Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லங்காதீபவின் புலநாய்வுத்தகவல்கள்

Featured Replies

அன்ரன் பாலசிங்கத்தின் முன்னாள் பெயர் எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ்

இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43 வருடங்களுக்கு முன் ஸ்ரீ லங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றியமைத்துக் கொண்டு புலிகள் இயக்கத்தின் நியாயவாதியாக எவ்வாறு மாறினார் என்பது பற்றி எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

முன்னர் இவ்வாறு எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் என அழைக்கப்பட்ட இவரிடமுள்ள நல்ல ஆங்கில அறிவும், ஆங்கிலத்தில் சிறந்த முறையில் கருத்துப் பரிமாறல்களைச் செய்யும் திறமையும் காரணமாகவே இவருக்கு புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பதவி கிடைத்தது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கில அறிவு கிடையாது. இந்த நிலையில் தான் இந்த ஸ்ரனிஸ்லொஸ் எனப்படும் நபரை யாரோ பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு வன்னிக் காட்டுக்குள் வசிக்கும் பிரபாகரனுக்கு இங்கிலாந்தில் வசித்து வந்த ஸ்ரனிஸ்லொஸ் எனப்படும் இந்த நபரை பிரபாகரனுடன் தொடர்புடைய யாரோ இடைத் தரகர்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்பதை எவரும் இலகுவில் ஊகிக்க முடியும்.

பிரித்தானிய தூதரகம் கொள்ளுப்பிட்டிக்கு 1963 ஆம் ஆண்டில் மாற்றப்பட்ட பின்னரே எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் என்னும் பெயரில் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பாளராக இந்த அன்ரன் பாலசிங்கம் நியமிக்கப்பட்டார். இவர் வீரகேசரி செய்திப் பத்திரிகையின் செயலகத்திலிருந்து தான் இவ்வாறு பிரிட்டிஷ் தூதரக சேவையில் சேர்ந்துள்ளார். பின்னர் 1972 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிப்பதற்காக சென்றார். இதன் பின்னர் இவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டது பற்றி விபரங்கள் இவருக்கும் பிரபாகரனுக்கும் மட்டும் தான் தெரியும்.

அன்ரன் பாலசிங்கத்துடன் முன்னர் பிரித்தானிய தூதரகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவரான மர்வின் சேனாரத்ன லங்காதீப சார்பில் தெரிவித்துள்ள விபரங்களிலிருந்து மேற்படி குறிப்புகள் எடுக்கப்பட்டன.

-லங்காதீப: 03.12.2006-

கருணாநிதி மகளின் உண்ணாவிரதத்தின் போது கடத்தப்பட்ட வெடிபொருட்கள்

தமிழ்நாடு தலைநகர் சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டம் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் மகள் ஷ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அந்த உண்ணாவிரத நிகழ்வின்போது ஒரு இனத்தின் விடுதலைக்காக அரசியற் கட்சிகள் மட்டும்தான் போராடவேண்டும் என்று நினைக்கவேண்டாம். இலக்கியவாதிகளின் பரந்த சேவையையும் அதற்காகச் செய்யப்படவேண்டும். நீண்டகாலமாக இலங்கையில் தமிழ் மக்கள் இன்னலுக்குள்ளாகி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாம் ஒன்றுசேர்ந்து எமது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதியின் மகள் அறிவித்திருந்தார்.

இவ்வாறு அவர் பிரபாகரனுக்காக உண்ணாவிரதம் இருந்த வேளையில் மதுரைப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு வாகன விபத்து மூலம் மிகவும் முக்கியமான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விபத்தின் மூலம் தமிழ் நாட்டிலிருந்து ஷ்ரீலங்காவுக்கு வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

மதுரை நகரிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மானாமதுரை பிரதேசத்தில் கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை இரவு லொறி ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்தே மேற்படி வெடிபொருட்கள் ஷ்ரீலங்காவுக்குக் கடத்தப்பட்ட தகவலை மதுரைப் பொலிஸ் தரப்பினர் அறிந்துகொண்டனர். குறித்த லொறி பிரேக் தொழிற்படாத காரணத்தாலேயே அது விபத்துக்குள்ளாகியிருந்தது. மதுரைப் பொலிஸ் தரப்பினர் அந்த லொறியைச் சோதனையிட்டபோது அதற்குள் சுமார் 1,500 கிலோகிராம் நிறையான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர். தடித்த பொலித்தீன் பைகளுக்குள் இடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பெருந்தொகையான வெடிபொருட்கள் பற்றிய விசாரணையை மதுரைப் பொலிஸார் மேற்கொண்டபொழுதே அவை ஷ்ரீலங்காவுக்காக கடத்திச் செல்லப்படுவதற்காக அவ்வாறு லொறியில் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது. தொடர்ந்து அந்த லொறியின் சாரதியாகிய விஜயகுமார் என்பவரை மதுரைப் பொலிஸ் தரப்பு கைது செய்தது. ஆயினும் மொஹிதீன் எனப்படும் லொறிச் சாரதியின் உதவியாளர் லொறி விபத்துக்குள்ளான பின்னர் தப்பியோடிவிட்டார்.

இவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து மன்னார் கல்பிட்டி கடல் மார்க்கமாக புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பலதடவைகள் கடத்தி வந்ததை சிறிலங்கா கடற்படையினரும் முன்னர் உறுதிசெய்திருந்தனர்.

-லங்காதீப விமர்சனம்: 03.12.2006-

thinakkural_logo.gif

Edited by ஈழவன்85

இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் :P லங்காதீப :P என்பது.

One Hundred Tamils of the 20th/21st Centuries link =>>>

One Hundred Tamils of the 20th/21st Centuries: Anton S.Balasingham

இவங்களுக்கு வேறவேலை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.