Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு

Featured Replies

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு

 
 
ஜாகீர் கான் | கோப்புப் படம்: ஏபி
ஜாகீர் கான் | கோப்புப் படம்: ஏபி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் இன்று பிற்பகல் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகீர் கானின் ஓய்வு தொடர்பான தகவலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ராஜீவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வசப்படுத்தியவர் ஜாகீர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டிவென்டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.

2000-ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் களம் கண்டவர். கடைசியாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.

கடந்த 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு, பந்துவீச்சுப் பிரிவில் ஜாகீர் கான் பெரும் பங்காற்றியது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/சர்வதேச-கிரிக்கெட்டில்-இருந்து-ஜாகீர்-கான்-ஓய்வு/article7765003.ece

  • தொடங்கியவர்

ஓய்வு பெற்ற ஜாகீர் கானுக்கு சச்சின், தோனி வாழ்த்து

 
 
ஜாகீர் கான், சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்.
ஜாகீர் கான், சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு சச்சின் டெண்டுல்கர், மற்றும் தோனி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விக்கெட்டுகள் அடிப்படையில் கபில்தேவுக்குப் பிறகு 2-வது சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை எடுத்தவர் ஜாகீர். கபில் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார், கடைசி ஒருநாள் போட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக பல்லகிலே மைதானத்தில் ஆடியது.

அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 610 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது செய்தியில், “எனக்குத் தெரிந்த வரையில் அலட்டிக் கொள்ளாத ஒரு பவுலர் ஜாகீர். பேட்ஸ்மென்களின் எண்ணத்தை முன் கூட்டியே உணர்ந்து பல சமயங்களில் அவர்களது சிந்தனையை தனது பந்துவீச்சினால் முறியடிப்பவர் ஜாகீர். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தையும் இவர் சிறப்பாகத் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கிறேன். மிகச்சிறந்த ஓய்வு வாழ்க்கையை ஜாகீர் கொண்டாட வாழ்த்துக்கள்” என்றார்.

ஒருநாள் கேப்டன் தோனி கூறும்போது, “ஒரு அருமையான கிரிக்கெட் வாழ்க்கை ஜாகீருடையது, வெல் டன் ஜாகீர். இந்திய கிரிக்கெட் அணி நீங்கள் இல்லாவிட்டால் சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது. எனக்குத் தெரிந்த அளவில் புத்திகூர்மை மிகுந்த பவுலர். வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. உங்களால் இன்னும் கூட இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த விதத்தில் பங்களிப்பு செய்ய முடியும். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சச்சின் பேஸ்புக்கிலும், தோனி ட்விட்டரிலும் இதனை தெரிவித்தனர்.

 

http://tamil.thehindu.com/sports/ஓய்வு-பெற்ற-ஜாகீர்-கானுக்கு-சச்சின்-தோனி-வாழ்த்து/article7765497.ece?homepage=true

  • தொடங்கியவர்

பொறியியல் பட்டப்படிப்பை விடுத்து பவுலிங்கை தேர்ந்தெடுத்தேன்: ஜாகீர் கான்

ஜாகீர் கான். | படம்: ஏ.பி.
ஜாகீர் கான். | படம்: ஏ.பி.

ஜாகீர் கான் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2003, 2011 உலகக்கோப்பைகளில் பிரமாதமாக வீசி முதன் முறை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதையும், 2-ம் முறை இந்தியா உலகக்கோப்பையை வென்றதும் ஜாகீர் கானின் நினைவுகளை நம்மிடையே ஆழமாக்குவதாகும்.

நியாயமாகப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் எப்படி பிரியாவிடை நிகழ்ச்சியுடன் மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றாரோ அத்தகைய பிரியாவிடைக்கு உரியவரே ஜாகீர் கான். வேகப்பந்து வீச்சு என்பது ஏன் பந்து வீச்சு என்பதே கிரிக்கெட்டில் எப்போதும் இரண்டாம் பட்சம்தான், என்ற சிந்தனைப் போக்கில் கபில்தேவுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜாகீர் கான் திகழ்ந்தார்.

கென்யாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்ட ஜாகீர் கான், ஸ்டீவ் வாஹ் ஸ்டம்பை பெயர்த்ததை மறக்க முடியாது. இன்னும் எத்தனையோ விக்கெட்டுகள். இங்கிலந்து தொடரில் இவரும், ஆர்.பி.சிங்கும் ஸ்விங் பவுலிங் விருந்து அளித்ததை மறக்க முடியுமா?

இந்நிலையில் எப்போதும் தன் முயற்சியில் அயராது செயலாற்றிய ஜாகீர் கான் ஓய்வு அறிவித்து அது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருவர் எடுக்கக் கூடிய மிகக் கடினமான முடிவு ஆட்டத்தை விட்டுப் போகும் முடிவுதான். எப்போதும் இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும், இன்னும் இன்னும் என்றுதான் மனம் அலைபாயும். ஆனால் உடல் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மனதின் இச்சையை மறுப்பதாக உள்ளது.

வரவிருக்கும் கிரிக்கெட் சீசனுக்காக நான் என்னை பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்ட போதுதான் நாளொன்றுக்கு 18 ஓவர்களை வீசக்கூடிய நிலையில் எனது தோள்பட்டை இல்லை என்ற விழிப்புணர்வு திடீரென ஏற்பட்டது. எனவே இந்த நேரமே அந்த நேரம்...

உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் முடிவை எடுத்தேன். ஐபிஎல் 9-ம் அத்தியாயத்துக்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்.

ஷ்ரீராம்பூர் என்ற சிறிய ஊரிலிருந்து சிறுவனாக நான் வளர்ந்து வந்த போது ஒரு கட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பா அல்லது கிரிக்கெட் பவுலிங்கா என்பதை முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்தது. அப்போது என் தந்தை கூறியது எனது நினைவின் மூலையில் இன்னமும் லேசாக இருக்கிறது, “நிறைய பொறியியளார்கள் உள்ளனர், நீ பவுலராகு” என்றார், அப்போது முதல் எனது முடிவுகள் அனைத்தையும் எனது பெற்றோர் ஆதரித்தே வந்தனர்.

எனது ஆரம்ப கால கிரிக்கெட் எனக்கு இனிமையாக நினைவிருக்கிறது. 1996-ம் ஆண்டு நேஷனல் கிரிக்கெட் கிளப் முதல் மும்பை அண்டர்-19 அணிக்கு அழைக்கப்பட்டது நினைவிருக்கிறது. அதன் பிறகு எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் சில மாதங்கள் பயிற்சி பெற்றது, பரோடா அணிக்கு எதிரான எனது அறிமுக போட்டி, அதிலிருந்து மும்பை அணியை தலைமையேற்று நடத்தியது என்று ஒவ்வொரு ஆட்டத்தையும் நான் உற்சாகத்துடன் அணுகினேன். ஒவ்வொரு ஆட்டமும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பாகவே இருந்தது. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரனாக எப்போதும் மேம்பாடடையவே முயன்றேன்.

இந்திய அணிக்காக 2000-ம் ஆண்டு ஆடியதற்கு முன்னதான போட்டிகள் என்று எனக்கு முக்கியமான வாய்ப்புகள் தேடி வந்தது. கடினமான, வேறுபட்ட காலக்கட்டங்களில் என்னை நிறைய பேர் ஆதரவளித்து ஊட்டி வளர்த்தனர். பிறகு இந்திய அணிக்காக பங்களிப்பு செய்தேன், அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

எனது பயிற்சியாளர்கள், கேப்டன்களிடமிருந்து எனக்கு நிபந்தனையற்ற ஆதரவு இருந்ததால், ரிஸ்க் இருக்கும் பல கள வியூக அமைப்புகள், வித்தியாசமான அணுகுமுறை எனக்கு கைகூடியது.

எனது மிக முக்கியமான தருணம் 2011 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. நாங்கள் ஒரு சிறந்த அணியாக விளையாடினோம், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் இடத்தைப் பிடித்த காலக்கட்டத்தில் விளையாடியது நிறைவைத் தருகிறது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்த கணங்கள் எனக்கு திருப்திகரமான காலங்களாகும். வெற்றி பெறுவது என்பது ஒரு போதை. எனவே இந்திய அணிக்காக வெள்ளைச் சீருடையில் பங்கேற்று இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக எழுச்சிபெற்றது எனக்கு மகிழ்ச்சிதரும் கணமாகும்.

எனக்கு முழு ஆதரவளித்த பிசிசிஐ மற்றும் முன்னாள், என் காலத்திய வீரர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஓய்வறையை பகிர்ந்து கொண்ட வீரர்களில் சிலர் எனது நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அவர்களுடன் விளையாடுவது ஒரு மகிழ்ச்சியான விஷயம், ஏனெனில் ஒவ்வொருவரும் வித்தியாசமான பார்வையை கூடுதலாக என்னிடம் ஏற்படுத்தினர்.

என் வாழ்க்கையின் மையமான என் குடும்பம் என்னை பொறுமையுடன் தள்ளியிருந்து அவர்கள் பார்த்துக் கொண்டனர். எனது கனவைத் துரத்த என்னைப் புரிந்து கொண்ட எனது பெற்றோருக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அது போதாது. என்னுடைய அண்ணன் ஜீஷன், அவர்தான், இந்தியாவுக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமல்ல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் செலுத்து’ என்றார்.

என் இளைய சகோதரன் அனீஸ், நிறைய அழுத்தங்களை எனக்காகச் சுமந்தவர். இந்திய அணியின் நலம் விரும்பிகள், லட்சக்கணக்கான ரசிகர்கள் என்னை ஊக்குவித்த வண்ணம் இருந்தனர். நான் எப்போதுமே முயற்சியைக் கைவிடுபவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னை பாராட்டிய மற்றும் ஆக்கபூர்வ விமர்சனங்களை முன்வைத்த ஊடகங்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கை. உண்மையில் கூறவேண்டுமெனில் அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்தது. கிரிக்கெட்தான் நான் இப்போது உருவாகியிருக்கும் தனிமனிதனாக என்னை ஆக்கியது. எனக்கு வாழ்க்கையில் சகலத்தையும் அளித்தது, அளிக்கப்போவதும் கிரிக்கெட்தான். மிகச்சிறந்த நினைவுகளுடன் நான் விடைபெறுகிறேன். அதாவது வாழ்க்கையை விளக்கும் அனுபவங்கள் மற்றும் மகா நட்புகள். நான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தவுடன் என் தாயார் அருமையாக தொகுத்து கொடுத்த வார்த்தைகள்: இட்ஸ் ஓகே. வெரி குட் ஜர்னி ஃபார் அஸ்.

’மீண்டும் ஜாகீர் கான்’ என்ற தலைப்பு மீண்டுமொரு முறை ஒருவேளை எனக்காக எழும், ஏனெனில் இந்த ஆட்டத்துக்கு நான் நிறைய திருப்பி அளிக்கக் கடமைப்பட்டவானக உள்ளேன். இந்த அருமையான நாடு, ஷிரீராம்பூரிலிருந்து ஒரு குழந்தை தனது கனவைத் துரத்த வாய்ப்பளித்தது.

இவ்வாறு ஜாகீர் கான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/பொறியியல்-பட்டப்படிப்பை-விடுத்து-பவுலிங்கை-தேர்ந்தெடுத்தேன்-ஜாகீர்-கான்/article7766367.ece

  • தொடங்கியவர்

தனித்துவமிக்க வீரர்: ஜாகீர் கானுக்கு பிரபலங்கள் புகழாரம்

 
play_2586804f.jpg
 

ஜாகீர்கான் பேட்ஸ்மேன்களின் திட்டத்தை முறியடிக்கும் ஆற்றல் பெற்றவர்: சச்சின்

ஜாகீர்கானின் ஓய்வைத் தொடர்ந்து அவருடைய நெருங்கிய நண்பரான சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு தெரிந்த அமைதியான வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கானும் ஒருவர். பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன்கள் என்ன மாதிரியான ஷாட்டை ஆடப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அதை முறியடிக்கும் ஆற்றல் பெற்றவர். எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்ந்தவர். ஜாகீர்கான் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதிலும் அவர் சிறப்பாக செயல்படுவது உறுதி. எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஜாகீர்கான் என குறிப்பிட்டுள்ளார்.

சாதுர்யமான பவுலர்: தோனி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாழ்த்துகள் ஜாகீர்கான். நாம் 2011-ல் உலகக் கோப்பையை வென்றோம். நீங்கள் இல்லாவிட்டால் அதை வெல்வது கடினமான காரியமாக இருந்திருக்கும். எனக்கு தெரிந்தவரையில் மிக சாதுர்யமான வேகப்பந்து வீச்சாளர் நீங்கள்தான். இப்போதும் இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, இர்பான் பதான், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் காந்த், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உள்ளிட்டோரும் ஜாகீர்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ZAHEER_2587083a.jpg

தனித்துவமிக்க வீரர்: சஷாங்க் மனோகர்

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஜாகீர்கான் இந்திய கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிப்போடு விளை யாடியவர். இந்திய துணைக் கண்டத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருப்பது சவாலான தாகும். எனினும் இந்திய வேகப்பந்து வீச் சுக்கு தலைமை வகித்த அவர் தனித்துவ மிக்க வீரராக திகழ்ந்தார். இந்திய கிரிக் கெட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங் களிப்பு செய்துள்ளார். அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

ரிவர்ஸ் ஸ்விங்கின் அடையாளம்: அனுராக் தாக்கூர்

பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜாகீர்கான் ஓய்வு பெறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய வேகப்பந்து வீச்சு துறையின் தலைவராகத் திகழ்ந்த அவர், இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சின் அடையாளமாக இருந்தார். களத்திலும், களத்துக்கு வெளியிலும் தலைசிறந்த ரோல் மாடலாக இருந்த ஜாகீர்கான், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர். அவருக்கு எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தலைசிறந்த பந்துவீச்சு பயிற்சியாளர் என்பதை ஜாகீர் நிரூபிப்பார்: லட்சுமண்

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண் கூறியிருப்பதாவது:

போட்டியின் தன்மையை துல்லியமாக கணிக்கும் சமகால இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஜாகீர்கானும் ஒருவர். பந்துவீச்சில் அவருக்கு மிகப்பெரிய அறிவு இருப்பதோடு, மிகச்சிறந்த தகவல் பரிமாற்ற திறனும் உள்ளது. தான் ஒரு தலைசிறந்த பந்துவீச்சு பயிற்சியாளர் என்பதை ஜாகீர்கான் நிரூபிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/தனித்துவமிக்க-வீரர்-ஜாகீர்-கானுக்கு-பிரபலங்கள்-புகழாரம்/article7769348.ece

  • தொடங்கியவர்

தகவல்கள் 10- ரிவர்ஸ் ஸ்விங்கில் தெறிக்கவிட்ட ஜாகீர் கான்!

 
 
 
ZAHEER_2587083f.jpg
 

இந்தியாவின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரும், மிகச்சிறந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளருமான ஜாகீர்கான் (37) சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* 2000-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஜாகீர்கான், அடுத்த 10 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

* தன் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சகட்டமாக இந்திய அணி 2011-ல் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.

* கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் ஜாகீர்கான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி.

* 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்லகெலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியே அவருடைய கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.

* 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 14 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஜாகீர்கான் விளையாடினார்.

* ஜாகீர்கான் இதுவரை 92 டெஸ்ட் போட்டி, 200 ஒருநாள் போட்டி, 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 311, ஒருநாள் போட்டியில் 282, டி20 போட்டியில் 17 என மொத்தம் 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

* டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜாகீர்கான், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் கபில்தேவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

* இந்திய வேகப்பந்து வீச்சுக்கு நீண்ட காலமாக தலைமை வகித்த ஜாகீர்கான் 2007-ல் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட தொடராக பார்க்கப்படுகிறது.

* 2011 உலகக் கோப்பை தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியுடன் பகிர்ந்து கொண்டார்.

* தன் ஓய்வு குறித்து 'புதிய தொடக்கம்' என தலைப்பிட்டு ஜாகீர் கான் எழுதியுள்ள அறிக்கையில், "2011-ல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்ததை எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணமாகக் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/தகவல்கள்-10-ரிவர்ஸ்-ஸ்விங்கில்-தெறிக்கவிட்ட-ஜாகீர்-கான்/article7770163.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.