Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் சம்பவத்தால் பதட்டம்: அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

Featured Replies

பாரிஸ் சம்பவத்தால் பதட்டம்: அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

 

வாஷிங்டன்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள அச்சத்தையடுத்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் இந்தியாவின்  மும்பை தாக்குதல் போன்று தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த கொடூர தாக்குதல்களில் 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத்  தாக்குதல்களைத்  தொடர்ந்து அவசர நிலையை அமல்படுத்தியுள்ள பிரான்ஸ் நாட்டு அரசு, தனது அனைத்து எல்லைகளையும் மூடி விட்டது.தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்ஸ் மக்களிடையே அச்சம் நீடிக்கிறது.

us%20army%20one.jpg

இந்த தொடர் தாக்குதல்கள் உலக நாடுகளை  அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தீவிரவாதிகள் அடுத்தக்கட்டமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை குறிவைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா நகரங்களை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், “தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது தொடர்பாக எங்களுக்கு எந்தவொரு உளவுத் தகவலும் வரவில்லை. இருந்தபோதும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்துப் பணியை முடுக்கி விட்டிருக்கிறோம். பாதுகாப்பைப்  பலப்படுத்தியுள்ளோம் ” என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=55071

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளே!.. உங்களுக்குச் சிறீலங்கா அரசானது, ஒரு புதிய பாடத்தைப் புகட்டி, அதனைச் செயலிலும் செய்து காட்டியுள்ளது.

ஒரு இனம் போர் தொடுத்தால்....! 

போரானது! இனத்தின் உரிமையை, விடுதலையை வேண்டித் தொடுத்த போராக இருந்தாலும்!! 

அந்த இனத்தையே அழித்துவிட்டால்...!

போராட்டத்தை சுலபமாக வெற்றி கொண்டுவிடலாம்!! 

  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.