Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

டெரர் அழகிகள்!

 

p128.jpg

 

டிகைகளை எப்போதும் தேவதைகள் என்று டைம்பாஸில் வர்ணிப்போம். சில சமயங்களில் அந்தத் தேவதைகள் பொங்கி எழுந்து ‘பியூட்டிஃபுல்’ ரௌடிகளாகவே மாறிவிடுவார்கள். அவர்களில் சிலர்...

p128a.jpg

மல்லிகா ஷெராவத்: தேசியக்கொடியை அரைகுறை ஆடையாகப் போர்த்திக்கொண்டு நடித்தது, திருமண வாழ்க்கை குறித்த அளவுக்கதிகமான சஸ்பென்ஸ் வைத்துக் குழப்புவது என எப்போதும் சர்ச்சை நாயகி. ‘மர்டர்’ படத்தில் ஆரம்பித்து ஜாக்கிசானோடு நடித்து கலக்கியது என மீடியா அட்டென்ஷனில் இருக்கும் மல்லிகா, பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாகக் கொண்டாடப்படுபவர் என்பது நமக்குத் தெரியும். தெரியாத விஷயம், திருமண வாழ்க்கைக் குறித்து யாரேனும் கேட்டால் கோபமாகக் கன்னாபின்னாவெனத் திட்டி விடுவாராம். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் சொல்லி கிலி உண்டு பண்ணி இருக்கிறார். ‘பெண்களின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஆண்களை நான் வெறுக்கிறேன். சமயங்களில் மன அழுத்தத்தில் யாரையேனும் கை நீட்டி விடுவதும் உண்டு’ என்று சொல்லி இருக்கிறார். இனி மல்லிகாவைப் பத்தி பேசுவீங்க?

p128b.jpg

மைத்திரிய கௌடா: கன்னட சினிமாவின் இளம் வளர்ந்து வரும் நடிகை. சில வருடங்களுக்கு முன் பெங்களூருவின் பிஸியான சாலை ஒன்றில் வேகமாக காரில் தன் சகோதரி சுப்ரியா மற்றும் உறவுக்காரப் பெண்களுடன் சென்றிருக்கிறார். அவரை மடக்கிப்பிடித்த ஷிவக்குமார் என்ற போலீஸ் ஏட்டுவிடம் காரசாரமாய் சண்டை போட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த வண்டியில் இருந்த நான்கு பெண்களுமாய் சேர்ந்து அந்த போலீஸ்காரரை இறங்கி வந்து மொத்தி இருக்கிறார்கள். காயம்பட்ட ஷிவக்குமார், நடிகையின் சமரச முயற்சிக்கு கடைசிவரை ஒத்துழைக்கவில்லை. கோர்ட் படி ஏறி தற்போது தனக்கு சாதகமாகத் தீர்ப்பு வாங்கி உள்ளார். ஆம். மைத்திரிய கெளடாவுக்கு 3,000 ரூபாய் அபராதமும், மற்ற பெண்களுக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதித்திருப்பதோடு மைத்திரியாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்திருக்கிறது. பெயில் வாங்கி வெளியில் வந்து மேல் முறையீடு செய்திருந்தாலும் நடிகைக்கு எல்லா நீதிமன்றத்திலும் தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டேன் என சூளுரைத்திருக்கிறார் ஷிவக்குமார். பாவம் மைத்து!

p128c.jpg

ரோஸ்லின் கான்: மாடலும் நடிகையுமான ரோஸ்லினுக்கு பின்புறத்தைக் காட்டிக்கொண்டு போஸ் கொடுப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல. நிறைய டி.வி விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ரோஸ்லின் தான் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய சினிமாவான ‘சவீதா பாபி’ என்ற படத்தில் கில்மா ஆன்ட்டி ரோலில் நடித்துக் கலக்கிக்கொண்டிருக்கிறார். மார்பகப் புற்று நோய் விழிப்பு உணர்வுக்காகவும்,ஐ.பி.எல்-லுக்காகவும் அரைகுறை ஆடைகளில் ஆடி, மீடியா கவனத்தைக் கவர்ந்தவர் அண்மையில் பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பின்னழகைக் கிண்டல் பண்ணியதால் விழுந்த அடியாம் அது. ‘கேமராவுக்கு முன்னாடிதான் நான் உடலைக் காட்டுவேன். மற்றபடி என் உடலை யாரேனும் கேலி செய்தாலோ, ஆபாசமாக வர்ணித்தாலோ உதை விழும்’ என்று ஸ்டேட்மென்ட் விடுத்திருக்கிறார். ஆத்தீ!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று.....

மே - 24

 

731valaralru.jpg1738 : மெத­டிஸ்த இயக்கம் ஜோன் வெஸ்­லியால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1798 : அயர்­லாந்தில் பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்­புக்­கெ­தி­ராக ஐரிஷ் எழுச்சி ஆரம்­ப­மா­யிற்று.

 

1844 : முத­லா­வது மின்­னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்­ப­வரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரி­லாந்­துக்கு அனுப்­பப்­பட்­டது. 

 

1883 : நியூயோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்­பட்­டது.

 

1901 : தெற்கு வேல்ஸில் இடம்­பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்­லாண்டிக் பெருங்­க­டலில் "பிஸ்மார்க்" என்ற ஜெர்மன் போர்க்­கப்பல் "ஹுட்" என்ற பிரித்­தா­னியக் கப்­பலைத் தாக்கி மூழ்­க­டித்­தது.

 

1956 : சுவிட்­ஸர்­லாந்தில் முத­லா­வது யூரோ­விஷன் பாடல் போட்டி இடம்­பெற்­றது.

 

1962 : அமெ­ரிக்க விண்­வெளி வீரர் ஸ்கொட் கார்ப்­பென்டர் அவ்­ரோரா 7 விண் கலத்தில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.

 

1976 : லண்டன், வோஷிங்டன் டி.சி. நக­ரங்­க­ளுக்­கி­டையில் கொன்கோர்ட் விமான சேவை ஆரம்­ப­மா­கி­யது.

 

1991 : எத்­தி­யோப்­பி­யாவில் இருந்து யூதர்­களை இஸ்­ரே­லுக்குக் கொண்டு வரும் “சொலமன்” நட­வ­டிக்­கையை இஸ்ரேல் ஆரம்­பித்­தது.

 

1993 : எதி­யோப்­பி­யா­விடம் இருந்து எரித்­தி­ரியா சுதந்­திரம் பெற்­றது.

 

1994 : 1993 ஆம் ஆண்டில் நியூயோர்க் உலக வர்த்­தக நிலைய கட்­டடத்தில் குண்­டுத்­ தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட நால்­வ­ருக்கு தலா 240 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

1999 : நெதர்­லாந்தின் ஹேக் நக­ரி­லுள்ள  சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் யூகோஸ்­லா­விய முன்னாள் ஜனா­தி­பதி சொல­போடன் மிலோ­சோவிக் மற்றும் நால்வர் மீது போர்க் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

 

2000 : 22 வருட முற்­று­கைக்குப் பின்னர் இஸ்­ரே­லியப் படை­யினர் லெப­னானில் இருந்து வெளி­யே­றினர்.

 

2000 : கொழும்பில் நோர்வே தூத­ரகம் மீது குண்டு வீசப்­பட்­டது.

 

2001 : எவரெஸ்ட் சிக­ரத்தை 16 வய­தான டெம்பா ஷேரி எட்­டினார். அச்­சி­க­ரத்தின் உச்­சியை எட்­டிய வயதில் குறைந்­தவர் இவரே.

 

2002 : ரஷ்­யாவும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் மொஸ்கோ உடன்­பாட்டை எட்­டின.

 

2007 : யாழ்ப்­பா­ணத்தின் நெடுந்­தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியழித்தனர்.

 

2014 : துருக்கி, கிறீஸ் நாடுகளுக்கிடையிலான ஏஜியன் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 324 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12 வயதுக்குள் 3 பட்டங்கள்... 18 வயதிலேயே டாக்டராக விருப்பம்!

5.jpg

லாஸ் ஏஞ்சல்ஸ்: 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனைபடைத்துள்ள சிறுவன், தனது 18 வயதில் டாக்டராக விருப்பம் தெரிவித்து உள்ளார்.

பிறப்பிலேயே அசாத்திய திறமைகளை பெற்று ஒருசிலர் அதிபுத்திசாலியாக விளங்குவர். அந்த வரிசையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தனிஷ்க் ஆபிரகாம் என்ற 12 வயது சிறுவனு இடம் பிடித்துள்ளார். 12 வயதில் பல பட்டப் படிப்புகளை முடித்துள்ள தனிஷ்க் ஆபிரகாம், 18 வயதில் மருத்துவர் ஆவதே எனது லட்சியம் என்கிறார். பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் என்ற சிறுவனின் பெற்றோர், கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே செல்டில் ஆனவர்கள்.

தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருந்த போதே, மிகுந்த அறிவு மற்றும் திறமையுடன் இருந்ததால் அவரது பெற்றோர், அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே அவரை சேர்த்து விட்டனர். ஆபிரகாமுக்கு 7 வயது முடிவடைவதற்குள், வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர். இதனால் அவர், 2014-ம் ஆண்டு அதாவது, தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப் பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டார்.

தனிஷ்க் தனது 7 வயதிலே கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கினார். ஆம்பிரகாமின் வயது காரணமாக பேராசிரியர்கள், வகுப்பில் சேர்க்கவில்லை. கால்நடை மருத்துவரான அவனது அம்மாவுடன் வகுப்புக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். மேலும் வகுப்பில் பல்வேறு வகையான வித்தியாசமான கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார் என்று ஆபிரகாமின் பேராசியர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன்பின், ரிவர் கல்லூரியில் பொது அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில், 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.

தற்போது தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளார். அவருக்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் மற்றும் சாந்தா குரூஸ் கிளைகளில் சேர்ந்து படிக்க அழைப்பு வந்துள்ளது. எதில் சேர்ந்து படிப்பது என்று இன்னும் தனிஷ்க் முடிவு செய்யவில்லையாம். இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தனிஷ்க், ''என்னுடைய 18-வது வயதில் நான் எம்.டி. (மருத்துவம்) படிப்பை நிறைவு செய்து டாக்டராவேன் என நினைக்கிறேன்.

நானும் சாதாரண குழந்தைகளை போலத்தான் வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவேன். ஆனால், எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவேன். நான் சிறுவன் என்பதால், கல்லூரியில் நிறைய பேராசிரியர்கள் என்னை தங்கள் வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக விரும்புகிறேன்" என்று கூறி உள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்
கட்டில் ஓட்டப் போட்டி
 

கனடாவில் கடந்த வாரம் நடைபெற்ற கிளவர்டோல் பெட் ரேஸ் எனும் கட்டில் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய சிலரை படங்களில் காணலாம்.

 

16818bed3.jpg

 

வருடாந்தம் நடைபெறும் கிளவர்டோல் களியாட்ட விழாவின் ஒரு பகுதியாக 1977 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த பெட் ரேஸ் போட்டி நடத்தப்படுகிறது.


16818bed2.jpg

 

16818bed1.jpg

 

ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்புப் பிரிவுகளில் இப் போட்டிகள் நடைபெற்றதுடன், பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

73 வயதில் பட்டம்... கோவையை கலக்கும் விவசாய வாத்தியார்!

Tnau45thfoundationday2312.jpg
ல்வி கற்க வயது தடையில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக திகழ்கிறார்  கோவையை சேர்ந்த சுவாமி அன்பு சுந்தரானந்தம் என்ற 73 வயது முதியவர். 

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஃப்.டெக் ( B.F.Tech - Bachelor of Farm Technologyஎனப்படும் பண்ணைத்தொழில் நுட்பவியல் படிப்பில் சேர்ந்து  மூன்று ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அவர்தான் சுவாமி அன்பு சுந்தரானந்தர்.

காவியுடை,வெண்தாடி, வெள்ளந்தி சிரிப்புடன் எந்நேரமும் காட்சி அளிக்கும் இவர், ஒரு மிதி வண்டி பிரியர். கடந்த 60 வருடங்களாக நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 20 கீ.மீ. தூரம் மிதிவண்டியில் பயணிக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்வை தொடங்கிய இவர்,  கடந்த 30 வருடங்களாக இயற்கை வாழ்வியல் பயிற்றுநராகவும் விளங்கி வருகிறார்.இவர் சாணிச்சாமியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

sundaranandan.jpgஅது என்ன சாணிச்சாமியார்?

நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ அவரே பதில் சொல்கிறார்...

'' என்னோட பேரு சுந்தரம். சொந்த ஊரு கோயம்புத்தூர் மாநகரை ஒட்டியுள்ள கீரணத்தம் கிராமம். சின்ன வயசுல படிக்க வசதியில்ல. அதனால 15 வயசுல மில்லுவேலைக்கு போயிட்டேன். தினந்தோறும் வீட்ல இருந்து மில்லுக்கு சைக்கிளில்தான் போய்வருவேன்.  15 வயசுல எடுத்த சைக்கிள இந்த 73 வயசிலயும் இன்னும் கைவிடல .

ஒரு கட்டத்துல மில்லு வேலைய விட்டுட்டேன். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டுச்சு. ஊர் ஊரா சுத்தினேன். அப்ப..திருநெல்வேலி பக்கம் இருக்கிற  சிவசைலம் என்கிற இடத்துல  இருக்கும்  இயற்கை நல்வாழ்வு மையத்தின் தொடர்பு கிடைச்சுது. அங்கு சில மாதங்கள் தங்கி இருந்ததில்  இயற்கை உணவு, சேற்றுக்குளியல், வாழையிலை வைத்தியம் போன்ற பல விஷயங்களை அனுபவிச்சு கத்துக்கிட்டேன்.

அங்கு கற்றுக் கொண்டதை  ஊர் ஊரா  போய் முகாம் நடத்தி,  மக்களுக்கு சொல்லிக்கொடுப்பதை முழுநேரமா செஞ்சு வர்றேன்.

பசு மாட்டு சாணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி  நிறைய இருக்கிறது  எல்லோருக்கும் தெரிஞ்ச தகவல்தான். அதை வீடு மெழுக மட்டுமே பயன்படுத்துறோம். ஆனா, நான் அதுக்கு ஒரு படி மேல போயி, கடந்த  20 வருஷமா  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சாணிப்பால் பூசித்தான் தினந்தோறும் என்னோட குளியலை நடத்துறேன். சோப்பு,ஷாம்பு எதையும் பயன்படுத்தும் வழக்கமில்லை." என்ற அன்பு சுந்தரானந்தம், இந்த 73 வயசிலும் படிச்சு பட்டம் வாங்கிய விஷயத்துக்கு தாவினார்.

" சின்ன வயசுல படிச்சு பட்டம் வாங்க முடியலைங்கிற  இருந்த என்னோட ஏக்கம்...பசுமை விகடன் மூலமா நிறைவேறுச்சு.

பசுமை விகடனை முதல் இதழில் இருந்து தொடர்ந்து வாசிக்கிறேன். அதுல வெளியான ஒரு செய்தி  என்னை ரொம்ப சந்தோஷப்படவெச்சுது.  கோயம்புத்தூர்ல இருக்கிற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,  பி.எஃப்.டெக் என்கிற பண்ணைத்தொழில்நுட்ப படிப்பை அறிமுகம் செஞ்சிருக்கிறதாகவும்,  அந்த படிப்புக்கு  வயது வரம்பும்கிடையாது,  ஒன்பதாம் வகுப்பு முடிச்சிருக்கணும்ங்கிறதுதான் ஒரே தகுதின்னும் வெளியான தகவல் கண்ணில் பட்டதும். உடனே பல்கலைக்கழகம் போய் முறைப்படி  சேர்ந்து,  விடுமுறை எடுக்காமல்  வகுப்பு இருக்கும் நாள் எல்லாம்  போய் அக்கறையோடு படிச்சேன். மூணு வருஷம் படிச்சதில் அரியர்ஸ் இல்லாமல் பாஸ் பண்ணி  விவசாய பட்டதாரினு பட்டம் வாங்கினேன்.

இனி மேல் படிக்கவே வாய்ப்பில்லை. அதுக்கான வயதுவரம்பு  பல வருடம் கடந்து விட்டது என்று காலாவதியான என்னோட கல்விக்கனவு  73 வயதில் நிறைவேறியது. கற்க வயசு ஒரு தடை இல்லைங்கிறதுக்கு சாட்சியாகிப்போனது.

மேலும், படிச்சு பட்டம் வாங்கியாச்சு நம்ம கனவு நிறைவேறிடுச்சு. பேருக்கு பின்னால பந்தாவா   பட்டத்தை போட்டுக்கலாம் என்பதோடு நான் சோம்பி விடவில்லை.

நான் படிச்ச விவசாய அறிவை பயன்படுத்தி,  விவசாயிகளுக்கு  பல தொழில்நுட்பங்களை சொல்லிக்கொடுக்கிற விவசாய வாத்தியாரா இருக்கேன். அது மனசுக்கு நிறைவா இருக்கு'' என்றபடி மிதிவண்டியில் ஏறினார்   'அக்ரி' சுந்தரானந்தர்.

VC--MurugeshBoopathy1.jpgமற்ற பல்கலைக்கழகங்களில்  தொலைதூரக்கல்வி இருப்பது  எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்  ஆனால், கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  பி.எஃப்.டெக். பாடத்திட்டத்தை துவக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது...? என்கிற கேள்வியை அப்போதைய துணைவேந்தர்  முருகேச பூபதியிடம் கேட்டோம்.

அவர், " நான் தமிழ்நாடு துணைவேந்தராக பணியில் இருந்த பொழுது இஸ்ரேல் நாட்டுக்கு   விவசாய கல்வி சுற்றுலா போயிருந்தேன்.
மண் வளமே இல்லாத அந்த நாட்டில்  அற்புதமாக விவசாயம் நடந்து வந்ததை பார்த்து வியந்தேன்.

அங்கு நடந்த மண்ணியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.  அதில் பேசிய மண்ணியல் விஞ்ஞானி ஒருவர்தான்  மண்ணியல் சம்பந்தமான  பல புதிய விஷயங்களை பேசினார்.
கருத்தரங்கு முடிந்ததும் அவரை சந்தித்துப் பேசினேன். அதில் விவசாயத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அல்ல என்பதையும்  அவர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதையும்  தெரிந்து  வியந்தேன். பள்ளிப்படிப்பை மட்டுமே படித்த அவரது விவசாயக் கல்வி  அறிவு,  அனுபவத்தால் கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டேன். அது எனக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

நமது நாட்டில் பல  விவசாயிகள் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால்,  தெளிந்த நல்ல விவசாய அறிவுடன் திகழ்கிறார்கள். அவர்களை மேலும் மெருகேற்றி,  பல புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தால் பல முன்னோடி விவசாயிகளை  விஞ்ஞானிகளாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டதன் விளைவுதான்  பண்ணைத்தொழில் நுட்ப படிப்பை துவக்கினோம்.  முதல் பேட்சில் 150 பேர் விவசாய பட்டத்தை வாங்கி விட்டார்கள். அதில் அன்பு சுந்தரானந்தரும் ஒருவர்.

நான் பணி ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு அடுத்து துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள முனைவர் ராமசாமியும் இந்த கல்வி முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க ஆர்வமுடன் செயல்படுகிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

'நான் தவறு செய்து விட்டேன்...'
 

article_1464061377-wpid-20140710-associa'நான் தவறு செய்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்' எனப் பலரும் சொல்வது, ஒரு நாகரிகமான செயல் எனப் பலரும் கருதுகிறார்களே ஒழிய, செய்த தவறுகளை மனதளவில் ஒப்புக் கொள்கிறார்களா என்பது சந்தேகத்துக்குரியதேயாகும்.

நல்ல பொறுப்புள்ள, நாகரிகம் தெரிந்தவன், செய்த தவறுகளை முழுமையாக உணர்ந்தால், மறுபடி அதே தவறுகளைச் செய்ய மனசாட்சி இடம்தராது.

பொய்களைப் புனைபவர்கள் அதனை 'நாகரிகம்' எனும் முகமூடியூடாகச் செய்து வருகின்றனர். 

'மனுஷன், பார்க்க நல்லவன் போல் பேசுறான்' என நாம் எல்லோரையும் நம்பிவிடுவமுதுண்டு.

இதயத்துக்கும் வாய்க்கும் எந்த சம்பந்தமுமின்றி உரையாடுபவனுக்கு எத்தன் என்கின்ற நாமமே பொருந்தும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p871.jpg

கி(லி)ளி ஜோசியம்

“காலம் கூடிவரும். ஜெயித்தால் மந்திரி பதவி தேடிவரும். இல்லையேல்…” என்று ஜோசியக்காரர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூண்டுக்குள் சென்றது கிளி.

- அஜித்


p872.jpg

குமுறல்

அதான் ``ஆங்ரி பேர்டு, டெம்பிள் ரன்னு ஏகப்பட்ட கேம்ஸ் வந்துடுச்சே... இன்னும் ஏன்டா தெருவுல கிரிக்கெட் விளையாடி கண்ணாடியை உடைக்கிறீங்க?'' என்று புலம்பினார் வீட்டின் உரிமையாளர்!

- செ.விமல் குமார்


p873.jpg

தேவை!

`வேலைக்கு ஆட்கள் தேவை' என்ற போர்டை மாட்டி பத்து நாட்கள் ஆகியும் யாரும் வராததால், அதையே இந்தியில் எழுதி மாட்டினார் ஹோட்டல் முதலாளி தமிழ்வாணன்.

- கோபிநாதன்.


p874.jpg

வணக்கம்

இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் உட்கார்ந்தபடி வணக்கம் வைத்தான் கைதி. அவனை ஜாமீனில் எடுக்கவந்த அரசியல்வாதிக்கு எழுந்து வணக்கம் வைத்தார் இன்ஸ்பெக்டர்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்


p875.jpg

கேள்வி

பிளாட்பாரத்தில் வசிக்கும்  செல்வி, தேர்தல் அறிக்கையைப் படித்துவிட்டு தன் அம்மாவிடம் கேட்டாள், “செல்போன் கொடுத்தா நாம எப்படிம்மா சார்ஜ் போடுறது?”

- தங்க நாகேந்திரன்


p876.jpg

ஸீட்

``உங்க பையனுக்கு ஸீட் வேணும்னா அஞ்சு கிலோமீட்டருக்குள்ள வீடு இருக்கணும். ரெண்டு கிலோ மீட்டர்ல நம்ம அப்பார்ட்மென்ட் இருக்கு, பார்க்கிறீங்களா?'' என்றார் பள்ளித் தாளாளர்.

- எஸ்கா


p877.jpg

பேர ஒப்பீடு

தேர்தலில் ஜெயித்த வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தவுடன்  கேட்டுக்கொண்டார்கள், ``நீங்க ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க?''

-  வேம்பார் மு.க.இப்ராஹிம்


p878.jpg

விழிப்புஉணர்வு

தேர்தல் விழிப்புஉணர்வு படத்தில் நடித்த ஹீரோ, வாக்குப்பதிவு நாளில், சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடிக்கொண்டிருந்தார்.

- ஜெ.கண்ணன்


p879.jpg

செல்ஃபி 2.0

``குரூப் செல்ஃபிகுள்ள ஒரு பேய். இதுதான் சார் படத்தோட ஒன்லைன்.''

- தமிழ்வேல்


p8710.jpg

நவீனம்

தன் ஐந்து வயது மகனிடம் செல்போனைக் கொடுத்துவிட்டு  ஒரு வயது செல்ல நாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் தந்தை.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நவீனம்

தன் ஐந்து வயது மகனிடம் செல்போனைக் கொடுத்துவிட்டு  ஒரு வயது செல்ல நாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் தந்தை.

 

உங்களது இந்த வெளிப்படையான  பேச்சுத்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கு நவீனம்....!  tw_blush:

  • தொடங்கியவர்
நேரடி வானிலை அறிக்கை ஒளி­ப­ரப்பில் ஆடை தொடர்பில் பெண் ஊட­க­வி­ய­லா­ளரை அவ­ம­தித்­த­தாக சர்ச்சை
 

அமெ­ரிக்க தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்றில் வானிலை அறி­விப்பு செய்­து­கொண்­டி­ருந்த பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் அணிந்­தி­ருந்த ஆடை ஆபா­ச­மாக உள்­ளது எனக் கூறிய சக ஊட­க­வி­ய­லாளர் ஒருவர், அந்த நேரடி ஒளி­பரப்­பி­லேயே பெண் ஊட­க­வி­ய­லாளர் தனது ஆடைக்கு மேலாக ஸ்வெட்டர் ஒன்றை அணிந்­து­கொள்ள வைத்த சம்­பவம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


16715n1.jpg

 

கே.ரி.எல்.ஏ. எனும் இத்­தொ­லைக்­காட்சி அலை­வ­ரி­சையில் லிபர்ட்டே சான் எனும் ஊட­க­வி­ய­லாளர் கடந்த சனிக்­கி­ழமை காலை 8.00 மணி­ய­ளவில் வானிலை அறி­விப்பு செய்­து­கொண்­டி­ருந்தார்.

 

திடீ­ரென அத் ­தி­ரையில் ஆண் ஒருவர் லிபர்ட்­டேயை அழைத்து அவரை நோக்கி ஸ்வெட்டர் ஒன்றை நீட்­டினார். “உங்கள் ஆடை பொருத்­த­மற்ற வகையில் இருப்­ப­தாக எமக்கு அதிக மின்­னஞ்­சல்கள் வந்­துள்­ளன. எனவே இதை அணிந்­து­கொள்­ளுங்கள் என அந் ­நபர் கூறினார்.  


16715n2.jpg

 

“இந்த ஆடையை நான் அணிந்­து­கொள்ள வேண்­டுமா?, ஏன்”, குளி­ராக இருக்­கி­றதா?” எனக் கேட்­ட­வாறே அந்­ ந­பரின் உத­வி­யுடன் லிபர்ட்டே மேற்­படி ஸ்வெட்­டரை அணிந்­து­கொண்டார்.


இரண்­டா­வது நபரின் முகம் தொலைக்­காட்­சியில் காட்­டப்­ப­ட­வில்லை. அவர் மேற்­படி அலை­வரி­சையில் பணி­யாற்றும் லிபர்ட்டே சானின் சக ஊட­க­வி­யலா­ள­ரான கிறிஸ் பரோஸ்.


நேரடி தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் இவ்­வாறு பெண் ஊட­க­வி­ய­லாளர் தனது ஆடைக்கு மேலாக ஸ்வெட்டர் ஒன்றை அணிந்­து­கொள்ள நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட விடயம் சர்ச்­சையை ஏற்­படுத்­தி­யுள்ளது.

 

16715n3.jpg

 

இது அந்த ஊட­க­வி­ய­லாளரை அவ­ம­திக்கும் நட­வ­டிக்கை என பலர் குற்றஞ் சுமத்­தி­யுள்­ளனர். சமூக வலைத்­த­ளங்­களில் இது தொடர்­பாக வி­மர்­சித்­துள்­ளனர்.  அந்த வானிலை அறி­விப்பு முடி­வ­டையும் வரை­யா­வது காத்­தி­ருக்­கக்­கூ­டாதா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஆனால், கே.ரி.எல்.ஏ. நிறுவனம் மேற்படி ஸ்வெட்டரை அணிந்துகொள்ள தன்னை நிர்ப்பந்திக்கவில்லை என லிபர்ட்டே சான் தெரிவித்துள்ளார். தனது சக ஊடகவியலாளரின் நடவடிக்கைக்கேற்ப தானும் நடந்துகொண்டதாக அவர் கூறினார்.

 

இதற்குமுன் எமது காலை நேர ஒளிபரப்பை பார்த்திருந்தால் நாம் எப்போதும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப் பீர்கள்” என்கிறார் லிபர்ட்டே சான்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏழு நிமிடத்தில் ஜெயலலிதா உருவத்தை தனது நெற்றியில் வரைந்த ஓவியர் (வீடியோ இணைப்பு)

 

தமிழக முதல்வராக ஆறாவது முறை ஜெயலலிதா பதவியேற்றதை முன்னிட்டு அவரது உருவத்தை தனது நெற்றியில் ஒருவர் வரைந்துள்ளார்.

இவ்வோவியத்தை விழுப்புரத்தைச் சேர்ந்த ஓவியர் செல்வம் என்பவரே ஏழு நிமிடங்களில் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற சந்தோஷத்தினை வெளிப்படுத்தும் முகமாக குறித்த ஒவியத்தை வரைந்துள்ளார்.

virakesari

  • தொடங்கியவர்

நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை (காணொளி)

நீண்ட வளைந்த நகங்களைக் கொண்ட ஆஸ்ப்ரே பறவைகள் தன் எடைக்குச் சமமான மீன் ஒன்றைக் குளத்தில் இருந்து லாவகமாக பிடித்து ஒற்றைக் காலில் தூக்கிச் செல்லும் காணொளி.

  • தொடங்கியவர்

விழுவதெல்லாம் விதைதான்!

 

p112a.jpg

விபரம் தெரிஞ்ச காலத்துல இருந்து ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ டயலாக்கைப் படிக்கிறோம். கல்யாணம், காது குத்துக்கு இலவச மரக்கன்றுகளைக் கொடுத்து இயற்கையைப் போற்றுகிறோம். சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மக்களும் அடிக்கடி மரக்கன்று வழங்கும் விழா நடத்தி, கெத்து காட்டிக்கிறாங்க. இப்படிப் பலவகையில நட்டுவைக்கிற மரமெல்லாம் முளைச்சுருந்தா, ஓஸோன் ஓட்டையை என்னைக்கோ அடைச்சிருக்கலாம். சரி... விஷயத்துக்கு வருவோம். தன் கையால், தானே மரத்தை ஊன்றும் கதை எல்லாம் நம்ம ஊரில்தான். மரம் வளர்க்கும் விஷயத்தில் வெளிநாடுகள் எல்லாம் வேற வெவல்! எப்படி?

p112b.jpg

நீங்கள் தூக்கிப்போடும் குப்பைகள் எல்லாம் மரமாக, செடியாக முளைத்தால் எப்படி இருக்கும்? இந்த கான்செஃப்ட்டில்தான் மரம் வளர்த்து அசத்துகின்றன பல்வேறு நாடுகள். ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் கடையை விரித்திருக்கும் ‘ஸ்ப்ரோட்’ நிறுவனம் விதைகளுடன் கூடிய பென்சிலைத் தயாரித்து விற்கிறார்கள். எழுதும் பென்சிலின் அடிப்பகுதியில் விதைக்கென தனி இடம் இருக்கும். இந்தப் பகுதியைத் தொடும் அளவுக்கு பென்சில் கரைந்ததும் பென்சிலைத் தூக்கித் தூர எறிந்தாலும் சரி, மண்ணுக்குள் மூடிவைத்துவிட்டுச் சென்றாலும் சரி. அதிலிருக்கும் விதை விருட்சமாகும்.

p112c.jpg

கலிபோர்னியாவின் சன் டியாகோ நகரில் இருக்கும் ‘கிரீன் பட்ஸ்’ செஞ்ச காரியம் ‘நெருப்புடா’ ரகம். சிகரெட் உடலுக்குக் கெடுதல்; அதில் இருக்கும் பஞ்சு இயற்கைக்குக் கெடுதல். எனவே, எளிதில் மட்கக்கூடிய சிகரெட் பஞ்சுகளை அறிமுகம் செய்திருக்கிறது இந்த நிறுவனம். தவிர, இதில் செடி, கொடி மரத்திற்கான விதையும் இருக்கும். பிறகென்ன? நீங்கள் தூக்கியெறியும் அத்தனை சிகரெட் துண்டுகளும் உங்களைச் சுற்றி செடியாக முளைக்கும். அதாவது, புகை பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது. தூக்கியெறியும் பஞ்சு இயற்கைக்கு நன்மையானது!

p112d.jpg

கனடாவின் ‘பொட்டானிக்கல் பேப்பர் வொர்க்ஸ்’ நிறுவனம், எழுதும் பேப்பர்களில் விதையை பிரின்ட் செய்து கொடுக்கிறார்கள். பயன்படுத்திய பிறகு பேப்பரைக் கிழித்துப் போடுவது, எரியவிட்டுக் குளிர்காய்வது என சேட்டை செய்யாமல், அந்த பேப்பரைப் புதைத்துவிட்டுத் தண்ணீர் தெளித்தால் போதும். பேப்பரில் பதிந்திருக்கும் விதைகள், காய்கறித் தோட்டமாகும். இந்த பேப்பர் கான்செஃப்ட்டில் நோட்டுப் புத்தகங்களும் இருக்கின்றன. எழுதிய நோட்டுப் புத்தகங்களை அப்படியே புதைத்தால், ஒரு தோட்டமே உருவாகும்.

p112e.jpg

இதே கனடாவைச் சேர்ந்த சில மாணவர்கள் பீட்சா, பர்கரின் பேக்கிங்கிற்குப் பயன்படும் அட்டைகளில் விதைகளைப் புகுத்தி பேக்கிங் செய்திருக்கிறார்கள். அட்டைப் பெட்டியைத் தூக்கி வீசினாலும் சரி, குப்பையில் போட்டாலும் சரி...  நிச்சயம் ஒருநாள் செடி முளைக்கும். பிறகு குழந்தைகளுக்குப் பிடித்த, அதிகம் விற்பனையாகும் சாக்லேட்டுகளின் பேக்கிங்கிலும் இந்த முறை புகுத்தப்பட்டிருக்கிறது. தவிர, கழிவறைகளில் பயன்படுத்தும் பேப்பர்கள், சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் என எங்கும் நீள்கின்றன விதைகள்.

vikatan

  • தொடங்கியவர்

'ட்ரெண்ட்' பெட்டி!

 

p116a.jpg

மோடி சார், பிரமாதம்

கடந்த வியாழக்கிழமையன்று  மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு என ஐந்து இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. எட்டு மணிக்கு ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கையில் 9.30 மணிவரையில் முன்னிலைகூட கட்சிகள் பெறவில்லை. ஆனால், பிரதமர் மோடி காலையிலேயே ஜெயலலிதா, அச்சுதானந்தன், மம்தா பானர்ஜி போன்றவர்களிடம் பேசி வாழ்த்துத் தெரிவித்ததாக #modi ட்விட்டரில் தெரிவிக்க, அதிர்ந்து போனார்கள் நெட்டிசன்ஸ். அடுத்த முறை யார் சார் ஜெயிப்பாங்க?

முருகனின் பேரனுக்கே இந்த நிலைமை

p116c.jpg

234 தொகுதிகளில் சீமான், அன்புமணி போன்றோர் எப்படியும் சில தொகுதிகளிலாவது வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும், சீமான் ஆதரவாளர்கள் இணையத்தில் நாம் தமிழருக்கு ஆதரவாகக் களம் இறங்கினார்கள். #Novotefordmk & Admk என ட்ரெண்ட் எல்லாம் செய்தார்கள். ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்து இருக்கிறது. அதிலும், நோட்டாவைவிட 234 தொகுதிகளில் போட்டியிட்ட சீமான் குறைவான வாக்குகளே பெற்று இருக்கிறார் என்பதுதான் சோகமான விஷயம். நாம பேசுன பேச்சுக்கு...

சாதனை நாயகன்!

p116b.jpg

இந்த ஐ.பி.எல்-லில் கோஹ்லி, இதுவரை நான்கு சதங்கள் அடித்து இருக்கிறார். டி20 போட்டிகளில் சதம் அடிக்கவே பலருக்கு நாக்குத் தள்ள, கோஹ்லி இந்த முறை செய்திருப்பது சாதனைக்கெல்லாம் அப்பால் என சிலாகிக்கிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இந்தச் செய்தியை நீங்கள் படிப்பதற்குள், கோஹ்லி மற்றுமொரு சதம் அடித்து இருந்தால், அதற்கு ட்ரெண்டிங் பாண்டி பொறுப்பல்ல. #viratkohli என்ற டேக்கில், ரசிகர்களோடு கிரிக்கெட் வீரர்களும் கோஹ்லியைப் பாராட்டினர். நெசமாலுமே வேற லெவல்!

நல்ல விளையாட்டு

p116d.jpg

16-ம் தேதி வாக்களித்ததும், ட்விட்டரில் #IVotedTN என்ற டேக்கில் ட்விட் செய்தால், பிரபலங்கள் கையெழுத்திட்ட ஒரு படம் கிடைக்குமென அறிவித்தது தேர்தல் ஆணையம். பலருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், தினேஷ் கார்த்தி கையெழுத்திட்ட படங்கள் வர, சிலருக்கு மட்டும் வீராங்கனை தீபா பல்லிகல் கையெழுத்திட்ட படம் வந்தது. கடுப்பான நெட்டிசன்ஸ், பலமுறை #IVotedTN  என்ற டேக்கில் ட்விட் செய்து விளையாடினர். ஒருகட்டத்தில் வாக்களிக்காதவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் என எல்லோரும் ட்விட் செய்ய களை கட்டியது ட்விட்டர். எப்போ பாரு விளையாட்டு!

மக்களால் நான், மக்களுக்காக நான்
 

p116e.jpg

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெல்ல, கடந்த வியாழக்கிழமை இணையம் களை கட்டியது. தபால் வாக்குகளிலேயே, அ.தி.மு.க. முன்னணியில் இருக்க, நாலாவது பெட்டியை உடைக்கட்டும் என தம் கட்டினர் உடன்பிறப்புகள். ஆனால், தி.மு.க-வுக்கு சாதகமான பெட்டி கடைசிவரை வரவே இல்லை. #jayalalithaa,#aiadmk என ரத்தத்தின் ரத்தங்கள் ட்ரெண்ட் ஆக்கினர். மல, நல்லாருக்கியா மல?

அசாமில் மட்டும் மோடி அலை

p116f.jpg

மோடி ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தலுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மோடி. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் மோடி பேசிய பேச்சிற்கு, ட்ரெண்டிங்கிலேயே நக்கல் செய்யப்பட்டார். கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் ஒற்றை இலக்கத்திலும், தமிழகத்தில் சைபரும் பெற்று சாதனை பெற்றது பா.ஜ.க. அஸ்ஸாமில் வென்றது மட்டுமே பா.ஜ.க-விற்கு ஆறுதலான விஷயம்.#Modi ட்ரெண்ட் ஆனது. என்ன சிவாஜி, இப்படி ஆகிப்போச்சு?

சொன்னீங்களே செஞ்சீங்களா?

p116g.jpg

கடந்த ஒரு மாதமாக எங்கே சென்றாலும், 100 சதவிகித வாக்களியுங்கள் என சூர்யா, அஷ்வின் போன்றோர் விளம்பரத்தில் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். தேர்தல் நாளான 16-ம் தேதி, இவர்களுக்கு மீடியா வலை வீச, ‘நான் வெளிநாட்டுல இருக்கேன்’ என சூர்யா ஒதுங்கிக்கொள்ள, கிரிக்கெட் போட்டி இருக்கிறதென்று காரணம் காட்டி, அஷ்வின், தினேஷ் கார்த்திக் போன்றோர் கலந்துகொள்ளவில்லை. எங்களுக்கு #TN100Percent பற்றி கிளாஸ் எடுத்தீங்களே... நீங்கள் வாக்களித்தீர்களா? என நக்கல் அடித்தனர் நெட்டிசன்ஸ். இனிமேல் 100 சதவிகிதம் விளம்பரம் பண்ணுவீங்க?

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....... 

மே - 25

 

732varalru.jpg1659 : ரிச்சார்ட் குரொம்வெல் இங்­கி­லாந்தின் "ஆட்சிக் காவலர் பெரு­மகன்" (Lord Protector) பத­வியைத் துறந்தார். பொது­ந­ல­வாய இங்­கி­லாந்தின் இரண்­டா­வது குறு­கிய கால அரசு ஆரம்­ப­மா­னது.

 

1810 : ஆர்­ஜென்டீ­னாவில் இடம்­பெற்ற புரட்­சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளு­நரை வெளி­யேற்­றினர்.

 

1812 : இங்­கி­லாந்தில் இடம்­பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1837 : கன­டாவின் கியூ­பெக்கில் பிரித்­தா­னி­யாவின் ஆட்­சிக்­கெ­தி­ராக கிளர்ச்சி நடை­பெற்­றது.

 

1865 : அமெ­ரிக்­காவின் அல­பா­மாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்­சா­லையில் இடம்­பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1953 : நெவாடா மாநி­லத்தில் ஐக்­கிய அமெ­ரிக்கா தனது முத­லா­வதும் கடை­சி­யு­மான அணு ஆற்­ற­லி­னா­லான பீரங்­கியைச் சோதித்­தது.

 

1955 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் கான்சாஸ் மாநி­லத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறா­வளி தாக்­கி­யதில் 80 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1961 : பத்­தாண்­டு­க­ளுக்குள் சந்­தி­ர­னுக்கு மனி­தனை அனுப்பும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் திட்­டத்தை அமெ­ரிக்­காவின் அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜோன் எஃப். கென்­னடி அமெ­ரிக்கக் காங்­கி­ரஸில் அறி­வித்தார்.

 

1963 : எத்­தி­யோப்­பிய தலைகர் அடிஸ் அபா­பாவில் ஆபி­ரிக்க ஒன்­றியம் உரு­வா­னது.

 

1979 : அமெ­ரிக்­காவின்  விமானம் ஒன்று சிக்­காகோ நகரில் விபத்­துக்­குள்­ளானதால் அதில் பய­ணித்த 271 பேரும் தரை­யி­லி­ருந்த இரு­வரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1982 : ஆர்­ஜென்­டீ­னா­வு­ட­னான போக்­லாந்து போரில் கவெண்ட்ரி என்ற பிரித்­தா­னிய கப்பல் மூழ்­கி­யது.

 

1985 : பங்­க­ளா­தேஷில்  இடம்­பெற்ற சூறா­வ­ளியில் 10,000 சுமார் பேர்  உயி­ரி­ழந்­தனர்.

 

1997 : சியேரா லியோ­னியில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் ஜனா­தி­பதி  அஹமட் கப்பா பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

 

2000 : லெப­னானில் 22 ஆண்­டு­க­ளாக நிலை கொண்­டி­ருந்த இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளி­யே­றினர். லெப­னானில் மே 25 ஆம் திகதி விடு­தலை நாளாக கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

 

2001 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்­மாயர், எவரெஸ்ட் சிக­ரத்தை அடைந்த முத­லா­வது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெரு­மையைப் பெற்றார்.

 

2002 : சீன விமானம் ஒன்று தாய்­வானில் நடு­வானில் வெடித்துச் சித­றி­யதில் 225 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2002 : மொஸாம்­பிக்கில் ரயில் ஒன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 197 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2009 : வட­கொ­ரியா தனது இரண்­டா­வது அணு­வா­யுத சோத­னையை நடத்­தி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டது. 

 

2012 : "ஸ்பேஸ் எக்ஸ்" நிறு­வ­னத்தால் உரு­வாக்­கப்­பட்ட ட்ரகன் விண்­கலம், சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துடன் இணைந்த முத­லா­வது வர்த்­தக விண்­க­ல­மா­கி­யது.  

 

2013 : இந்­தி­யாவின் சத்­தீஷ்கர் மாநி­லத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகளின் வாகனத் தொடரணி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

 

2013 : பாகிஸ்தானின் குஜ்ரத் நகரில் பாடசாலை பஸ் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 16 சிறார்களும் சாரதியும்  உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒபாமாவின் 6 டொலர் உணவு...
 

article_1464088513-In6@obamaBull-Picture

வியட்னாமுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அங்குள்ள சிறிய உணவகமொன்றுக்குச் சென்று, பிரபல சமையல்கலை நிபுணரான அந்தோனி புர்டெய்னுடன் உணவருந்தினார். இந்த உணவகத்தில் இருவருமே உணவருந்துவதற்கு, வெறுமனே 6 டொலர்கள் மாத்திரமே செலவானதாக, அந்தோனி தெரிவித்திருந்தார்.

article_1464088905-In6$obamaBull-Picture

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13233036_1049875308394496_68463987879916

இன்று 77வது பிறந்த நாளைக் கலக்கலாகக் கொண்டாடும் நகைச்சுவை மாமணி, கிண்டல், கலாய்த்தல் சிகாமணி அண்ணன் கவுண்டமணி

 

கவுண்டமணி....கல கல மணி!

govndamani%20250.jpgவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

* 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

* பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

* அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

* மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

govndamani%20550%202.jpg

* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

govndamani%20550%2022.jpg

* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

* ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

govndamani%20550%203.jpg

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

govndamani%20550%2033.jpg

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

* 'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

* 2010-ல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

govndamani%20550%204.jpg

* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

vikatan

 

  • தொடங்கியவர்

13256497_10154642104684578_2454838323707

  • தொடங்கியவர்
எதுவுமே செய்யாமல் இருக்கும் போட்டி
 

எது­வுமே செய்­யாமல் இருக்கும் போட்­டி­யொன்று தென் கொரி­யாவில் கடந்த வாரம் நடை­பெற்­றது. மன அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வது, மூளைக்­கான வேலைப்­ப­ளுவை குறைத்தல் ஆகி­ய­னவே இதன் நோக்­க­மாகும்.  

 

168415064410031-01-02_24052016_R25_CMY.j

 

தலை­நகர் சியோலின் பூங்கா வொன்றில் கடந்த ஞாயி­றன்று நடை­பெற்ற இப்­ போட்­டியில் சுமார் 60 பேர் பங்­கு­பற்­றினர். இவர்கள் மேற்­படி பூங்காவில் 90 நிமிட நேரம் இருக்க வேண்டும்.

 

16841b1b3410027-01-02_24052016_R25_CMY.jஆனால், பேசவோ, சாப்­பி­டவோ, உறங்­கவோ கூடாது. ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்­புக்கில் அரட்­டை­ய­டிக்­கவும் முடி­யாது.

 

உண்­மையில் எந்­த­வொரு இலத்­தி­ர­னியல் சாத­னங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு போட்­டி­யா­ளர்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.   

 

“உங்கள் மூளைக்கு ஓய்­வ­ளி­யுங்கள்” எனும் தொனிப்­
பொ­ருளில் நடை­பெற்ற இப்­ போட்டி “ஸ்பேஸ் அவுட்” என அழைக்­கப்­ப­டு­கி­றது.   

 

2014 ஆம் ஆண்டு உள்ளூர் கலை­ஞர்கள் சில­ரினால் ஒரு கலை நிகழ்­வாக இந்­ நி­கழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

 

தற்­போது இது ஒரு போட்டி நிகழ்­வாக நடத்­தப்­ப­டு­கி­றது. கடந்த ஞாயி­றன்று சியோல் நகர சபை அனு­ச­ர­ணை­யுடன் இப்­போட்டி நடை­பெற்­றது.“ஸ்மார்ட்­போன்கள், தொலைக்­காட்சி, கணினி ஆகி­ய­வற்­றி­லி­ருந்து எமது மூளை­ககு அதிக தக­வல்­களை அனுப்­பாமல் ஓய்வில் இருக்க வாருங்கள் என அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

இதற்­காக சுமார் 1500 பேர் இணை­யத்­தளம் மூலம் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். தென் கொரி­யாவின் 5 கோடி மக்­களில் சுமார் 80 சத­வீ­த­மானோர் ஸ்மார்ட்­போன்­களை வைத்­தி­ருக்­கின்­றனர்.

 

அங்கு அனைத்தும் டிஜிட்டல் மய­மா­கி­வ­ரு­வது ஒரு பிரச்­சி­னை­யாக உரு­வா­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

தென் கொரி­யாவில் ஸ்மார்ட்போன் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் சரா­ச­ரி­யாக தினமும் 4 மணித்தியாலங்கள் டுவிட் செய்தல், அரட்டையடித்தல், இலத்திரனியல் கேம் விளையாடுதல் போன்றவற்றில் செலவிடுகின் றனர் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13239026_1049872828394744_94725691507303

தமிழ்த்திரையுலகின் என்றும் மாறா தேன் மதுரக் குரலோன் T.M.சௌந்தரராஜன் அவர்களது நினைவு தினம்.

ஆயிரக்கணக்கான அற்புதமான பாடல்களுக்கு உயிர் கொடுத்த உணர்ச்சி மிகு பெரும் பாடகர்.

  • தொடங்கியவர்
சியூபெக்கா முடிமூடி அணிந்த பெண்ணின் சிரிப்பு வீடியோ; 4 நாட்களில் 13.5 கோடி தடவை பார்வையிடப்பட்டது
 

ஸ்டார் வோர்ஸ் திரைப்­படப் பாத்­தி­ரங்­களில் ஒன்­றான சியூ­பெக்­காவின் முகத்­தோற்­றத்தைப் போன்ற முக­மூடி அணிந்த நிலையில் பெண்­ணொ­ருவர் சிரித்த பல­மான சிரிப்பு இணை­யத்தை கலக்கி வரு­கி­றது.  


16849smile.jpg

 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கென்டெஸ் பெய்னே எனும் இப் பெண் வாக­ன­மொன்றின் சாரதி ஆச­னத்தில் அமர்ந்த நிலையில், “சியூ­பெக்கா” முக­முடி அணிந்­த­வாறு சிரித்த காட்­சியை வீடி­யோவில் பதி­வு­செய்­து­கொண்டார்.

 

4 நிமி­டங்கள் கொண்ட இந்த வீடியோ இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்டு 4 நாட்­களில் 13.5 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளன. இரு பிள்­ளை­களின் தாயான கென்டஸ் பெய்னே (37) ஸ்டார் வோர்ஸ் திரைப்­ப­டங்­களின் தீவிர விசி­றி­யாவார்.

 

16849smiling.jpg

 

இவர் அண்­மையில், டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள ஷொப்பிங் நிலை­யத்தில் சில பொருட்­களை வாங்கிக் கொண்டு திரும்­பிய வேளையில் இந்த சியூ­பெக்கா முக­மூ­டியைக் கண்­டாராம். இதை அணிந்­து­கொள்­பவர் வாயைத் திறந்தால் கர்ச்­சனை ஒலி எழும் வகையில் இந்த முக­மூடி தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

 
இந்த முக­மூ­டியை வாங்­கிய கென்டஸ் பெய்னே, காரில் இருந்­த­வாறே அதை அணிந்­து­கொண்டு சிரித்துப் பார்த்­துள்ளார். இந்த சிரிப்பு தற்­போது அவரை உலகம் முழு­வதும் பிர­ப­ல­மா­ன­வ­ராக்­கி­யுள்­ளது. நான் இப்படி சிரிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் கென்டெஸ் பெய்னே.     

 

 

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சோமசுந்தர புலவர்

somasundara_pulava_2867615f.jpg
 

இலங்கை தமிழறிஞர்

‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) பிறந்த தினம் இன்று (மே 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். உறவினர் ராமலிங்க உபாத்தி யாயரிடமும் மானிப்பாய் மாரிமுத்து விடமும் ஆங்கிலம் கற்றார்.

# சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றி ருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.

# ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமயப் பாடங்களைக் கற்பித்தார்.

# ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம், கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.

# பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள் ளார். 400-க்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தம்.

# யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

# ‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910-ல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927-ல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.

# ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை நான்மணிமாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

# குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

# தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955-ல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75-வது வயதில் (1953) மறைந்தார்.

  • தொடங்கியவர்
தனது மனைவிக்காக 312,500 ரூபா பெறுமதியான 12 வருட பழைமையான காரை வாங்கிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன்
 

16851d3.jpgபிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன் தனது மனைவி சமந்­தா­வுக்கு1500 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் சுமார் 312,500 ரூபா) பெறு­ம­தி­யான 12 வரு­டங்கள் பழை­யான கார் ஒன்றை வாங்கிக் கொடுத்­துள்ளார்.


இங்­கி­லாந்தின் ஒக்ஸ்­போர்ட்­ஷயர் பிராந்­தி­யத்­தி­லுள்ள விட்னி எனும் பழைய கார் விற்­பனை நிலை­யத்­தி­லி­ருந்து இக்­ காரை வாங்­கி­யுள்ளார் பிர­தமர் டேவிட் கெமரூன்.


தனது மனைவி சமந்த கெமரூன் சிறிய தூர பய­ணங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக கார் ஒன்றை வாங்­கு­வ­தற்கு டேவிட் கெமரூன் தீர்­மா­னித்தார்.


இதற்­காக, நீல நிற­மான, நிஸான் மைக்ரா ரகத்தைச் சேர்ந்த காரை அவர் தெரிவு செய்தார். 2004 ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்ட கார் இது.


விட்னி பழைய கார் விற்­பனை நிலை­யத்தைச் சேரந்த இயன் மொரிஸ் இது தொடர்­பாக கூறு­கையில், பிர­தமர் டேவிட் கெமரூன் இந்தக் காரை வாங்க விரும்­பு­வ­தாக தனது நிறு­வ­னத்தில் பணி­யாற்றும் மற்­றொ­ருவர் கூறி­ய­போது, வியா­பாரம் எதுவும் இல்­லாமல் இருந்த அன்­றைய பொழுதில் அந்த சகா ஜோக் அடிக்­கிறார் என தான் எண்­ணி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.


பின்னர் பிர­தமர் டேவிட் கெமரூன் அவ் ­விற்­பனை நிலை­யத்­துக்கு கார் வாங்க வந்­த­போது தான் பெரும் வியப்­ப­டைந்­த­தா­கவும் இயன் மொரிஸ் கூறி­யுள்ளார்.


இக் கார் 1495 ஸ்ரேலிங் பவுண்ட்­ஸுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. இதற்­கான தொகையை வங்கி அட்டை மூலம் டேவிட் கெமரூன் செலுத்­தி­னராம். செல்­வந்­த­ரான பிர­தமர் டேவிட் கெமரூன் மனை­விக்­காக 1495 பவுண்ட்ஸ் பெறு­ம­தி­யான காரை தெரி­வு ­செய்­தமை  வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


16851d1.jpg

 

49 வய­தான டேவிட் கெமரூன் 1996 ஆம் ஆண்டு சமந்­தாவை திரு­மணம் செய்தார். இத் ­தம்­ப­தி­யி­ன­ருக்கு  3 பிள்­ளைகள் உள்­ளனர்.


2005 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய கன்­சர்­வேட்டிக் கட்­சியின் தலை­வ­ராக டேவிட் கெமரூன் தெரி­வானார். 2010  ஆம் ஆண்டு முதல் பிரித்­தா­னிய பிர­த­ம­ராக பதவி வகித்து வரு­கிறார். 

 

16851d2.jpg

 

விளை­யாட்டு, உடற்­ப­யிற்­சி­களில் தீவிர ஆர்வம் கொண்ட டேவிட் கெமருன் பிர­த­ம­ராக தெரி­வா­கு­வ­தற்கு முன்னர் துவிச்­சக்­கர வண்­டியில் வேலைக்குச் செல்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தார்.

 

தற்போது அவர் தனது உத்தியோகபூர்வ வாகனமாக 2 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 41,670,500 பெறுமதியான 'ஜக்குவார் எக்ஸ் ஜே' ரக காரை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மகளிர் மட்டும்!

 

p64c.jpg

ரோமானியா நாட்டின் மிஹேலா நோராக் என்ற 30 வயதுப் பெண் புகைப்படக் கலைஞர் கடந்த மூன்று ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். ‘தி அட்லஸ் ஆஃப் பியூட்டி’ என்ற பெயரில் அந்தப் புகைப்படங்களை புச்சாரிஸ்ட் நகரில் கண்காட்சியாக வைத்து அசத்தி இருக்கிறார். http://theatlasofbeauty.com/ என்ற இணையதளத்தில் இந்தப் படங்களைக் காணலாம்.

p64a.jpg

p64b.jpg

p64d.jpg

‘‘பெண்களை அவர்களின் இயற்கை அழகோடு உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படங்கள் எடுத்தேன். நான் நினைத்துப் பார்க்க முடியாத அனுபவத்தை இந்தப் புகைப்படங்கள் எனக்குத் தந்திருக்கின்றன. எல்லாப் பெண்களும் தனித்தன்மையான அழகு கொண்டவர்கள் என்பதுதான் என் அனுபவத்தில் நான் தெரிந்துகொண்ட பேருண்மை!’’ என்கிறார் மிஹேலா!

பெண் என்றாலே அழகுதான்!

vikatan

 

 

  • தொடங்கியவர்

13248509_1049874561727904_12793356446535

கலகலப்பான கதாநாயகன், இளைய ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகர் கார்த்தியின் பிறந்தநாள்.
இவர் சிவக்குமார் - சூர்யா கலைக்குடும்பத்தின் கடைக்குட்டி

  • தொடங்கியவர்
நாளைய பொழுதுக்காக...
 

article_1464148978-loh;l.jpgஎப்பொழுதும், மனசுக்குள் துன்பங்களை போற்றிப் பாதுகாத்து அல்லல்படுபவர்கள், தங்களுக்கு வெளியே மகிழ்ச்சி என்கிற மாவிருட்சங்கள் பல்கிப் படர்ந்துள்ளமையை உணரவேண்டும்.

குப்பைகளுடன் புரண்டு சதா தூங்குபவர்கள், பஞ்சணையில் படுக்கத் தயாராக இருப்பதில்லை.

சோர்வும் துன்பப்படுவதும், பழக்கதோஷமாக அமையக் கூடாது. இதிலிருந்து மீண்டுவர சித்தம் கொள்ளல் வேண்டும்.

நாளைய பொழுதுக்காக நல்லபடி வாழவேண்டுமென எண்ணினால் கஷ்டங்களை இஷ்டமுடன் பேசாமல் சட்டென எழுந்து விடுவான்.

எதனையும் உருவாக்காமல் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. அகத்தினூடாகவும் புறஉலகின் ரம்மியமூடாகவும் மகிழ்வை, மனிதன்தானே பெற்றுக்கொள்ளவேண்டும்.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.