Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு

Featured Replies

துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு

 

துருக்கியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் உடல்கள் கொடிகளால் மறைக்கப்பட்டுள்ளது| படம்: ஏ.பி.
துருக்கியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் உடல்கள் கொடிகளால் மறைக்கப்பட்டுள்ளது| படம்: ஏ.பி.

துருக்கி தலைநகர் அங்காராவில் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் டோகன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைதிப் பேரணிக்காக மக்கள் திரண்டிருந்த இடத்தில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்த இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறும்போது "15 பேரது உடல்கள் சிதறிக் கிடப்பதைப் பார்தேன். ஆங்காங்கே மனித உடல்களின் பாகங்கள் கிடக்கின்றன" என்றார்.

சம்பவம் குறித்து பிரதமர் அஹ்மெட்டுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சர் விளக்கியுள்ளார். இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/துருக்கி-தலைநகரில்-குண்டுவெடிப்பு-20-பேர்-உயிரிழப்பு/article7747017.ece

  • தொடங்கியவர்

துருக்கி குண்டுவெடிப்பில் 30 பேர் பலி: 100-க்கும் மேற்பட்டோர் காயம்

 
துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சடலங்களுக்கு மத்தியில், காயமடைந்து உயிருக்கு போராடியவர்களுக்கு உதவும் அப்பகுதி மக்கள். படம்: ஏஎப்பி
துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சடலங்களுக்கு மத்தியில், காயமடைந்து உயிருக்கு போராடியவர்களுக்கு உதவும் அப்பகுதி மக்கள். படம்: ஏஎப்பி

துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் பலியாயினர். காயமடைந்த 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இடதுசாரிகள் மற்றும் குர்திஷ் ஆதரவு குழுக்கள் சார்பில் நேற்று அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கூடியிருந்தவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதலில் ஒரு முறை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்ட தாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சிறிது இடைவெளியில் அடுத்தடுத்து 2 தடவை குண்டுகள் வெடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் பின்னர் தெரிவித்தன.

தற்கொலைப் படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு இந்த தாக்கு தலை நடத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு அரசின் செய்தி நிறுவன மான அனடோலியா தெரிவித் துள்ளது.

அந்நாட்டு சுகாதார அமைச்சர் முகமது மியூசினோக்லு, இந்த வெடி குண்டு தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் அகமது தவுடோக்லுவிடம் தகவல் தெரிவித்ததாக அனடோலியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிர வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவலை விரைவில் தெரிவிப்போம்” என்றார்.

வரும் நவம்பர் 1-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குர்திஸ்தான் ஒர்க்கர்ஸ் கட்சி (பிகேகே) மற்றும் அரசுப் படைகளுக்கிடையிலான 2 ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் சண்டை தொடங்கி உள்ளது.

http://tamil.thehindu.com/world/துருக்கி-குண்டுவெடிப்பில்-30-பேர்-பலி-100க்கும்-மேற்பட்டோர்-காயம்/article7749697.ece

  • தொடங்கியவர்
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு ; 86 பேர் பலி : 126 பேர் படுகாயம்
 
 
 
 
Tamil_News_large_1361282.jpg
 
Share this video : facebooktop.jpgtwittertop.jpg
 

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 86க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 126 க்கும் மேற்பட்டோர காயமுற்றுள்ளனர் .பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது . அங்காரா ரயில்வே ஸ்டேஷன் , மற்றும் அருகில் ஒரு இடத்திலும் குண்டு வெடித்தது . இங்கு நடந்த அமைதி பேரணியை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.



குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மீட்பு படையினர், காயமுற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து வருகின்றனர் .குண்டு வெடிப்புக்கான காரணம் , நடத்தியது யார் என்பது அறியப்பட வில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது.
துருக்கி வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ்., படையினர் மீது அமெரிக்காவுக்கு இந்நாடு அனுமதி வழங்கியதால் ஆத்திரமுற்ற பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும்  என அஞ்சப்படுகிறது

.http://www.dinamalar.com/news_detail.asp?id=1361282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.