Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலுக்கு வருகிறது

Featured Replies

(புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 17:49 ஈழம்) (பூ.சிவமலர்)

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற அமைச்சரவையின் முடிவை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று புதன்கிழமை அறிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம்இ தற்காலிக நடவடிக்கையாக 1979 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்டது. 1982 ஆம் ஆண்டில் நிரந்தரமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கையெழுத்தான போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் நீக்கப்பட்ட இந்தச் சட்டம் இப்போது மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது.

போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மிகவும் புறம்பான இந்த சட்டம்இ எவரையும் கைது செய்யவும் தடுப்புக்காவலில் வைத்திருக்கவும் படையினருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கிறது.

சட்ட அமுலாக்க முடிவு பற்றி அறிவித்த பிரதமர்இ நாட்டில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் உட்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கவும் அவர்களுக்கு உதவும் அனைவரையும் முடக்கவும் இந்தச் சட்டம் உதவும் என்றார்.

போர்நிறுத்த உடன்படிக்கையின் 2.12 ஆவது பகுதிஇ "பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தேடுதல் வேட்டையும் கைது நடவடிக்கைகளும் இடம்பெறாது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்படி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிடுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருந்தபோதுஇ ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறார்களும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் இச்சட்டத்தை இடைக்காலமாக நிறுத்தி வைக்க கொழும்பு ஒப்புக்கொள்ளும் வரை இந்தக் கொடுமை தொடர்ந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்க காவல்துறையும் இராணுவமும் கடுமையான முறைகளைப் பயன்படுத்தவும் இச்சட்டம் வழி செய்கிறது. வாக்குமூலம் கைது செய்யப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை சர்வதேச மன்னிப்புச் சபை என்ற அமைப்பும் மனித உரிமை அமைப்பும் வன்மையாகக் கண்டித்தன.

விடுதலைப் புலிகளைப் பற்றி தகவல் சொல்ல மறுத்ததாக பல தமிழ் இளைஞர்கள் இச்சட்டத்தின்கீழ் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல் செய்ய முடிவு செய்திருக்கும் வேளையில்இ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கும் எண்ணத்தை சிறிலங்கா அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது.

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதுடன்இ அவசரகாலச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவும் அரசு முடிவெடுத்துள்ளது" என்று கூறிய நிமல் சிறிபாலா டி சில்வாஇ அது குறித்த மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

வன்முறையுடன் தொடர்ந்து செயற்பட முடியாது. அரசாங்கம் தொடர்ந்து வழமைபோல் செயற்படும். இந்தச் செய்தி தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அரச சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன கூறினார்.

அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் போராட்டத்தை நிறுத்தும் உண்மையான நோக்குடன் பேச்சு வார்த்தைக்கு வந்தால்இ அரசாங்கம் அதற்கேற்ப செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி : புதினம்.கொம்

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.