Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் மூலம் தீர்வென்றால் அதற்கு நாங்களும் தயார்: சி.எழிலன்

Featured Replies

(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 06:43 ஈழம்) (கொழும்பு நிருபர்)

சிறிலங்கா அரசாங்கம் போர் மூலமே தீர்வென்று கூறினால் அதற்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி:

கேள்வி: சர்வதேச அனுசரணையுடன் சர்வதேசமும் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தால் பேச்சிற்கு செல்வீர்களா?

பதில்: எமது தலைவர் சிறிலங்கா அரசின் முழுமையான பக்கங்களையும் பார்த்து அவர்களினால் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்பதன் பின்பு நாங்கள் தனியரசை நிறுவுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெரியப்படுத்தி இருக்கிறார். எனவே அந்த தனியரசு என்பதற்குள்ளே சர்வதேச ரீதியாக ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமானால் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக விடுதலைப் புலிகள் ஆலோசிக்கத் தயாராக இருக்கிறார்கள். இதன் பின்பு வேறொரு நடவடிக்கை தொடர்பாக பேசுவது உண்மையிலேயே இயலாத காரியமாகவே இருக்கும்.

கேள்வி: பேச்சுவார்த்தைகள் இல்லையானால் அடுத்த கட்டமாக விடுதலைப் புலிகள் யுத்த்தத்திற்கு தயாராகி விட்டார்களா?

பதில்: விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை என்றுமே யுத்தத்திற்கு தயாரான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். போர் நடைபெறுகின்ற பொழுது சமாதானத்தைப் பற்றி யோசி, சமாதானம் நடைபெறுகின்ற பொழுது போரைப் பற்றி யோசி என்று சொல்வார்கள். இதேபோன்ற எண்ணக்கருவோடு எமது தலைவர் விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தி வருகிறார். அந்த வழி நடத்தலின்படி நாங்கள் எப்போதும் போரிற்கு தயாராகவே இருக்கிறோம்.

ஏனென்றால் நாங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துபவர்கள். எப்போதும் போருக்குத் தயாராகவே இருக்க வேண்டும். நாங்கள் பல விடுதலைப் போராட்ட வரலாறுகளை பார்த்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின்பின் போருக்கு தயாராக இல்லாததால் எப்படி அழிந்து போனார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். அவை பாடமாகவும் உள்ளன. இந்த நிலையில் நாங்கள் எங்களை எப்போதும் போருக்கு தயார்படுத்தியே வைத்துள்ளோம். போரினால்தான் தீர்வு என்றால் போரில் ஈடுபடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: அரசு தாக்குதல்களை நடத்துகின்றபோது நீங்கள் உங்களது முப்படைகளின் பலத்தையும் பயன்படுத்துவீர்களா?

பதில்: யுத்த நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் கடந்த காலத்தில் மதித்து அதன்படி கடந்த காலங்களில் நடந்து கொண்டோம். ஆனால் அரசு தொடர்ந்து மீறி வருகின்றது. இந்த நிலையில் எங்களது நிலைப்பாட்டில் ஏற்படுகின்ற மாற்றம் நாங்கள் எல்லா வகையிலும் தாக்குதலை நடத்த வழி சமைக்கும் அது தேவையாகவும் இருக்கிறது. எங்களுடைய அனைத்துப் படைப் பிரிவுகளும் தாக்குதல்களை நடத்தும்.

கேள்வி: வாகரை நிலைமைகள் பற்றி கூற முடியுமா?

பதில்: வாகரையில் தொடர்ந்தும் உணவு நெருக்கடி இருந்து வருகிறது. அதற்கு அப்பால் அந்தப் பகுதியில் உள்ள மக்களை நோக்கி படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த மக்களுடைய அவலம் தொடர்பாக அரசஇ அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்றபோதும் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. அரசு அந்த மக்களை பட்டினி போட்டு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த மக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் மட்டுமே வந்துள்ளன. இவை "யானைப் பசிக்கு சோளப் பொரி" போன்றதுதான்.

கேள்வி: வாகரைப் பகுதி மக்களையும் குடாநாட்டு மக்களையும் பட்டினி போடுவது தான் அரசின் நோக்கமா? அல்லது வேறு நோக்கங்களும் உள்ளதா?

பதில்: யுத்தத்தில் உணவும் மிக முக்கியமானது. அந்த உணவு இல்லாவிட்டால் எந்த ஒரு நடவடிக்கையையும் செய்ய முடியாது பிரச்சினை வரும். அது யாராக இருந்தாலும் நிலைமை அதுதான். ஆனால் தமிழீழத்தின் நிலைமை வேறு. கடந்த காலங்களில் பொருளாதார தடை விதிக்கப்பட்ட போதிலும் எமது மக்கள் மனம் சோராமல் விடுதலைப் போராட்டத்தில் பற்றுறுதியுன் செயற்பட்டார்கள். நாங்களும் பல இராணுவ வெற்றிகளை ஈட்டினோம் என்பதை சிறிலங்கா அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : புதினம்.கொம்

ஈழத்திலிருந்து

ஜானா

எழிலன் - அடங்கவே மாட்டாரா?

அப்போ - திரு.பாலகுமார்

இப்போ இவர்! :angry:

யாருக்கு அடங்க வேண்டும்?

எதை அடக்க வேண்டும்?

ஏன் அடங்க வேண்டும்?

சற்று விளக்கமாக கூறுங்களேன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ சொல்ல வர்கின்றீர்கள்.. என்ன என்றுதான் புரியவில்லை...

விளக்கமாக எழுத முயற்சி செய்யுங்கள்.. அதைவிடுத்து புலம்பாதீர்கள்...

எழிலன் அடங்குவது இருக்கட்டும்.. நீங்கள் அடங்கவே மாட்டீர்களா?

எழிலன் - அடங்கவே மாட்டாரா?

அப்போ - திரு.பாலகுமார்

இப்போ இவர்! :angry:

Edited by Kishaan

ஏன் இவளவு கோவம் கிசான் -சாணக்யன்??

இனி எதுக்கு அறிக்கைகள் எல்லாம்?

அதுதான் தலைவரே சொல்லிட்டாரே

இனி சிங்களவன் எதையும் - எமக்கு தரமாட்டான் என்று!

போருக்கு தயார் என்று சொல்லி - சொல்லி

கிபிர் அடியில் -தலை சிதறி - மூளி சுவரில்- பறந்து போய் ஒட்டணுமா?

வெறும் அறிக்கைகளூக்காக.............

அதை சொன்னன்! :huh:

ஆக்கபூர்வமான விடயத்தில் - அது இருந்தால் ...

இறப்புக்கும் மதிப்பு!!

Edited by வர்ணன்

:huh: போராட்டம் என்பது பெரிய சந்தை போன்றது.....தூரத்தில் இருந்து கேட்டால் சல சல என்ற சத்தம் தான் கேட்க்கும்.....உள்ளே கிட்ட போனால் .....ஒவ்வொறு கூறுகளாக

சல சல ஐ பிரித்து அறியலாம்.....ஆகவே பெரிய சந்தை என்பது சல் சல் வில்தான் தீர்மாணிக்கப்படுகிறது.......அதற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை கேட்டு பழகிப்போன வர்ணன் போன்றவர்களிற்கு எழிலனின் பேட்டி கோபத்தை உண்டு பண்ணலாம். ஆனால் இன்று தலைவர் மாவீரர் தின உரையில் என்ன சொன்னார் என்று தெரியாத எத்தைனையோ சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். புலிகளால் விடப்படுகின்ற அனைத்து செய்திகளும் சேர வேண்டியவர்களை போய்ச்சேருவதில்லை. ஏனவே புலிகள் தங்களின் கருத்தை மறுபடியும் மறுபடியும் சொல்வதால் அது போய்ச்சேராதவர்களையும் போய்ச்சேர வாய்ப்புண்டு.

இப்ப சிறீலங்கா அரசாங்கம் எத்தனை தடவை புலிகளை தாங்கள் நினைத்தால் வென்று விடுவோம், அழித்துவிடுவோம் என்று சொல்கிறார்கள். அது முடியாத ஒரு காரியமாக இருந்தாலும் அதை சொல்ல வேண்டியதன் கட்டாயம் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.