருமணத்திற்கு. ஆனால் துக்கம் என்று சொல்லும் பொழுது அவரவர்களே வருவது என்பது தமிழர்களுடைய இயல்பு.

ஈழத்திற்குச் சென்று பாருங்கள்

இங்கே கவிஞர் தாமரை பேசும்பொழுது சொன்னார். ஒரு முறை ஈழத்திற்குச் சென்று பாருங்கள். அங்கு எத்தகைய கொடுமை நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள் என்று சொன்னார். ஈழத்திலே இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது. சிறு குழந்தைகளைக்கூட விட்டு வைத்திருக்கின்றார்களா? ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் மீதே குண்டு மழை சிங்களவர்கள் பொழிகிறார்கள் என்றால் என்ன பொருள்?

தமிழச்சிகளின் "கற்பை" சூறையாடிக் கொண்டு வருகின்றார்கள். இது தமிழன் பிரச்சினை அல்ல. இது மனிதன் பிரச்சினை. இதை மனித நேயத்தோடு எல்லோரும் அணுக வேண்டிய பிரச்சினை. அந்த அடிப்படையிலேதான் சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து, இந்த உண்ணாவிரதம் இங்கே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?சிவப்பு கம்பளத்தின்மீது டில்லியில் நடந்து வருகின்ற ராஜபக்சேவுக்குச் சொல்லுகின்றோம். தமிழர்களுடைய இரத்தத்தால் அது சிவப்பாக்கப்பட்டு அதன் மீது நடத்து வந்திருக்கின்றீர்கள். ராஜபக்சே அவர்களே நீங்கள் யாருக்குக் கை கொடுத்தாலும் அது ரத்தம் படிந்த கரம்.

அனைவருக்கும் தலை தாழ்ந்த நன்றி

தமிழ்நாடும் மற்றும் இந்தியத் துணை துணைக் கண்டமும் இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதற்கு ஒரு துவக்கம் வேண்டும். அந்த தொடக்கத்தை சரியான நேரத்திலே தெளிவாகத் தொடங்கியவர்களுக்கு எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் சமுதாயத்தின் சார்பாக இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டேன் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று சொல்லக் கூடிய உணர்வை இன்றைக்குப் பார்த்திருக்கிறோம். இதில் கட்சி இல்லை. ஜாதி இல்லை. மதம் இல்லை. பாலின வேற்றுமைகூட இல்லை. எல்லோரும் இங்கு ஒன்றாக திரண்டிருக்கின்றோம் என்றால் இது ஒரு அடையாளமாகும்.

ராஜபக்சேவின் முட்டாள்தனமானப் பேச்சு

ராஜபக்சே எவ்வளவு தடுமாற்றமாக, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நேற்று காலை வந்த ஏடுகளிலே அந்த செய்தி வந்திருக்கிறது. தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் அல்ல என்று சொல்லுகின்றார்கள். ஒன்றை கேட்கின்றோம். ராஜபக்சே அவர்களே! நவீன இட்லரே! விடுதலைப்புலிகளை காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும். நாங்கள் ஒன்றும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. விடுதலைப்புலிகள் தமிழர்களுக்குப் பிரதிநிதிகள் அல்ல என்று சொல்லுகின்றீர். அப்படியானால் அவர்களை அழைத்துப் பேச வேண்டும். பேச வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஒன்று உங்களுடைய முட்டாள்தனமா? அல்லது திசை திருப்பலா? (பலத்த கைதட்டல்).

இங்கே அருமை-யான தீர்மானங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உணர்வுகள் இங்கே திரண்டிருக்கின்றன. ஒன்றை இந்த நேரத்திலே சொல்ல விழைகின்றோம். இங்கிருக்கின்ற ஆட்சி இன உணர்வு அற்ற ஆட்சி அல்ல. அதற்கென்று சில வரைமுறைகள் உண்டு. மற்றவர்களுடைய செயலை தடுக்காமல் தமிழர்களுடைய உணர்வு உள்ள ஒரு ஆட்சியாக இருக்கின்றது.

6 மேயர்கள் செல்லவில்லை

ஆறு மேயர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். மேயர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்க வந்திருக்கின்ற ராஜபக்சே நிகழ்ச்சிக்குப் போக மாட்டோம் என்று புறக்கணித்திருக்கின்றார்கள

Edited by கந்தப்பு

தமிழகத்தில் இருக்கிற அன்பு நெஞ்சங்களுக்குள்ள சிந்தனை கூட இல்லாமல்..

எங்கள் நாட்டில் சில தமிழ் ஜென்மங்கள்..

சிலது..உயிரைச்சூரையாடும் காடடேறிகளாக..

எனக்குத்தெரிந்த நண்பருடைய தம்பி வவுனியாவிலே.. சுடப்பட்டார்.

வந்தவர்கள் துரோகிகள்(ஒட்டுக்குழு) இன்னொரு சகோதரரை தேடி வந்தார்களாம்..

தாய்..சகோதரி..அந்த இளைஞன் கத்தக் கத்த.. கதகறக்கதற சுட்டார்களாம்..

போகும் போது சகோதரி தலைமுடியை பிடித்து உலுக்கி அவனை சுடத்தான் வந்தோம்..மாறி இவனை சுட்டுவிட்டோம்.அவனையும் வந்த சுடுவோம் என்று சொல்லிவிட்டு போனார்களாம்.

இது என்னவிதமான செயல்..

வெறியா..

துப்பாக்கி கையிலுள்ள திமிரா..

யாருள்ள கோபமா..

ஏன் இந்த மிருகத்தனம்..

இவர்களையும் ஒரு அன்னைதான் பெற்றாரா..

இவர்கள் மனிதர்களிடையேதான் வளர்ந்தார்களா..

இந்த கொலைவெறியாட்டத்திற்கு தலைவர் எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்?.

செஞ்சோற்றுக் கடன். பேரினத்தின் எலும்புத்துண்டங்களுக்காக அவர்கள் வீசும் பிச்சைக்காக தம் இனத்தையெ அழிக்கும் காட்டு மிராண்டிக் கூட்டம். அடங்கும் காலம விரைவில் வரட்டும். எம் கையறு நிலை தமிழகம் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டது. எமது தேசியத்தின் பொறுமையும் இதற்கொரு காரணம். எமக்காய் குரல் கொடுக்கும் அந்த அன்பு நெஞ்சங்களுக்கு எமது நன்றிகள். ஆயினும் இவர்கள் மத்தியைக் கையேந்தி நிற்கும் வரை இவைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தானிருக்கும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.