Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புக்குரிய வாசகர்களே.....

Featured Replies

அன்புக்குரிய சங்கதி வாசகர்களே..

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மதிப்பக்குரிய

கோபி அனான்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு

சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய பகுதியில் வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு பொருளாதாரத் தடை மற்றும் போக்குவரத்து பாதைகளை மூடி பட்டினிச் சாவிற்குள் தள்ளியுள்ளது. இவர்களைக் காப்பாற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

ஓகஸ்ட் 11ம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான ஏ9 பாதையை மூடி அங்கு வாழும் ஆறு இலட்சம் தமிழ் மக்களின் உணவு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வேறு எந்த வழியும் அற்ற நிலையில் மக்கள் நாளாந்தம் பெரும் இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.

போக்குவரத்துப் பாதை மூடியதாலும் உணவுப்பொருட்களின் விலை 10 மடங்கு அதிகரித்திருப்பதாலும். சராசரி வருமானத்தில் வாழுகின்ற மக்களின் அன்றாடத்தேவைகள் இதனால் முடக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பட்டினியால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இறந்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் வாழுகின்ற மக்களுக்கான பிரதான போக்குவரத்துப்பாதையை சிறிலங்கா அரசு மூடியதுடன் விமான மற்றும் எறிகணைவீச்சுக்களால் அப்பகுதித் தமிழ் மக்களை படுகொலை செய்வதுடன் அவர்களுக்கான உணவு மருத்துவம் உட்பட அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து தடைவிதித்துவருகின்றது.

நோய்வாய்ப்பட்டு வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல இராணுவம் மறுத்ததால் கற்பிணித்தாய் ஒருவர் மரணமானதும் அண்மையில் நிகழ்ந்தது இங்கு வாழுகின்ற 40,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பட்டினிக்கும் நோய்களுக்கும் முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்கின்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களை (ஐNபுழு) சிறிலங்கா அரசு தடை செய்ததன் காரணமாக மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கூட கிடைக்கப்பெறாத நிலை தோன்றியுள்ளது.

ருN மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களைச் சார்ந்தோர் ஒன்றுசேர்ந்து பட்டினிச்சாவை எதிர்நோக்கி நிற்கும் தமிழ் மக்களை காப்பாற்றுமாறும் இனிவரும் காலங்களில் ஒரு சுமூக நிலையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கு வழிவகுத்து தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

கீழ் குறிப்பிடப்படும் அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்குப்பிரயோகித்து தமிழ் மக்களுக்கு உதவுங்கள்.

போக்குவரத்துக்குரிய பாதைகளைத் திறப்பதற்கு ஆவன செய்தல்.

ஐNபுழு அமைப்புக்கள் உணவு, மருந்து, அத்தியாவசியப்பொருட்களை விநியோக்கவும் மருத்துவக் குழக்களை அனுப்பி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டி சிகிச்சைகளை மேற்க் கொள்ள அனுமதித்தல்.

தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத்தடையை நீக்கி அப்பாவி மக்கள் மீது உணவை ஒரு போராயுதமாக பயன்படுத்தவேண்டாமெனப்பணித்

நல்லதொரு முயற்சி தான். வாசகர்கள் அனைவரும் தவறாது கையொப்பமிடவும்.

நன்றி.

நல்லதொரு முயற்சி தான். வாசகர்கள் அனைவரும் தவறாது கையொப்பமிடவும்.

நன்றி.

Thanks for the info and link. (However I have posted this link on December 1st in the news area, but somebody moved that to another area

This is the link that I posted

http://www.yarl.com/forum3/index.php?showt...online+petition

)

  • தொடங்கியவர்

இந்த கையொப்பங்களும், தமிழ் மக்களின் கருத்துக்களும் நிச்சயமாக ஐ-நா விற்கு எமது அவல நிலையை எடுத்துக்கூறும். அதனால் அனைவரும் தவறாது கையொப்பமிடவும்.

யூகோஸ்லாவியாவுக்கு அடுத்தபடியாக சர்வதேசத்தை ஏமாற்றி மனித உரிமைமீறல்களை செய்துகொண்டிருக்கும் நாடு இலங்கைத்தாய்த்திருநாட்டின் ஆட்சியாளர்கள் தான்.ஆகவே எங்களுடைய கையெழுத்துக்கள் விரைவில் இவர்களை ஐக்கியநாடுகள் சபை மூலம் சர்வதேச நீதிமன்றுக்குகூட எடுத்துசெல்லவாய்ப்பு உன்டு.அனைவரும் சந்தர்பத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

www.petitiononline.com/t forum oo/petition-sign.html

petitions.pm.gov.uk/a9-pathway/ (london citizens only)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.