Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் அச்சமடையத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச

Featured Replies

mahinda20060426.jpgபயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தும் முடிவை எடுத்த சில மணி நேரங்களில், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் உண்மையாக விரும்பினால் அதற்கு சிறிலங்கா அரசு தயாராக உள்ளது. அது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ் மக்களுக்கு அவர் நம்பிக்கை தெரிவித்தார். இச்சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் நசுக்கப்பட எவ்விதமான வாய்ப்பையும் தாம் வழங்கப்போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மட்டுமே இந்தச் சட்டம் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதத்கான காரணங்களை மகிந்த பட்டியலிட்டார்.

விடுதலைப் புலிகள், சமாதானப் பேச்சுகள் என அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டு கொலைகளை புரிந்து வருகிறது. நான் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே உச்சக்கட்டத்தை அடைந்தது. படையினர், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அப்படியிருந்தும் விடுதலைப் புலிகளுக்கு ஜெனீவாப் பேச்சுவார்த்தைகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கினோம். ஆனால், விடுதலைப் புலிகள் அப்பேச்சுவார்த்தைகளை முறியடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில் இராணுவத் தளபதியை இராணுவ தலைமையகத்திற்குள்ளேயே கொலை செய்ய விடுதலைப் புலிகள் முயற்சி செய்தனர். தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கொலை செய்ய முயற்சித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் நாட்டின் அரச தலைவரென்ற ரீதியிலும் முப்படையினரின் தளபதி என்ற ரீதியிலும் அமைதியாக இருக்க முடியுமா? நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது எனது கடமை.

எனவே தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை எனது அரசாங்கம் அமுலாக்கியது. போரினால் சிறிலங்கா அரசாங்கத்தை பணிய வைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை தோல்வியடையச் செய்வதே இதன் நோக்கமாகும் என்றார் அவர்.

விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு ஜனநாயகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ள மகிந்த, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார்.

பயங்கரவாதத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் ஜனநாயகமென்பது கேலிக்கூத்தாகும். அது வெறுமனே கேலிக்கூத்தல்ல. மரணத்தை விளைவிப்பதாகும்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பயங்கரவாதப் பிரச்சினைகள் உள்ளன. அங்கு ஜனநாயகத்தை பயங்கரவாதத்துடன் இணைத்துப் பார்ப்பதில்லை.

எனவே, பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்வதை விட வேறு வழி இல்லை. அதிலிருந்து பின்நோக்கிச் செல்வதென்பது நாட்டையும் மக்களையும் பயங்கரமான ஆபத்திற்குள் தள்ளிவிடும் நிலைமையாகும். அந்தத் தவறை செய்ய நான் தயாரில்லை.

பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்வதன் மூலமே புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அதேவேளை, நாட்டின் அபிவிருத்தியை பயங்கரவாதத்திற்காக கைவிடவும் தயாரில்லை.

நாட்டில் இரத்த ஆற்றையும் மனிதப் படுகொலைகளையும் நடத்தி விடுதலை பெற முனையும் விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய எமக்கு ஆதரவை வழங்க வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோளை விடுக்கிறேன் என்றார் மகிந்த.

இச்சட்ட அமுலாக்கத்தால் நாட்டில் நிலவும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் தடைப்படாது. அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் குழு இது குறித்து ஆய்வுகளையும் பரிந்துரையையும் தயாரித்துக்கொண்டுள்ளது. அது மிக விரைவில் உங்கள் முன்வைக்கப்படும்.

புதிய சட்ட திட்டங்கள் அமுலாக்கம் விடுதலைப் புலிகளை சட்ட ரீதியான ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வருமென நம்புகிறேன். அதற்காக அனைத்து சர்வதேச அமைப்புக்களும் செயற்படுமென நான் நம்புகிறேன் என்றார் மகிந்த.

http://www.eelampage.com/?cn=30069

தமிழ் மக்கள் ஒரு போதும் அச்சமடைய மாட்டார்கள் இலங்கை அரசு காட்டுகின்ற மஜிக் எல்லாம் 30 வருடங்களாக தமிழ் மக்கள் நன்றாக அறிந்தவையே. ஆனால் தமிழர் மஜிக் காட்ட வெளிக்கிட்டால் சிங்களவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது தான் இப்ப மிகப்பெரிய கேள்வி.

Edited by YARLVINO

எதற்காக நாம் அச்சமடைய வேண்டும். இவ்வளவு காலம் எம் வீட்டு வாசலில் இருந்து எமக்குப் பின்னால் எமக்கு துணையாக புலானாய்வும் வெள்ளை வானுடன் முப்படையும் தொடாந்து வந்து காவலிருந்தார்கள். இனி இன்று முதல் எம் படுக்கையறையிலிருந்து இத்தனை பாதுகாப்பும் கிடைக்கும் இனி எதற்குப் பயம்? யாருக்குப் பயப்பட வேண்டும். மகிந்தா இருக்கப் பயமென்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.