Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸின் கோரிக்கையை நிராகரித்தார் பாலு

Featured Replies

டக்ளஸின் கோரிக்கையை நிராகரித்தார் பாலு

இலங்கைக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்காக இந்திய கப்பல்களை வழங்க வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிராகரித்து விட்டார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்று, மத்திய அரசு இலங்கைக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் யார் மூலம் அனுப்புவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இலங்கை அரசிடம் வழங்கினால் அந்நாட்டு இராணுவத்திடம் தான் வழங்கியாக வேண்டும். அந்த இராணுவம் தான் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எனவே, உணவுப் பொருட்களை இலங்கை அரசிடம் வழங்குவதற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்புக் காட்டுகின்றன.

இந்நிலையில் இந்திய தரப்பில் அனுப்பப்படும் உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு கப்பல்கள் தேவைப்படுவதால் அது குறித்து பேசுவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலுவை கடந்தவாரம் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசினார். கப்பல் போக்குவரத்து அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவுக்கான இலங்கை தூதரும் உடனிருந்தார்.

அப்போது அமைச்சர் பாலுவிடம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் அளிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியா அனுப்பும் உணவுப் பொருட்களை இலங்கையின் வட பகுதிக்கு கொண்டு செல்வதற்கு கப்பல்கள் தேவைப்படுகிறது. எனவே, இந்திய கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பெரிய கப்பல்களை அளிக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

இதற்கு அமைச்சர் பாலு, இந்திய கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமாக பெரிய அளவு கொண்ட கப்பல்கள் (பார்ஜஸ்) ஏதும் இல்லை. இது ஒரு புறமிருந்தாலும் உணவுப் பொருட்களை கப்பல்கள் மூலம் உங்களிடம் அளித்தால், அது நிச்சயம் இராணுவத்தின் கைகளுக்கு போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேரும் என்பதில் நிச்சயமில்லை. தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் தான் தாக்குதல் நடத்துகிறது. அந்த இராணுவத்திடம் இந்திய உணவுப் பொருட்கள் போய்ச் சேர்ந்தால் அது தமிழகத்தில் பெரிய எதிர்ப்பை உண்டாக்கும். தமிழக மக்கள் எவரும் இதை விரும்பமாட்டார்கள். ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.

உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் போய்ச் சேர வேண்டுமென விரும்பினால், அது குறித்து இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுங்கள். அவர்கள் இருவரும் அளிக்கும் பதிலை வைத்து மேற்கொண்டு ஆவன செய்வது குறித்து பரிசீலிக்கலாம். இந்திய தரப்பில் அளிக்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் புகழ் வாய்ந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தான் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு போய்ச் சேரும். இந்தியா அளிக்கும் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தானே தவிர, மற்றவர்களுக்குக் கிடையாது. எனவே, தாங்கள் கேட்பது போல கப்பல்கள் ஏதும் அளிக்கும் நிலையில் நான் இல்லை என உறுதிபட கூறிவிட்டது. http://www.thinakkural.com/news/2006/12/7/...s_page16886.htm

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.