Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவர் பதவி: சிங்களவர்களின் “பெருந்தன்மையும்”, தமிழர்களின் “பெருமிதமும்” சம்பந்தமா?

Featured Replies

சிங்களவர்களின் “பெருந்தன்மையும்”, தமிழர்களின் “பெருமிதமும்” சம்பந்தமா?
[ Thursday, 3 September 2015 ,12:37:46 ]

என்.சரவணன்

சம்பந்தரின் எதிர்கட்சித் தலைமையேற்பு குறித்து பல கோணங்களில் இருந்தும் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. சிங்கள பேரினவாத தரப்பு இந்த தெரிவு குறித்து கொதித்துப் போயுள்ளது. நாட்டைப் பிரிப்பதற்காக தமிழர்களுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் இது இந்த அடையாளம் என்கின்றனர்.

இன்னொருபுறம் ஆளும் சிங்கள தரப்பு தமிழர்களுக்கு சிங்களவர்களால் காட்டப்பட்டுள்ள பெருந்தன்மை என்கிற அர்த்தத்தில் குதூகலமடைகின்றன. தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கூட இதனை ஆதரித்து கருத்து வெளியிடுவது கூட இனவாதிகளையும் மீறி தென்னிலங்கை தமது இனத்தாராளவாத சமிக்ஞையை வெளிப்படுத்திவிட்டது என்கிற அர்த்தத்தில் தான்.

தமிழர் தரப்போ வரலாற்றில் இரண்டாவது தடவையாக, அதுவும் 33 வருடங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கு கிடைத்துள்ள பதவி என்று “தமிழ்ப் பெருமிதம்” கொள்கின்றன.

இந்த பதவியால் தமிழர் தரப்புக்கு மேலதிக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ. தாம் தமிழர்களுக்கு தீங்கிளைக்காத, அவர்களுக்கு வரபிரசாதம் வழங்கும், தாராளப்போக்குள்ள ஜனநாயக சக்தி என்கிற பிம்பத்தைக் காட்ட சிங்கள அரசுக்கு கிடைத்துள்ள சாதகம் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. போர்குற்றச்சாட்டிலிருந்து மீளவும், இனபிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக்கான வழிகளிலிருந்து காலந்தாழ்த்தவும், ஒத்திவைக்கவும் கூட சிங்களத் தரப்புக்கு இது வாய்ப்பாக பயன்படும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தருவதற்கு பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்றும் இதுவரை கால அரசாங்கங்கள் சாட்டு கூறி வந்திருக்கின்றன. பிரதான கட்சிகள் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்தால் அதனை சாத்தியப்படுத்தலாம் என்றும் இதுவரை காலம் கூறி வந்திருக்கிறன. ஆனால் அந்த உத்தரவாதங்களுடன்  இம்முறை இந்த “தேசிய அரசாங்கங்கம்” அமைக்கப்படவில்லை என்பதை நினைவிற்கொள்வோம். எனவே இது “நல்லாட்சியா” அல்லது இன்னொரு “காட்டாட்சியா” என்பதை இனிவரும் காலமே நமக்கு உணர்த்தும்.

அதே வேளை கூட்டமைப்புக்கு இந்த தகுதி சரியானது தானா என்கிற இன்னொரு கேள்வியும் எழுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் ஒரு எதிர்க்கட்சிக்குரிய அரசியல் மரபை வளர்த்து வந்தது கிடையாது. இலங்கை என்கிற தேசத்தின் ஏனைய பிரச்சினைகளின் பால்நின்று ஏனைய எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து பணியாற்றிய அரசியல் அனுபவம் அவர்களுக்கு கிடையாது. ஒரு எதிர்க்கட்சிக்குரிய அரசியல் உள்ளடக்கத்தை அவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.

இதுவரை ஈழத்தமிழர் அரசியல் என்பது எதிர்ப்பரசியலை அரசியல் கலாசாரமாக வளர்த்தெடுத்து வந்திருப்பதால் இலங்கையின் ஏனைய பிரச்சினைகளிலிருந்து அந்நியப்பட்டே வந்திருக்கின்றன என்பது கண்கூடு. ஏன் இப்படிப்பட்ட அனுபவத்துடன் தான் ஏனைய கட்சிகளும் எதிர்க்கட்சி பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றனவா என்கிற கேள்வி எழலாம். ஆனால் இன்றைய எதிர்க்கட்சி வரிசையில் இதற்க்கு தகுதிவாய்ந்த வேறு கட்சிகளே இல்லையா என்கிற கேள்வியை நியாயமாக எழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எதிர்க்கட்சிக்கு தகுதியான கட்சி ஜே.வி.பி.யே இலங்கையின் ஏனைய பிரச்சினைகள் குறித்த எதிர்ப்பரசியல் செய்த நீண்ட மரபு அவர்களுக்கு உரியது.

விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பு அந்த பொறுப்புக்கு தெரிவாகிவிட்டது. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிப் பதவி கிடைத்து விடக்கூடாது என்கிற இனவாத போக்கை எதிர்த்து நிற்பது எவ்வளவு அவசியமோ அதுபோல கூட்டமைப்பு காத்திரமான எதிர்க்கட்சி தலைமைப் பாத்திரத்தை பொறுப்புடன் ஆற்றும்படி வலியுறுத்துவதும் மிகவும் அவசியம்.

எதிர்க்கட்சி தலைமைக்கு சம்பந்தரை ஆளும்தரப்பு தெரிவு செய்ததானது பலவீனமான எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்கிக் கொண்டு ஆளுங்கட்சியை பலப்படுத்துவதும். தம்மை ஒரு இனத் தாராளவாதிகளாக சர்வதேசத்துக்கு காண்பிக்கும் கண்துடைப்பு மட்டுமே.

ஆளும் சிங்கள தரப்பின் அரசியல் நிகழ்ச்சிநிரல் சரியான திசையில் தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

 

http://ibctamil.com/articles/index/360

"எதிர்க்கட்சி தலைமைக்கு சம்பந்தரை ஆளும்தரப்பு தெரிவு செய்ததானது பலவீனமான எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்கிக் கொண்டு ஆளுங்கட்சியை பலப்படுத்துவதும். தம்மை ஒரு இனத் தாராளவாதிகளாக சர்வதேசத்துக்கு காண்பிக்கும் கண்துடைப்பு மட்டுமே."

 

இத் திட்டத்தை வகுத்தது மேற்குலகும் ஹிந்தியாவும் தான்.இங்கே ஒரு முக்கிய சூத்திரதாரி ரொனி பிளேயர் அவர்கள்.கள்ளை ருசிப்பதாகப் பாவனை காட்டி களத்தில் நின்றவர்

   wimal-and-ranil-696x363.jpg

எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்தார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் எழுந்து “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி. குமார வெல்கமவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எந்த அடிப்படையில் சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்?” என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கருஜயசூரிய ‘இதுவரை மன்றத்திற்கு கடிதம் கிடைக்கவில்லை’ என்றார்.

இதன்போது சபையில் கூக்குரல் எழுந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘ எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்து விட்டார். இது தொடர்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. யாரும் குரங்கு போன்று நாடகமாட முடியாது. இப்போதைய பாராளுமன்றத்தை முன்னைய பாராளுமன்றம் போல் முன்னெடுத்து செல்ல முடியாது என்றார்’.

http://www.newstig.com/?p=4710

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.