Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்!

Featured Replies

இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்!

 

ந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா,  நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது.
 

south%20africa-%20indian%20playars.jpg

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து  அடுத்தடுத்த ஓவர்களிலேயே ஆம்லாவும், டி வில்லியர்ஸும் அவுட்டாக,  வெறும் 12 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்க அணி. டுமினி மட்டும் சிறிது நேரம் களத்தில் நின்றார். மற்றவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பிக்கொண்டே இருந்தனர். இறுதியில் இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 79 ரன்னுக்கு தென் ஆப்ரிக்கா ஆல் அவுட் ஆனது.

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான தென் ஆப்ரிக்கா,  இவ்வளவு மோசமாக விளையாடுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக  டி வில்லியர்ஸ்  தவறான கணிப்பில் இருமனதுடன் விளையாடி டக் அவுட் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தென் ஆப்ரிக்கா தற்போது 136 ரன்கள் பின்தங்கி உள்ளது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இந்நிலையில் இந்திய பிட்ச்கள் மோசமானவை என்றும், கிரிக்கெட் விளையாடவே தகுதியற்ற பிட்ச் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இந்திய பிட்ச்கள் மோசமானவைதானா?

வழக்கத்துக்கு மாறாக முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் தற்போது பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுமே தங்களுக்கு ஏற்ற வகையில்தான் பிட்ச் அமைப்பார்கள். 2013-ம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது தென் ஆப்ரிக்காவில், பிட்ச்கள் பவுன்சர் டிராக்காக சரியாக அமைக்கப்படவில்லை என  அந்நாட்டு வீரர்களே அதிருப்தி தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் ஆடுகளத்தை என்றுமே வேகபந்துக்கு சாதகமாகத்தான் அமைப்பார்கள். அங்கே நமது வீரர்கள் விளையாடும்போது பவுன்சராக வீசி அச்சுறுத்துவார்கள். 

நியூசிலாந்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். ஆக்லாந்து போன்ற மைதானங்களில் பல அணிகள் 200 ரன்கள் கடப்பதற்கே திணறியுள்ளன. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் தற்போது முற்றிலும் தங்களுக்கு சாதகமான பிட்ச்களை மட்டுமே அமைத்து வருகின்றன. அந்த மைதானங்களில் ஸ்பின் ஓரளவுக்குதான் எடுபடும். இந்த டெஸ்ட் போட்டியில்,  முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கல் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதை நாம் நினைவுக் கூற வேண்டும். ஏனெனில் இந்திய மைதானங்களில் எப்போதுமே  ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பார்கள்.

indian%20pitch.jpg

ஆசிய கண்டத்தில் மைதானங்கள், சூரிய வெப்பம் காரணமாக பெரும்பாலும்  உலர்ந்து இருக்கும். இதனால் இலங்கை, இந்தியா போன்றவற்றிலும் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்படுகிறது. இங்கே பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுன்சர்களை ஒரு சாதாரண வேகப்பந்து வீச்சாளரால் வீச முடியாது. வலிமை வாய்ந்த தோனியின் படை ஆகட்டும், தென் ஆப்பிரிக்கா ஆகட்டும், பாகிஸ்தான் ஆகட்டும் மூன்று அணிகளுமே இந்த ஆண்டு வங்கதேச மண்ணில், அந்த அணியை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தன.

இந்நிலையில்தான் தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருதின போட்டிகளில் மும்பை மைதானத்தை தவிர,  மற்ற அனைத்து ஆடுகளங்களும்  சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே வடிவமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சென்னை  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி வில்லியர்ஸ் தவிர , மற்ற அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்களும் பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். மும்பையில் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால்தான் தென் ஆப்ரிக்கா 400 ரன்களுக்கு மேல் குவித்தது.

இந்திய மண்ணில் ரஞ்சி போட்டிகள் முதலான உள்ளூர் போட்டிகளில் விளையாடியதால் இம்மைதானங்களில் இந்திய வீரர்கள ஓரளவு பேட்டிங் செய்கின்றனர். அதிலும் ஷிகர் தவான், விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் தடுமாறியே வந்துள்ளனர். ஏனெனில் இவ்வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்காக அயல் மண்ணில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். உள்ளூர்  டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் எந்த பிட்சில் எப்படி பேட்டிங் செய்வது என தெரியாமல் திணறுகின்றனர். ரஞ்சியில் அமர்களப்படுத்திய ரவீந்திர ஜடேஜா மட்டுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். முரளி விஜய், புஜாரா, அமித் மிஸ்ரா போன்றோரும் தென் ஆப்ரிக்க தொடருக்கு முன்னதாக இந்திய மண்ணில் நன்றாக விளையாடி பழகியதால் இத்தொடரில் சிறப்பாக விளையாடுகிறார்கள்.


இன்றைய தினம் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததில் எந்தவித மாற்று கருத்தும் நமக்கு இருக்க முடியாது. அதே சமயம் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சரியான லைனில் அபாரமாக பந்துவீசினர். தவறான ஷாட் விளையாடிதான் பெரும்பாலான தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட் ஆயினர். டி வில்லியர்ஸ் உட்பட.  வேகப்பந்துக்கு மட்டுமே சாதகமாக பிட்ச் அமைக்கப்படும்போது, ஸ்பின்னுக்கு மட்டுமே சாதகமாக இருக்குமாறு பிட்ச் அமைப்பதில் என்ன தவறு? என கேட்கின்றனர் ரசிகர்கள். உலகின் நம்பர் ஒன் அணியான தென் ஆப்ரிக்கா, இந்திய அணிக்கு கடும் சவால் தரும் அளவுக்கு விளையாட வேண்டும் என்றுதான் இந்திய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

http://www.vikatan.com/news/sports/55610-india-cricket-pitch.art

  • தொடங்கியவர்

எல்லா நாளுமே 5-வது நாள் பிட்ச்தானோ?: நாக்பூர் பிட்ச் பற்றி தெறிக்கும் விமர்சனங்கள்

முதல் நாள் ஆட்டத்தின் போது நடுவரும் முரளி விஜய்யும் பார்வையிட பிட்சை பெருக்கும் மைதான ஊழியர். | படம்: ஏ.எஃப்.பி.
முதல் நாள் ஆட்டத்தின் போது நடுவரும் முரளி விஜய்யும் பார்வையிட பிட்சை பெருக்கும் மைதான ஊழியர். | படம்: ஏ.எஃப்.பி.

நாக்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. கடைசியாக 310 ரன்கள் என்ற ‘இமாலய’ இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு தற்செயல் நிகழ்வு என்னவெனில் முதல் நாள் ஆட்ட முடிவிலும் டீன் எல்கர், ஆம்லா களத்தில் இருந்தனர், இன்று 2-ம் நாளும் டீன் எல்கர், ஆம்லா களத்தில் இருக்கின்றனர்.

மொஹாலி டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது, இந்த டெஸ்ட் போட்டியும் 3-ம் நாள் தாண்டாத நிலை உருவாகியுள்ளதையடுத்து பிட்ச் பற்றி வாசிம் அக்ரம், மைக்கேல் வான் உட்பட பல முன்னாள் வீரர்கள் கேலி தொனியுடன் சில கருத்துகளை கூறியுள்ளனர்:

மைக்கேல் வான்: இது மிகவும் கொடூரமான பிட்ச். இது 5 நாட்கள் போட்டி நீடிக்க தயாரிக்கப்பட்டது என்று கூறமுடியுமா?

கிளென் மேக்ஸ்வெல்: இந்தப் பிட்ச் கொடூரமானது; முதல் ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு, ஏனெனில் ஒவ்வொரு ஓவரிலும் 3 பந்துகள் பேட்ஸ்மென் விக்கெட்டை அச்சுறுத்துகிறது.

மேத்யூ ஹெய்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் நாம் இப்போது பார்க்கும் அளவுக்கு சீரழிந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

வாசிம் அக்ரம்: உலகம் முழுதும் டெஸ்ட் பிட்ச்களைத் தயாரிப்பதில் ஐசிசி முனைப்பு காட்டுவது அவசியம். அல்லது அணியின் தரநிலையை பாதிக்கும் வண்ணம் புள்ளிகளைக் குறைக்க வேண்டும். அதுவரை இப்படிப்பட்ட பிட்ச்களை நாம் பார்த்துத்தான் தீர வேண்டும்.

தி இந்து (ஆங்கிலம்) பத்தியில் ஜாக் காலிஸ்: ஓரளவுக்கு நல்ல பிட்சில் 400 ரன்களை வைத்துக் கொண்டு பந்து வீச ஸ்பின்னர் ஆசைப்படுவாரா அல்லது ஒவ்வொரு எதிரணி ரன்னுமே கவலையளிப்பதாக அமையும் 200 ரன்களை வைத்துக் கொண்டு பந்து வீச ஆசைப்படுவாரா என்று கேட்டோமானால் அவர்கள் முதல் தெரிவையே விரும்புவர் என்றே நான் கருதுகிறேன்.

ராபின் பீட்டர்சன்: ஏன் டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது என்றால் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் வீரர்களின் திறமையை சோதிப்பதால்தான். இப்போது அதனை பார்க்க முடிவதில்லை.

ரோஷான் அபய்சிங்கே: நாக்பூர் பிட்ச் போல் தயாரித்தால் 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட்தான் இனிமேல். இது பார்க்க மிகவும் அவமானகரமாக உள்ளது.

ராஜ்தீப் சர்தேசாய்: தென் ஆப்பிரிக்கா ஸ்பின் பந்து வீச்சை ஆடமுடியாது, ஆனாலும் இது மிகவும் இழிவான பிட்ச். ஜுஹு பீச் போல் உள்ளது.

டிரெண்ட் ஜான்சன்: 215 ரன்களை எடுத்த பிறகு இந்தியா 136 ரன்கள் முன்னிலை!! ஆட்ட நடுவர்களின் அறிக்கையை படிக்க ஆசையாக இருக்கிறது.

ரிச்சர்ட் ஹைண்ட்ஸ்: தென் ஆப்பிரிக்கா 79 ஆல் அவுட். 80 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க முடியக்கூடிய பிட்சில் தென் ஆப்பிரிக்கா மோசமான ஆட்டம்!

டாம் மூடி: இந்த நாக்பூர் பிட்ச் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது. 142 ஓவர்களில் 25 விக்கெட்டுகள்!

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7919620.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.