Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் தலைகீழ் மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவின் தலைகீழ் மாற்றம்
2015-08-28 12:29:01 | General

2009  மே யில்  முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த  யுத்தத்தின்  இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர், உடைமை இழப்புகள் ஏற்பட்டிருந்ததுடன், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட  தமிழ்மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.  

அத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் சர்வதேச மனித உரிமைகள், சட்டம், சர்வதேச மனிதாபிமான  சட்ட விதிகளை மோசமாக மீறியிருந்ததாக பரவலாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன்,  இவை போர்க்குற்றப் பரிமாணத்தை கொண்டவையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்தி "பதிலளிக்கும் கடப்பாடு' நிலை நிறுத்தப்பட வேண்டுமெனவும் உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதுடன் அவர்களின் துன்பங்களை ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  வெளிநாட்டு அரசாங்கங்களும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்களும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் வட, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அச்சமயம்  ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். 


அதில்  சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான "பொறுப்புக் கூறுவதற்கான' நடவடிக்கைகளையெடுக்க  அரசாங்கம் இணங்கியிருந்தது. தொடர்ந்து வந்த மாதங்களில் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை ராஜபக்ஷ எடுக்கத்தவறியிருந்த நிலையில், சர்வதேச  விசாரணைக்கான வலியுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில் இந்த விடயம் குறித்து  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க  தருசுமன் தலைமையில்  மூவர் கொண்ட நிபுணர் குழுவை பான்கீ மூன் நியமித்தார்.

2011 ஏப்ரல் 12 இல் ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை கையளித்ததுடன்,  கொழும்புக்கும் அதன் பிரதியை வழங்கியிருந்தது. ஆயினும்  அதனை "பக்கச்சார்பானதென' அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. அதேவேளை  பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் நிபுணர்குழு  விமர்சித்திருந்தது.

அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நியமித்திருந்த போதும் அதனை வரவேற்றிருந்த ஐ.நா. தனது பிரதான அங்கங்களில் ஒன்றான மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுமாறு உறுப்பு நாடென்ற வகையில் இலங்கையை வலியுறுத்தியது.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையில் கடந்த 2014 மார்ச் வரை இலங்கை தொடர்பான மூன்று  தீர்மானங்கள் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தன. இறுதியாக உள்வாங்கப்பட்டிருந்த  தீர்மானத்தில்  துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் கடந்த ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட  ஆட்சி மாற்றத்தையடுத்து அமெரிக்காவினதும் அதன் மேற்குலக நேச அணிகளினது  நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நடத்திய விசாரணை அறிக்கை கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் புதிய அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் அந்த அறிக்கை அடுத்த செப்டெம்பர் அமர்வில் வெளியிடப்படுமென மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அல்ஹுசைன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ள நிலையில்  இந்தவாரம் வருகை தந்த அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் நிஷா பிஷ்வால் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு இலங்கையுடன் இணைந்து தயாரிக்கப்படும் தீர்மானமொன்றை ஜெனீவா அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

அத்துடன் அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் "ஒத்துழைப்புடன்' கூடியதாக மட்டுமன்றி கடந்த ஒருவருட காலத்திற்குள் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் "மாற்றத்தையும்' கணிசமான அளவு "முன்னேற்றத்தையும்' கவனத்திற்கு எடுத்ததாக இருக்குமென அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் நிஷா பிஷ்வால் அழுத்தி உரைத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 


சர்வதேச  சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தீர்மானத்தை நகர்த்தியிருந்த அமெரிக்கா இப்போது நம்பகரமான  உள்ளக விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதுடன் இந்த நடவடிக்கை இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும்  திருப்திப்படுத்துமென கூறியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் அதிகளவுக்கு சீனா பக்கம் சாய்ந்து சென்றதால் இலங்கையுடன் அமெரிக்கா மற்றும் மேற்குநாடுகள் அதிருப்தி கொண்டிருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து உறவுகள்  சீர்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் நிலைப்பாடு "தலை கீழ்' மாற்றத்தைப் பெற்றிருக்கின்றதென்பது வெளிப்படையானது என்பதை அரசியல் விமர்சகர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். எதிர்கால சர்வதேச அரசியல் தந்திரோபாயங்கள் பொருளாதாரம் என்பனவற்றை பொறுத்தவரை இந்து சமுத்திரத்தின்"கேந்திர' அமைவிடத்தை இலங்கை கொண்டிருப்பதே வல்லரசான அமெரிக்காவின் கவனம் அதிகளவுக்கு திரும்பியிருப்பதற்கான காரணமாகக் கருதப்பட முடியும்.

அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகளின் பூகோள அரசியல் நலன் சார்ந்த "விருப்பு  வெறுப்புகளே'சிறிய நாடுகளுக்கு மாத்திரமன்றி அந்நாடுகளில் வாழும்  சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் உட்பட அடிப்படை  உரிமைகளுக்கான "அளவுகோலை' தீர்மானிப்பதாக உலக ஒழுங்கு உருவாகியுள்ளது.

http://www.thinakkural.lk/article.php?editorial/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.