Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் குடாக்கடலில் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் குடாக்கடலில் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி

- பண்டார வன்னியன் -

யாழ்.குடாக்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி நேற்றுத் தொடக்கம் படையினரால் வழங்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் மட்டும் மீன்பிடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநகர் கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் இணையத்தினர் குருநகர் இறங்குதுறைப் படை அதிகாரியுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அனுமதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அனுமதியைத் தொடர்ந்து நேற்று குருநகரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நூறு பேர் 25 வள்ளங்களில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றுக்காலை 8.00மணி தொடக்கம் முற்பகல் 11.00மணிவரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட கடற்பரப்பில் தொழில் செய்து மீனவர்கள் கரை திரும்பினர். நாளாந்தம் 25 வள்ளங்களில் தலா 4 மீனவர்கள் வீதம் 100 பேருக்கு மட்டுமே இச்சுழற்சிமுறை அனுமதி படையினரால் வழங்கப்பட்டுள்ளது எனவும்

கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் வரை காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை மட்டும் தொழில் செய்யமுடியும் எனவும் குருநகர் கடற்றொழிலாளர் சங்கங்களின் இணையம் தெரிவித்தது.

இதேநேரத்தில் நாளை 6ஆம் திகதி புதன்கிழமை குருநகரைச்சேர்ந்த ஐந்து இழுவைப்படகுத்தொழிலாளர்கள் குடாக்கடலில் தொழில்செய்வதற்கான அனுமதியும் படையினரால் வழங்கப்பட்டுள்ளது எனவும்

அவர்கள் நாளை பிற்பகல் 2.00 மணிக்குத் தொழிலுக்குச் சென்று மறுநாள் 7ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கரைக்குத் திரும்பலாம் எனவும் சங்கங்கள் தெரிவித்தன.

நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் தமது வள்ளங்களை மரக்கோல் மூலம் தாங்கியும் பாய்கள் மூலமுமே தொழில்செய்ய அனுமதிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்ட கடல் எல்லையை மீனவர்கள் தாண்டிச்செல்லாமல் இருக்க கடற்பரப்பில் கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் எனவும் நேற்று மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நேற்றுத்தான் குடாக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குடாக்கடலில் குருநகர் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை சின்னக்கடைப் பொதுச்சந்தையில் சந்தைப்படுத்திய போதிலும், மீனின் விலைகளில் எது வித மாற்றமும் இல்லாமல் வழமை போல உயர்வாகவே காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சூடைமீன் கிலோ 280 ரூபா ஆகவும் ஏனைய மீன்வகைகள் கிலோ 600 ரூபா வாகவும் விற்பனை செய்யப்பட்டன.

.நன்றி - சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.