Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுக்கு இலங்கை கடற்படையுடன் நெருங்கிய தொடர்பு

Featured Replies

அயல்நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் என்கிறார் கடற்படை தளபதி

"இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா கடல் சார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக அமையலாம்" என்று இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா எச்சரித்துள்ளார்.

கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இந்தியாவின் அருகில் உள்ள மியான்மர் போன்ற நாடுகள் சீனாவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. மியான்மருடன் உள்ள உறவை பல வருடங்களாக சீனா பலப்படுத்தி வருகிறது. அதேபோல், இலங்கை கடற்படையுடனும் சீனாவுக்கு தொடர்பு உள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்கனவே சீனாவுக்கு நல்ல உறவு உள்ளது. தற்போது, ஆபிரிக்க கடற்பகுதியில் உள்ள நாடுகளுடன் நட்பை பெறும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவைச் சுற்றிலும் ஒரு கடல் சார்ந்த போர்க்களத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சீன உறவை பலப்படுத்தும் நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தற்போது இல்லாவிட்டாலும், 20 வருடங்களுக்கு பின்னர் இவை இந்தியாவுக்கு எதிராக மாறலாம்.

இந்திய கடல் சார் கட்டமைப்பு திட்டங்களில் சீன கம்பனிகளுக்கு இடமளிக்கக்கூடாது. இந்த கம்பனிகள் சில முக்கிய தொழில்நுட்ப தகவல்களைத் தவறாக பயன்படுத்தலாம்.

சீன நாட்டின் பொருட்களை பயன்படுத்தாத நாடுகள் குறைவு. சீனா, தனது பொருட்களை இந்திய பெருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இச்சமயத்தில், அந்த நாடுகளுடன் நெருக்கமாகி வருவது சீனாவுக்கு பொருளாதார ரீதியாக இலாபம் கிடைக்கும்.

இவ்வாறு தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல்களை விற்க இருப்பதாக வந்த தகவல்களைப் பற்றி அவரிடம் கேட்ட போது, முக்கிய பகுதிகளில் நீர் மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்றார்.

http://www.thinakkural.com/news/2006/12/4/...s_page16643.htm

இலங்கை கடற்படையுடன் மறைமுகமாக கூட்டு ரோந்துக்கு இந்திய அரசு திட்டம்?

front2.jpg ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை செயற்படும் என இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.

இலங்கையும், இந்தியாவும் இணைந்து பாக்குநீரிணை பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இக்கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை ஒருங்கிணைந்து செயல்படும் என கடற்படை தலைமைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார்.

இது குறித்து டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் தலையிட இந்திய கடற்படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. அமைதிப் பணியில் கடற்படை தனது வரம்புக்கு உட்பட்டு உதவிகளைச் செய்யும்.

இலங்கையில் போர் வெடித்தால் அங்கிருந்து அதிக அளவில் அகதிகள் வருவார்கள். அந்த நிலையை சமாளிக்க இந்தியக் கடற்படை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அகதிகள் வருகையின்போது விடுதலைப் புலிகள் ஊடுருவி விடக்கூடாது என்ற கவலை கடற்படைக்கு உள்ளது. அதைக் கண்காணிக்க இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பும் தங்களது தரப்பிற்குக் கிடைக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மேத்தா.

மேத்தா கூறுவதும் கிட்டத்தட்ட இணைந்து கண்காணிப்பது என்ற அர்த்தத்தில்தான் வருகிறது. எனவே, மறைமுகமாக கூட்டு ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது என்று இணையத்தளமொன்று குறிப்பிட்டிருக்கிறது.

http://www.thinakkural.com/news/2006/12/4/...s_page16652.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.