Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் விளையாடலாம் : பாகிஸ்தான் பிரதமர் அனுமதி

Featured Replies

இலங்கையில் விளையாடலாம் : பாகிஸ்தான் பிரதமர் அனுமதி

 

இலங்கையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, இடம்பெற்றால் அதில் பாகிஸ்தான் அணி விளையடுவதற்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஷ் செரிப் அனுமதியளித்துள்ளார்.

pakistan_13.jpg

இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸ் அல்­லது இலங்­கை­யில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோ­சித்து வந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு அனுமதியளித்துள்ளார்.

இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டி நடக்­குமா, நடக்­காதா என்று பல கேள்­விகள் எழுந்து வரும் நிலையில் இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/11/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF

  • தொடங்கியவர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருவகை ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இலங்கையில்
2015-11-27 12:10:11

ந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டிகள் நடு­நி­லை­யான இலங்­கையில் நடத்­தப்­ப­டு­வது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 

 

1348322.jpg

 

இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் இத் தொடர்­களை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு தத்­த­மது அர­சு­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.

 

இந் நிலையில் இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் (3 சர்­வ­தேச ஒருநாள், 2 சர்­வ­தேச இரு­பது 20) கிரிக்கெட் தொடர்­களை இலங்­கையில் நடத்­து­வ­தற்­கான அனு­ம­தியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அந் நாட்டு பிர­தமர் நவாஸ் ஷெரிப் நேற்று வழங்­கினார்.

 

‘‘தற்­போ­தைய பாது­காப்பு நில­வ­ரங்­களைக் கருத்­தில்­கொண்டு நடு­நி­லை­யான மூன்­றா­வது நாட்டில் இத் தொடர்­களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்­த­வேண்டும்’’ என பாகிஸ்தான் பிர­த­மரை மேற்கோள் காட்டி பிர­தமர் இல்லம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

‘‘பிர­த­ம­ரிடம் இருந்து ஆலோ­சனை கிடைத்­துள்­ளதால் தற்­போது இந்த விடயம் அர­சியல் ஆக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, இறுதி முடி­வுகள் இரண்டு அர­சாங்­கங்­க­ளி­னா­லேயே எடுக்­கப்­படும்’’ என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹா­ரியார் கான் தெரி­வித்­துள்ளார்.

 

இது குறித்து இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைக்கு அறி­வித்தோம் என அவர் மேலும் கூறினார்.

 

இதே­வேளை இலங்­கையில் இப் போட்­டியை நடத்­து­வது குறித்து இந்­திய கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபையின் புதிய தலைவர் ஷாஷாங் மனோ­கரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹா­ரியார் கானும் அண்­மையில் துபா யில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.


இந்த சந்திப்பின்போது டிசம்பர் 15ஆம் திகதிக்கும் ஜனவரி முதல் வாரத்திற்கும் இடையில் இத் தொடர்களை நடத்துவதென சம்பிரதாயபூர்வமாக முடிவு செய்யப்பட்டது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13483#sthash.xACISBoc.dpuf
  • தொடங்கியவர்

அப்ரிடியின் ஆசை

November 28, 2015

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் இலங்கையில் நடைபெற கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் இன்றையதினமே இரு நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளும் தொடர் தொடர்பாக தமது இறுதி அறிவிப்பை வெளியிடுகின்றன. இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பணயம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பம் தெரிவித்துள்ளார் அப்ரிடி.

இந்தியா – பாகிஸ்தான் தொடர் தொடர்பாக அப்ரிடி தெரிவிக்கையில், – ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். கிரிக்கெட் வேறு அரசியல் வேறு. இரண்டும் நேர் எதிர் போக்கினை உடையவை. இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் தொடரை நடத்த ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டாயிற்று. ஆனால் பாகிஸ்தானிற்கு வந்து இந்தியா விளையாடினால் நான் மகிழ்ச்சி அடைவேன், மேலும் இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானிற்கு வந்து விளையாடினால் அது மிகப்பெரிய சந்தோசமான விடயமாக இருக்கும். பாகிஸ்தானை ஆதரியுங்கள் இங்கு விளையாடுங்கள். இந்தியாவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பாகிஸ்தானில் நூறு வீதம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=4080&cat=2

  • தொடங்கியவர்
பாகிஸ்தானுடனான தொடர் நடைபெறுமா? இந்திய அரசின் கைகளில் முடிவு
 


1351038.jpgஇந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டிகள் நடை­பெ­றுமா என்ற சந்­தேகம் வலுக்கத் தொடங்­கி­யுள்­ளது.

 

இத் தொட­ருக்­கான அனு­ம­தியை வழங்­கு­வதில் இந்­திய அரசு தாமதம் காட்­டு­வதே இந்த சந்­தே­கத்­திற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது.

 

இந்தத் தொடர் நடை­பெ­று­வதில் மிகுந்த சிக்கல் இருப்­ப­தாக இந்­திய மத்­திய அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறி­யுள்­ள­தாக தகவல் கசிந்­துள்­ளது. இந்தத் தொடர்கள் குறித்த இறுதி முடிவை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தான் எடுப்பார் என அந்த அமைச்சர் கூறி­யுள்ளார்.

 

இது குறித்து இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைத் தலைவர் ஷாஷாங்க் மனோகர், செய­லாளர் அநுராக் தக்கூர் ஆகிய இரு­வரும் எவ்­வித கருத்தும் வெளி­யி­ட­வில்லை.

 

எனினும், இந்தத் தொடர் நடை­பெ­றாது என்ற தனது சொந்த அபிப்­பி­ரா­யத்தை சிரேஷ்ட கிரிக்கெட் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார்.

 

‘‘அர­சாங்கம் எதுவும் கூறா­ததால் (நேற்­று ­வரை) நடை­பெ­றாது என்றே எண்ணத் தோன்­று­கின்­றது’’ என அந்த அதி­காரி தெரி­வித்தார்.

 

தத்­த­மது அர­சாங்­கங்­களின் அனு­மதி கிடைக்­கும்­பட்­சத்தில் இத் தொடரை இலங்கையில் விளை­யா­டு­வ­தற்கு இரண்டு நாடு­க­ளி­னதும் கிரிக்கெட் சபை அதி­கா­ரிகள் துபாயில் சந்­தித்­த­போது தீர்­மா­னித்­தி­ருந்­தனர்.

 

இலங்­கையில் விளை­யா­டு­வ­தற்கு தமது நாட்டு அர­சாங்கம் அனு­ம­தித்­துள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட்  சபை கடந்த வெள்­ளி­யன்று தெரி­வித்­தி­ருந்­தது.

 

இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் செய­லாளர் அநுராக் தக்கூர் கடந்த செவ்­வா­யன்று வெளி­யு­றவு அமைச்­சிடம் இத் தொடரில் விளை­யா­டு­வ­தற்­கான அனு­ம­தியை கோரி­யி­ருந்தார். ஆனால், அந்­நாட்டு அரசு இது­வரை மௌனம் காத்தே வரு­கின்­றது.

 

‘‘அரசியல் ரீதி­யா­கவோ ராஜ­தந்­திர ரீதி­யா­கவோ விளை­யாட்­டுத்­து­றையை சர்ச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது’’ என இண்­டியன் ப்றீமியர் லீக் ஆளுநர் சபைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரி­வித்தார்.

 

‘‘அரசின் அனு­ம­தி­யின்றி பாகிஸ்­தா­னு­டான தொடர் குறித்து எம்மால் தீர்­மா­னிக்க முடி­யாது. அதனால் தான் அரச­ அ­னு­மதி கோரி அர­சுக்கு கடிதம் அனுப்­பினோம். அர­சாங்­கத்­திடம் இருந்து பதில் கிடைத்­ததும் அறி­விப்போம்’’ என்றார் அவர்.

 

இந்­தியா அமைதி காப்­பது குறித்து பாகிஸ்தான் ஆச்ச ரியமடைந்துள்ளது. ஒருவேளை, இந்தத் தொடர் நடைபெறா விட்டால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளில் பாரிய பின்னடைவாக அது அமைந்துவிடும் எனக் கருதப்படுகின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13510#sthash.LziNAeBF.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.