Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேமிப்பு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

Featured Replies

எஸ்.சிதம்பரம், கம்பளை

மனித வாழ்க்கையில் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பது வாழ்ந்து உயர்ந்தவர்கள் வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்தவர்கள் மூலம் அறியலாம். விலங்குகளே தமது வாழ்விற்கு உகந்தாற்போல் சேமிக்கின்றது. தேனி தேனை சேமிப்பதும் ஒட்டகம் தனக்கு நீரை சேமித்து வைத்துக் கொள்வதும் மாடு உணவை சேமித்து அசை போடுவதும் நாம் காண்பது. அதுபோல் வாழ்வில் எதிர்கால சிந்தனையுடன் சேமிக்கப்பழக வேண்டும். சேமிப்பு இல்லாமை வாழ்வை இருட்டாக்கிவிடும் என்பதை உணர்த்த உலக சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாக ஓடித் திரியும் மனிதர்கள் கிடைக்கும் வருமானத்தில் போக்குவரத்து, உணவு, நகர வாழ்க்கைக்கு உட்செல்வதால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் சேமிப்பில் அக்கறை காட்டுவதில்லை. சில போலி நிறுவனங்கள் அதிக இலாப வட்டி தருவதாக கூறி பணத்தைப் பெற்று ஏமாற்றி விடுவதும் சேமிப்பு தேவை இல்லை என கருதுகின்றனர். பணத்தை சேமிப்பது மட்டுமல்ல எல்லாவற்றையும் சேமிப்பதன் மூலம் வளர்ச்சியடையலாம்.

ஒவ்வொரு நாடும் தமது மத்திய வங்கியில் சேமித்து வைக்கும் தங்கத்தின் அளவே அந்த நாட்டை எதிர்கால திட்டமிடலுக்கு வழிவகுக்கும். நமது மூதாதையர்கள் சேமிப்புப் பற்றித் தெளிவாக வரையறுத்துள்ளனர். விவசாயம் செய்த பின் விவசாயப் பொருளில் குறித்த அளவை சேமித்து வைத்து மிகுதியை விற்பனை செய்வது வழக்கம். அவ்வாறு சேமிக்கப்படும் அரிசி மற்றும் தானியங்கள் அடுத்துவரும் விளைச்சல் காலம் வரை அவர்களின் உணவுத் தேவையை பட்டினி இல்லாமல் கொண்டு செல்ல உதவும்.

அதேபோல், வீட்டில் சமைக்கும் போது உலையில் அரிசியை போட்டு சோறு ஆக்க முன்பு ஒருபிடி அரிசியை எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டு வைப்பர். இவ்வாறு 30 நாட்கள் சேமிக்கப்படும்  அரிசி மேலும் மூன்று நாட்கள் சமைப்பதற்கு உதவும். இது போல் சேமிப்பு பற்றி அறிந்து வாழ்ந்த நம் சமூகம் இப்போது சேமிப்பு பற்றி சிந்திப்பதில்லை. இதனால் வங்கிகள் பணத்தை கையாளும் நிறுவனங்கள் சேமிப்பு தொடர்பாக  கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடுகின்றன.

 மக்கள் அவை வழங்கும் மிகக் குறைந்த  வட்டி வீதத்தில் விருப்பம் காட்டாமல் சேமிப்பு தொடர்பாக அவதானம் செலுத்துவதில்லை. வர்த்தகம் இலாப நோக்கமானது. அதில் முதலீடு செய்பவர்கள் இலாபத்தை அடிப்படையாகச் செய்வர். அதுபோல் வீடு அமைப்பு மூலம் மாடி வீடுகள் அமைப்பதன் மூலம் முதலீட்டாளர்கள் இலாபம் பெறுகின்றனர். எனவே தனியே மத்திய தர வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களின் வருமானத்தில் சேமிப்பு பற்றி சிந்திப்பதில்லை.

சேமிப்பில் பல வழிகள் உண்டு. வங்கிகளில் சேமிப்பு கணக்கை ஆரம்பித்து சிறிய தொகை பணத்தை சேமிக்கலாம். அல்லது 6 மாதம், 1 வருடம், 2 வருடம், 5 வருடம் என நிலையான வைப்பில் பணத்தை சேமிக்கலாம். சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதங்களை வங்கிகள் வழங்குகின்றன. சிறந்த சேமிப்பு நிலம் வாங்குவது கிராமப் புறங்களில் குறைந்த விலையிலும் நகரங்களில் அதிக விலையிலும் விற்கப்படும் காணிகள் காலம் செல்ல செல்ல விலை அதிகரிப்பைக் காட்டுகிறது.

முன்னோர்கள் இவ்வாறு சிந்திக்காமல் நுணுக்கமான முறையில் சேமிப்பைச் செய்தனர். அரசர்கள் தானியங்களை, பணத்தை களஞ்சியங்களில் பாதுகாப்பாக வைத்து பராமரித்தனர். அது போல் அரசும் திறைசேரியில்  பணத்தை சேமித்து வைக்க நினைத்தாலும் அபிவிருத்திக்கு முதலீடு செய்ய வேண்டியுள்ளதால் வெளிநாட்டு கடனை நம்ப வேண்டியுள்ளது. சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டாலும் அதன் நம்பிக்கை கொண்டால் மட்டுமே மக்கள் சேமிப்பை ஊக்குவிப்பார்கள்.

இந்தியா போன்ற நாட்டில் தமிழ் நாட்டில் சேமிப்பு வித்தியாசமான முறையில் நடத்தப்படுகிறது. மாதாமாதம் குறித்த அளவு பணத்தை குறித்த வர்த்தக நிலையத்தில் குறுகிய காலம், நீண்டகாலம் சேமிப்பதன் மூலம் தங்க நகைகள், ஆடைகள், பலகாரம் என்பவற்றை தொகையாக பெற்றுக் கொள்கின்றனர். குறைந்த வருமானம் உள்ளவர்கள் மாதாந்தம் சேமிக்கும் பணம் மூலம் திருமணம் மற்றும் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக இருக்கிறது. வர்த்தகர்கள் இலாபத்தை நோக்கி செய்தாலும் நடுத்தர வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழ்பவர்கள் பயனடையக் கூடியதாக இத்திட்டம் அமைகிறது. எமது நாட்டை பொறுத்தமட்டில்  தொழிலாளர்கள் மத்தியில் மலைநாட்டில் சேமிப்பு பழக்கம் அறவே இல்லை. சேமிப்பு பற்றிய விளக்கத்தை வழங்குவதுடன் நம்பிக்கை ஏற்படச் செய்தல் வேண்டும்.

சகல விடயங்களிலும் சேமிப்பு தொடர்பான தெளிவான விளக்கம் வழங்கப்படுவதுடன் பாடசாலை மட்டத்தில் சேமிப்பின் பலன் பற்றி விளக்கப்படுத்துவதுடன் அதற்கான வழியும் செய்து காட்டப்பட வேண்டும். சுமார் 50 இலட்சம் வரை கல்வி கற்கும் மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். சேமிப்பு பற்றி விளக்கம் இல்லாததால் எவ்வளவு பேர் இன்னும் ஏழ்மையில் இருப்பதை பார்க்கின்றோம். அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் 60 வயதில் பென்ஷன் என்ற ரீதியில் சேமித்த பணத்தையும் தனியார் நிறுவனங்களில் சேவை செய்பவர்கள் இறுதியில் சேவைக் காலப் பணத்தையும் பெறுகின்றனர். இது மொத்த சனத்தொகையில் 10 வீதமே ஆகும். எனவே எல்லோரும் சேமிப்பு தொடர்பாக கவனம் செலுத்துவோம். நாம் சேமிக்கும் பணம் வங்கியில் இடப்பட்டால்  பணம் பாதுகாக்கப்படுவதுடன் வட்டியும் கிடைக்கும் அதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். சேமிப்போம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வோம்.

http://www.thinakkural.lk/article.php?article/uyfibhjzfr8305d74880392417273buxbi6a405baf6a7cbc3613a56fsv8qk#sthash.W14gOLHx.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.