Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வந்துள்ள சான்சலர் மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு

Featured Replies

இந்தியா வந்துள்ள சான்சலர் மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு
 
 
 
Tamil_News_large_1357415.jpg
 
 

புதுடில்லி: டில்லி வந்த ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலோ மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்களை மெர்கெல் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசுகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெர்கெல் இன்று (அக்டோபர் 05ம் தேதி) காலையில் டில்லி வந்தார் .இவரை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து மெர்கெலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி மெர்கெலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார் .


 

நமஸ்தே மெர்க்கல்:


 

ஏஞ்சலோ மெர்கெல் வருகை குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டில் ; நமஸ்தே மெர்கெல் ! இந்தியா வந்துள்ள உங்களை மனமுவந்து வரவேற்கிறேன் . இந்த வருகை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் . உங்களுடன் சந்தித்து பேசும் இனிய தருணத்திற்கு காத்திருக்கிறேன் . இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

டில்லி ராஷ்டிரபதி பவனில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பிற்கு பிறகு ஏஞ்சலா மெர்கெல் கூறியதாவது, பொருளாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில், இந்தியா உடன் இணைந்து செயல்பட ஜெர்மனி விருப்பமாக உள்ளதாக ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்தார்.

மெர்கெல், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1357415

 

 

  • தொடங்கியவர்

மோடியுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் சந்திப்பு

 
 
ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா சந்தித்தார்.
ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா சந்தித்தார்.

இந்தியா பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்கல் 3 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இரவு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இருநாட்டு இடையே பொருளாதாரம், வேளாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு, வளர்ச்சி, பாதுகாப்புத் துறை மேம்பாடு, நிதி தொடர்பான அணுகுமுறை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரிஸ்பேன் பயணத்தின்போது, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவை இந்தியா வரும்படி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

அப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை விடுத்தார்.

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்பதாக ஜெர்மனி ஏற்கெனவே உறுதி அளித்தது என்பது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/india/மோடியுடன்-ஜெர்மனி-பிரதமர்-ஏஞ்செலா-மெர்கல்-சந்திப்பு/article7725969.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.