Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம்

Featured Replies

அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம்

 

தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி.
தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி.

அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது:

"தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவது என்ற பிரச்சினை உள்ளது.

தோனி இல்லையெனில் 5,6 மற்றும் 7ம் நிலை காலியாக இருக்கும். யாராவது ஒருவர் ஆட்டத்தை வெற்றி பெற்று தருவார் என்று நாம் நினைக்க முடியாது" என்றார்.

தான் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தோனிதான் காரணம் என்ற புகார்களை மறுத்த சேவாக் கூறியதாவது:

தோனி இதனைச் செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. தோனி நல்ல இதயம் படைத்த மனிதர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம். அதுவும் அவர் முதன் முதலாக கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் அவரது தலைமையின் கீழ் ஆடிய மூத்த வீரர்களான நாங்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கினோம், அந்த ஆலோசனைகளை அவர் உடனடியாக நடைமுறைப்படுத்தியும் உள்ளார். இதனால் நமது அணி அவரது தலைமையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டது, என்றார்.

தோனியுடன் பிரச்சினை இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்த சேவாக், “அப்படி எதுவும் நிகழவில்லை. இவையெல்லாம் ஊடகங்களின் கணிப்புகள். அப்படியெதுவும் எங்களிடையே இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் இன்னும் முன் கூட்டியே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பேன். எனவே அணியிலிருந்து நான் நீக்கப்படுவதற்கு தோனிதான் காரணம் என்று கூறப்பட்ட கருத்து (கங்குலி) தவறு என்றே நான் கருதுகிறேன்” என்றார்.

வீரர்கள் தேர்வில் கேப்டனுக்கு செல்வாக்கு உண்டு என்று கங்குலி கூறியுள்ளது பற்றி சேவாகிடம் கேட்டபோது, “கேப்டனாக இருந்தாலும் மூத்த வீரராக இருந்தாலும், இளம் வீரராக இருந்தாலும் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான அளவு கோல் ஒருவரது ஆட்டத்திறனே.

தேர்வாளர்களே அளவுகோலை தீர்மானிக்கின்றனர். வீரர்களைத் தேர்வு செய்வதும் நீக்குவதும் கங்குலி கேப்டனாக இருந்த போது நிலவி வந்த நடைமுறை. ஆனால் அதன் பிறகு அனைத்தும் மாறிப்போனது. அதாவது ராகுல் திராவிட், அனில் கும்ளே கேப்டனாக இருந்த போது அது மாறியது. நன்றாக ஆடுபவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது இவர்கள் காலத்திய போக்காக இருந்தது” என்றார்.

சேவாக், தோனியிடையே கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் சேவாக் கேப்டனாக விரும்பினார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கிரெக் சாப்பல் தனது பத்தி ஒன்றில் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு சேவாக் பதிலளிக்கும் போது, “நீங்கள் தோனியிடமே இது பற்றி கேட்கலாம். 2007 உலகக் கோப்பையில் இருவருமே சேர்ந்து ஆடினோம். நான் கேப்டனாக விரும்பினேன் என்று கூறுவது முற்றிலும் தவறு. தோனி கேப்டனான போது டி20 உலகக் கோப்பையில் அவருக்குக் கீழ் நான் விளையாடினேன். டி20 உலகக் கோப்பையை நாம் வென்றோம்.

டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு நடைபெறும் போது நான் அப்போது தலைமை அணித் தேர்வாளரிடம் எனக்கு கேப்டனாகவோ, துணைக் கேப்டனாகவோ விருப்பம் இல்லை என்று கூறினேன், வேண்டுமென்றால் நீங்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திடம் இதனை சரிபார்த்துக் கொள்ளலாம். தோனியிடமும் கேட்டுப் பாருங்கள், எனக்கு கேப்டன் பதவி மீது ஆசையில்லை” என்றார்.

ஜூலை 6, 2012 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பையை நாம் வென்றது தோனியின் கேப்டன்சியினால் அல்ல, அணி நன்றாக விளையாடியதால்தான் என்று சேவாக் கூறியதை அவரிடம் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியபோது,

“இங்கு உள்ளவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் எனது அந்த கூற்று சரியானதா தவறானதா என்று. என்னுடைய கூற்றில் தவறில்லை, ஆனால் அது தவறாகக் காண்பிக்கப்பட்டது.

நான் தோனியை இடித்துரைக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த பெருமையையும் கேப்டனுக்கே கொடுக்காதீர்கள், அணிக்கும் கொடுங்கள் என்றுதான் கூறினேன்.

புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் இன்று வரை தோனிதான் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. சவுரவ் கங்குலியை கடந்தார். அவர் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் வென்றார், இரண்டு உலகக் கோப்பைகளை வென்றோம். யாரும் இதனை மறுக்கமுடியாது. ஆனால் ஒருவருக்கு மட்டுமே பெருமையைச் சேர்ப்பது நல்லதல்ல, கோப்பைகளை வென்றதில் மற்றவர்களின் பங்களிப்பும் பேசப்படவேண்டும்.

நான் முதல் போட்டியில் (2011 உலகக் கோப்பை) 175 ரன்கள் எடுத்தேன். தோனி கடைசி போட்டியில் 92 ரன்கள் எடுத்தார். இடையே நான் ஓரிரு ஆட்டங்களில் பங்களிப்பு செய்தேன். ஆனால் தோனி இந்தப் போட்டிகளில் சரியாக ஆடமுடியவில்லை. கவுதம் கம்பீர் ரன்கள் எடுத்தார், யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார். நாளை யாராவது யுவராஜ் சிங்கினால்தான் உலகக் கோப்பையை நாம் வென்றோம் என்று கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அப்படி வெற்றி அனைத்துக்கும் கேப்டனுக்கே பெருமை சேர வேண்டுமென்றால், தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு அணியை கேப்டன் தான் வெற்றி பெறவோ, தோல்வியுறவோ செய்கிறார் என்று கூறுவது மிகவும் தவறு. கேப்டனைக் குறை கூறுவது தவறு. ஒரு கேப்டன் என்பவர் குறைந்தது அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறார், அதனால் அணி நன்றாக விளையாடி, அதிரடி முறையில் விளையாடி, தன்னுடைய புகழுக்காக அல்லாமல் நாட்டுக்காக போட்டிகளை வெற்றி பெற்று தருகிறது.

வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி கேப்டன் தோனியினால் அல்ல. தோல்விக்குக் காரணம் நமது பேட்டிங்கோ, பவுலிங்கோ எதிர்பார்த்த அளவுக்கு உயர்வு பெறவில்லை என்பதே. எவ்வளவு நாளைக்குத்தான் தோனி மட்டுமே நமக்கு போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுப்பார்?” இவ்வாறு கூறினார் சேவாக்.

http://tamil.thehindu.com/sports/அடுத்த-உலகக்-கோப்பை-வரை-தோனி-கேப்டன்-பொறுப்பில்-நீடிக்க-வேண்டும்-சேவாக்-விருப்பம்/article7818254.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.