Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் ஐயா- காலத்தின் கதைவன்னியிலிருந்து முத்தையா சிவலிங்கம்:

Featured Replies

டேவிட்  ஐயா- காலத்தின் கதைவன்னியிலிருந்து முத்தையா சிவலிங்கம்:-

மனிதர்களிடையே மிகமிகச்சிலர்தான் மகா மனிதர்களாக உலகில் மாற்றமடைகிறார்கள். அவர்கள் மனிதகுல வாழ்வுப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கென்றே அயராது உழைப்பவர்கள். பிரபஞ்ச விசையின் செயலூக்கத்   தூண்டுதல் இயங்கு முறைச் சிந்தனைகளை இவர்களுள் எழுப்புகிறது. செயற்கரிய செய்யும் பெரியவர்களாக இவர்கள் மேலெழுகிறார்கள். நேர்போக்குகளுக்கும் முரண்போக்குகளுக்கும் இடையே இவர்களது பணிகள் பயணிப்பதால் தாக்குதல்களுக்கும் மோதல்களுக்கும் விமர்சன விகாரங்களுக்கும் முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் இவர்கள் விதிவிலக்கல்ல.

தேடுதல் தாகமும் விடுதலை வேட்கையும் மேலெழ மேலெழ என்பும் உரியர் பிறர்க்கென்று எலலோருக்குமாக வாழ்கிற இயல்பு அவர்களில் மேலெழுகிறது. எளிமை இடம்பிடிக்கும் போது ஏழ்மையும்  கூடவே சூழ்ந்;துகொள்கிறது. அடக்கு முறைகள் அடாவடித்தனங்கள் உரிமை மறுப்புக்கள் பறிப்புகள் என்பவற்றோடு சுரண்டல்கள் சூழ்ச்சிகள் சூதுகள் யாவும் அவர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி ஆர்த்தெழுந்து போராடவும் வைக்கிறது.

இந்த வகை மனிதராக டேவிட் ஐயா என்று அறிந்தவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட எஸ். ஏ டேவிட் அவர்கள் காலமாகி விடைபெற்றுவிட்டார் என்ற செய்தி அவரது பணிகளையும் அனுபவங்களையும் அறிந்தவர்களுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாகவே இருக்கும். மேலோர்கள் வெஞ் சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்  நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என்று பாரதில் பாவலன் நொந்து காட்டிய காட்சி நினைவுக்கு வரும்.

டேவிட்  ஐயா தீவகக் கிராமங்களில் ஒன்றான ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தின் மண் குடிலுக்குள்ளாலவெளிவந்த மெழுகுதிரி. உருகி உருகி ஒளி கொடுத்த அந்த உயிர்த்திரி இன்று ஒடுங்கிவிட்டது. அப்படி என்ன பெருமை அவருக்கு என்று அறியாதவர்கள் கேட்கலாம். அவர் ஒரு சிந்தனாவாதி செயல்வீரர். கடையனும் கடைத்தேற வேண்டும் என்ற கருத்து வீச்சோடு களமிறங்கி செயற்பட்ட கர்மவீரர். தமக்கென தம் குடும்பம் பிள்ளைகளுக்கென வாழாத தர்மவான்.

புகழ் வாய்ந்த கட்டிடக் கலைஞராக நகரத்திட்டமிடலாளராக இலங்கை இங்கிலாந்து ஆபிரிக்கா போன்ற நாடுகளிலெல்லாம் உச்சநிலைப்பதவிகளில் பணியாற்றியவர். கிறிஸ்துவ மற்றும் காந்திய சிந்தனைகள் தாக்கம் செலுத்திய கலப்புச்சிந்தனையாளராகவே அவர் இருந்திருக்கிறார். இறுதி நாட்களில் இந்தியாவில் இராமசாமிப்பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளிலும் அவரின் பார்வை பட்டிருக்கிறது.

எளிமையான கூட்டுமுறை வாழ்க்கைக்கூடாக ஏழ்மைப்பிடியிலிருந்து மக்களை விடுவிக்க முடியும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. ஆபிரிக்காவில் பணியாற்றியபோது அங்குள்ள மக்கள் தமது பிரச்சினைகளை தொடராமல் கூடித்தீரமானிக்கும் கூட்டுத்தீர்மானமும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிவாழும் கூட்டுறவுப்பொறிமுறையும் சமூக விடுதலைச்சிந்தனைகளை அவரில் ஏற்படுத்தியதோடு இஸ்ரவேல் நாட்டில் இருந்த கூட்டுறவுப்பண்ணை முறை-கிபுட்ஸ்-அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. இலங்கைக் கிராம பொருளாதார அதுவும் குறிப்பாக தமிழர் பிரதேச கிராம மேம்பாட்டுக்கு இத்திட்டம் பெரிதும் உதவலாம் என்றும் கருத்;துக்கொண்டிருந்தார்.

வவுனியாவை மையமாக கொண்டு வன்னியில் இதைச் செயற்படுத்த ஆட்களைக் கலந்து பேசியபோது வவுனியாவை தளங்கொண்டு இயங்கிய தலையீடுகளால் இத்திட்டம் “காந்தியம்”என்று மாற்றப்பட்டு நிலைபெற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது. வெற்றி பெற வில்லை என்றே கூறிவிடலாம்.


அவரது நேர்மையானதும் செயற்திறன் உள்ளதுமான எண்ணங்களை முழுமைப்படுத்த முடியாதுபோனாலும் பரீட்சாத்தமாகவேனும் பிரயோகிக்க கூடிய  பொருத்தமான களமும் நம்பகமான சகபாடிகளும் கிடைத்திருக்க வில்லை என்பது கவலைக்குரியதாகும். ஆயுதங்களும் ஆதிக்க எண்ணங்களும் பாராளுமன்ற கதிரை ஆசை உள்ளவர்களின் கூட்டும் அவரது எண்ணங்களை குழப்பி விட்டிருந்ததும் கூறப்பட வேண்டியதாகும்.


காந்தியம் என்கின்ற செயல் முறையானது கத்தியில் நடப்பது போன்ற சங்கதி. அதை கையில் எடுப்பவர்கள் அனைத்து விடயங்களிலும் அதி கவனமாக இருக்க வேண்டும்.


அரசியல் எண்ணம் கொண்டவர்களும் ஆயுத சிந்தனையாளர்களும் அதை ஒரு பாதுகாப்புப் பெயர்பலகையாக பயன்படுத்தினால் அது தற்சீரழிவுக்கே வழிவகுக்கும் என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டியதாகும்.


டேவிட் ஐயாவுக்கும் அவரது விடுதலை எண்ணங்களுக்கும் பொருத்தமான தளம் கிடைத்திருக்குமானால் நடப்பியல் சார்ந்த சாத்தியப்பாடான சிந்தனைகளுக்கூடாக தற்திருப்தியும் தன்னிறைவுமுள்ள கிராமங்களையும் தேசத்தையும் தரிசித்திருக்க முடிந்திருக்கும்.


எது எவ்வாறு இருந்த போதும் டேவிட் ஐயாவின் “ஒரு ஏக்கர் பண்ணை முறைத்திட்டம்” பரீட்சாத்தமாகவேனும் பார்கப்பட்டால் பயனுள்ளதாக அமையலாம். தழிழர் பிரதேச வாழ்வியல் முறைகள் சிதைக்கப்பட்டு சின்னாப்பின்னப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பண்ணை முறைத்திட்டம் நம்பிக்கை ஊக்கியாக பங்களிக்க முடியும்.


எல்லா சரிபிழைக்கும் அப்பால் டேவிட் ஐயா என்கின்ற பெரியவர் சமூக அக்கறையும் சத்திய நம்பிக்கையும் உள்ளவராக எல்லா அவலங்களோடும் மல்லாடி வாழ்ந்திருக்கிறார் என்பது சொல்லில் அடங்காத விடயமாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124995/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.