Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைகளை அமெரிக்கா முன்னர் பெயருக்குத் தூக்கிப் பிடித்திருந்தாலும் கூட, இன்று அதைத் தேவையற்றது என்று கூறுவது எதற்காக என்பதை இக்கட்டுரை கூறுகிறது,

கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்

 

போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான  அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்.

 

தார்மீகப் பொறுப்பெடுத்தல் சாத்தியப்படுவதற்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் பங்கெடுத்த சர்வதேசச் சக்திகள் முதலில் தங்களது தார்மீகப் பொறுப்பை ஒப்புக்கொள்வதன் மூலம் தொடர்ந்து எநடந்துவரும் தமிழினவழிப்பைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.

 

அன்மையில் அமெரிக்க வானொலி ஒன்றில்  ஒலிபரப்பப்பட்ட தற்போதைய அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளரும், முன்னால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகவும் பணிபுரிந்த ரொபேட் பிளேக் அவர்களின் செவ்வியும் அதற்கான தமிழ்நெட்டின் பதிலும் இங்கே தரப்படுகிறது.

" சுமார் 20 வருடங்களுக்கு மேலாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழ்ப்பிரதேசங்கள் நோக்கி தெற்கிலிருந்து இலங்கை ராணுவம் முன்னேறியபோது பெருமளவிலான மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இவ்வாறு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தெற்கு நோக்கி வருவதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் எடுத்த முயற்சிகளை புலிகளியக்கம் திட்டமிட்டுத் தடுத்தது. அவர்கள் அப்படி தெற்கு நோக்கி வர இடமளிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான தங்குமிட வசதிகளும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே இவை எல்லாவற்றையும் அடியோடு தடுத்து நிறுத்தியதன் மூலம் புலிகளியக்கம் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைவித்து சர்வதேச  விதிகளை மீறியுள்ளது. ஆகவே புலிகளியக்கம் மக்களை தெற்கு நோக்கி இடம்பெயர அனுமதித்திருந்தால் இவை எவையுமே(அதாவது போர்க்குற்றங்கள்) நடந்திருக்க வாய்ப்பில்லை. இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். போர்க்குற்றங்கள் பற்றிய விவாதங்களின்போது புலிகளின் இந்தச் செயற்பாடு இலகுவாகவே அடிபட்டு மறைந்து விடுகிறது."

 

"ரெண்டாவதாக புலிகளியக்கம் வேண்டுமென்றே தமது கனரகப் பீரங்கிகளை மக்கள் செறிந்துவாழும் பகுதிகள் நோக்கி நகர்த்துவதன்மூலம் ராணுவத்திடமிருந்து வரும் பதில்தாக்குதல்கள் மக்கள் வாழும் பகுதிகள் மேல் இடம்பெறுமாறு நடந்துகொள்கின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டு சர்வதேச அபிப்பிராயமும் நெருக்குதல்களும் கொழும்பு அரசாங்கத்துக்கெதிராகத் திரும்பும் என்று அவர்கள் எதிர்பார்த்ததோடு, ராணுவ நடவடிக்கையின் அழுத்தத்திலிருந்து தம்மைப் பாதுகாக்கவும், இலங்கை அரசாங்கத்தை  ஒரு ஒரு தீர்வு நோக்கி நிர்ப்பந்திக்கவும் முயன்றுள்ளனர்".

 

"புலிகளியக்கம் ஒருபோதுமே சமாதானத்தில் அக்கரை கொண்டது கிடையாது என்று இலங்கை சொல்வதில் காரணம் இல்லாமலும் இல்லை.அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அரைகூவல் விடுத்ததெல்லாம் தம்மை மீள ஒருங்கிணைத்துக்கொள்ளவும் தமது ஆயுத வளங்களைப் பெருக்கிக்கொள்ளவும் தான். ஆகவே அவர்ஜ்கள் உண்மையான அனைத்து சமாதான நடவடிக்கைகளையும் உதாசீனம் செய்துவந்துள்ளார்கள்".

 

எல்லாவற்றிற்கும் முதலாக மக்கள் ராணுவம் முன்னேறியபோது எதற்காக தெற்கு நோக்கி நகராமல் வடக்கு நோக்கியே இடம்பெயர்ந்தார்கள் என்பது பிளேக் அவர்களுக்குத் தெரியுமா?? அடுத்ததாக வெறுமனே மக்களைப் பார்த்து இனவழிப்பு ராணுவத்திடம் போய்ச் சரணடையுங்கள் என்று வாஷிங்டனிலிருந்து அறிக்கை விட்டதை விடவும் அவரும் அவரது நாடும், இன்னும் இதர சர்வதேச பிரமுகர்களும் அம்மக்கள் உண்மையாகவே ,மனிதாபிமனத்துடன் நடத்தப்படவும், சர்வதேச வழிமுறைகளுக்கேற்ப நடத்தப்படவும் தேவையான எந்த நடவடிக்கைகளையாவது எடுத்தார்களா என்பதைச் சொல்ல முடியுமா??

 

மூன்றாவது, இன்று போர்க்குற்ற விசாரணைகளில் உண்மையாகவே ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம் என்னவென்றால் புலிகள் ஒருபோதும் மக்களை முன்னிறுத்திப் போராடாமால தாம் அவர்களுக்குக் கவசமாக  முன்னின்று போராடித் தமது உயிரையும் கொடுத்தார்கள்  என்பது.

 

சமாதானத்தில் புலிகளுக்கு நாட்டமில்லை என்று சிங்களவர்கள் சொல்வதிலும் நியாயம் இல்லாமலில்லை என்று சொல்லும் பிளேக் அவர்கள், கடுமையான ஒரு தீவிரவாத இயக்கமான புலிகள் தோற்கடிக்கப்படுவதை தாம் விரும்பி எதிர்பார்த்ததாகவும் சொல்கிறார்.

 

இவ்வாறான் அறிக்கைகளே அவரும் அவரது அமெரிக்காவும் போரில் பங்கெடுத்தார்கள் என்பதற்கும் அதன்மூலம் போர்க்குற்ரங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கும் சான்றாக அமைகின்றன.

 

பிளேக் அவர்களின் இந்த அறிக்கைகள் ஈழத்தமிழருக்குச் சொல்வதெல்லாம் அவர்களது போர்க்குற்றங்களுக்கான நீதி தேடல் என்பது எந்தளவிற்கு முழுமையாக்கப்படுதல் அவசியமென்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும், அவர்கள் எவ்வாறான அரசியல் பிரபலங்கலாகவோ அல்லது சக்திகளாகவோ இருந்தாலும் கூட அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும்தான்.

 

இது இவ்வாறிருக்க கடந்தவாரம் டெக்ஸாஸ் சென்றிருந்த மைந்தவை பிளேக் அவர்கள் "உத்தியோகப்பற்றற்ற " முறையில் சந்தித்ததாக கடந்த செவ்வாயன்று வெளிவந்த டெயிலிமிரர் பத்திரிக்கை கொழும்பு அரசியல் வட்டாரங்களை ஆதாரம் காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

இந்தச் சந்திப்பு வெளியே தெரியாதிருக்க "தற்செயலாக" இவ்விருவரும் சந்தித்ததாகவும் அது உத்தியோக பூர்வமான சந்திப்பு இல்லையென்றும் அமெரிக்க ராஜாங்கதிணைக்களம் கதை விட்டிருக்கிறது.

 

இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கான சூழ்நிலைகளைப் பார்க்கும்போது இதில் ஈடுபாடுடைய தரப்புக்கள் செய்யும் ஒளித்துப் பிடித்தல் விளையாட்டுக்கள் வெளித்தெரிய ஆரம்பித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கும் டெயிலி மிரர் பத்திரிக்கை, இந்தச் சந்திப்புப் போன்றே சென்ற வருடமும் பிளேக் அவர்கள் கோத்தாபாயவை "உத்தியோகப்பற்றற்ற " முறையில் சந்தித்தார் என்கிற செய்தியையும் தெரிவிக்கிறது.

 

டெயிலி மிரர் செய்தியின்படி பிளேக் அவர்களின் ஆத்ரவில்லாமல் மகிந்த அமெரிக்காவுக்கான தனது பயணத்தை நினைத்துக்கூடப் பார்த்திருக்க இயலாது என்று சொல்லப்படுகிறது. மகிந்தவை பிளேக் அவர்கள் சந்திப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் முன்னமே நடைபெற்றதன் காரணத்தினால்த்தான் மகிந்தவின் செயலாலர் லலித் வீரதுங்கவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸும் உடன் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மகிந்தவுக்கும் பிளேக் அவர்களுக்கும் இடையேயான அந்நியோன்னிய சிநேகம் பற்றி டெயிலி மிரர் மேலும் தெரிவிக்கையில்,

 

" இலங்கைக்கான அமெரிக்க தூதராக பிளேக் அவர்கள் இயங்கிய காலப்பகுதியில் அவர் மகிந்தவுடன் மட்டுமல்லாமல் அவரது முழுக்குடும்பத்துடனும் மிகவும் இறுக்கமான நட்பை வளர்த்துக்கொண்டிருந்தார் என்பது பரவலாக எல்லாராலும் அறியப்பட்ட ஒரு விடயம். ஒருமுறை மகிந்தவின் அழைப்பை ஏற்று மகிந்தவின் ஊரான தங்கள்ளையில் அமைந்திருக்கும் மகிந்தவுக்குச் சொந்தமான உல்லாச விடுதி கால்ட்டன் கவுஸில் ஒரு முழுநாள் தனது குடும்பத்துடன்  பிளேக் அவர்கள் தங்கியிருந்தார். அங்கு கடலில் அவர் நீந்திய விதமும் இதர விளையாட்டுக்களும் மகிந்த குடும்பத்தாரிடையே மிகவும் பரவசமாகப் பேசப்பட்டது".

 

 

 

அதே பத்திரிக்கைச் செய்திப்படி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் உருத்திரகுமாரனுடனும் பிளேக் அவர்கள் தொடர்பிலிருந்தார் என்றும் ஆனால் மகிந்தவின் அமெரிக்கப் பயணத்தின்போது போர்க்குற்ற விசாரனைகளுக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் என்று உருத்திரகுமாரனை பிளேக் கேட்டுக்கொண்டாரா என்பது தெரியவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வடக்கில் புதிய தேர்தல்களின் மூலம் தமிழர் தாயகத்திலிருந்து புதிய தலைவர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாக பிளேக் அவர்கள் இன்று சொல்கிறார்.இந்திய அரசைப்போலவே பிளேக் அவர்களும் கிழக்கை வேண்டுமென்றே விட்டு விட்டு வடக்கில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

 

பிளேக் போன்றவர்களின் இந்தக் கருத்துக்களிலிருந்து ஈழத்தமிழர்கள் ஒன்றை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். அதாவது வடக்கில் மகிந்தவுக்குக்  கட்டுப்பட்டு சேவையாற்றக்கூடிய அடிமைச் சேவகர்களைத்தான் அமெரிக்க விரும்புகிறதென்பதும், அதற்கான நடவடிக்கைகளை அது வரவேற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதையும்தான்.

 

ஆனால் புரட்சியையும், இன உணர்வுகளையும் திசை திருப்பி மழுங்கடிக்கும் இந்த அடிமைச் சேவகர்களைப்பற்றி ஈழத்தமிழ் அவதானிகள் நன்கே அவதானித்து வைத்திருக்கின்றனர். இவர்கள் வெளியிலிருந்தோ அல்லது உள்ளே இறக்கப்பட்டோ செயலாற்றி வருவதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இவ்வாறான அடிமைச் சேவகத் தலமைகள் எதற்காக ஆக்கிரமிப்பு அரசிடம் அடைக்கலமும் உதவியும் தேடிக் கொள்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

 

இவ்வாறான தலமைகள் தமது இருப்பைத் தக்கவைக்க ஒடுக்குமுறையையும், பயங்கரவாதத்தையும் மக்கள்மேல் பிரயோகிக்கின்றன. இவ்வாறான தலமைத்துவத்திற்கான தேவை பற்றித்தான் பிளேக் அவர்கள் பிணாத்துகிறார் என்றால் அவை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டுமென்பதில் ஈழத்தமிழர்கள் கவனமாக இருத்தல் அவசியம்.

 

அமெரிக்காவின் உலகலாவிய அரசியல் கொள்கையின் மொத்த உருவத்தினை இன்று எகிப்தின் வீதிகளில் முழு உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் மக்கள் எழுச்சியின் பரிமாணத்தை நாட்டுமக்கள் அறியமுடியாதபடி இலங்கையின் ஊடகங்களில் முற்றான இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

 

 

 

மகிந்தவின் உள்நாட்டு தீர்வை இந்தியாவும், தமிழரின் "தாயகத் தலைமைகளை" அமெரிக்காவும் ஆதரித்துக்கொண்டிருக்க இவை இரண்டும் சேர்ந்து தமிழரின் நலன்களை தட்டில் வைத்து சிங்களத்துக்கு தாரை வார்த்துக்கொண்டிருப்பதை தமிழர் அறிந்துகொள்ளுதல் அவசியம்.

 

நடந்து முடிந்த இனக்கொலை இனக்கொலையாக ஏற்றுக்கொள்ளப்படாதவரை, திட்டமிட்ட குடியேற்றங்கள் குடியேற்றங்களாகக் கண்டுகொள்ளப்படாதவரை, தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக ஏற்றுக்கொள்ளப்படாதவரை, அமெரிக்காவும் அவர்களது கூட்டாளிகளும் ஒன்றில் இந்த இனவழிப்பு யுத்தத்தில் பங்காளிகளாக, போர்க்குற்றங்களில் பங்குதாரர்களாக மட்டுமே இருக்க முடியும்.

 

அபிவிருத்திக்காகவும், இணக்கப்படுகளுக்காகவும், மனிதவுரிமைகளுக்காகவும் இனிமேல் தமிழரின் சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.

 

முற்றான சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தினால் மட்டுமே மேற்சொன்ன அபிவிருத்தி, மனிதவுரிமைகள், இணக்கப்பாடுகள் பற்றிச் சிந்திக்கவும் ஆர்வத்துடன் ஈடுபடவும் முடியும்.

 

தமிழ்நெட்டிலிருந்து.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.