Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழர்கள் வாக்களித்தது தமிழர்களைப் படுகொலை செய்வதற்கா?" - தமிழர் தலைவர் கி. வீரமணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்கள் வாக்களித்தது தமிழர்களைப் படுகொலை செய்வதற்கா?" - தமிழர் தலைவர் கி. வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் - மயிலாடுதுறையில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள்.

30 கல் தொலைவில் மொழியால், வழியால், விழியால் உறவுடைய எங்கள் ரத்த சம்பந்தம் உள்ள தமிழர்கள் ஈழத்திலே வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் குண்டு மழை. இன்னொரு பக்கம் பட்டினிச் சாவு என்கிற இரட்டைத் தாக்குதலால் ஓர் இனமே அழிந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் ஈழத்தை விடுதலைப்புலிகள் பிரிக்கவில்லை ராஜபக்சேக்கள்தான் பிரிக்கிறார்கள். எங்காவது சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு குண்டு வீசுமா? அப்படிக் குண்டு வீசுகிறார்கள் என்றால், அம்மக்களை தம் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதவில்லை - ஒப்புக் கொள்ளவில்லை என்று தானே பொருளாகும்?

அன்றைய தீவிரவாதிகள் பிற்காலத்தில்?ஒரு காலத்திலே தீவிரவாதி-கள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அடையாளம் காட்-டப்-பட்ட நெல்சன் மாண்-டேலாவும், முஜிபுர் ரகுமானும் பின்னர் சம்பந்தப்பட்ட நாடு-களின் அதிபர்களாக, வரவேற்-கப்படவில்லையா? வரலாறு பல பாடங்களை நமக்குப் புரிய வைத்திருக்கிறது. தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நேற்று (7.12.2006) தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறை-வேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களின் வாழ்வுரிமைக்-காகத் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டுள்ளது.

``இலங்கையிலே தமிழ் மக்களின் உயிர் உடைமை-களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மேலும் மோசமான அளவில் தொடர்வதற்காக இந்தச் சட்டப் பேரவை ஆழ்ந்த வேதனையைத் தெரி-விப்பதோடு, இதற்கோர் முடிவினைக் காண இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமை-களையும் பெற்று, அமைதியாக வாழ்ந்திட, இந்தியப் பேரரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இப்பேரவை இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது’’ என்று தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமன-தாகத் தீர்மானம் நிறைவேற்-றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குமுன் இன்று மாலை ஏடுகளில் வெளி வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஊட்டு-வதாக உள்ளது.

சிங்கள வெறி அரசுக்கு வெடி மருந்து விநியோகமா?

2000 மெகாவாட் மின்-சாரத்தை இந்திய அரசு இலங்-கைக்கு அளிக்க உள்ளதாம். அந்த மின்சாரம் எந்தப் பகுதிக்குச் செல்லுகிறது? தமிழர்கள் வாழும் பகுதிக்கா? அல்ல +- அல்ல. - சிங்கள மக்கள் வாழும் பகுதிக்குத்தான் செல்லுகிறது. தமிழர்களைப் படுகொலை செய்ய ஏதோ ஒரு வகையில் சிங்கள அரசுக்கு இந்தியா உதவி செய்கிறது என்றுதானே பொருள்?

இன்னொரு செய்தி இடி விழுந்தது போன்றது அது. இலங்கைக்கு அனுப்பப்படுவதற்காக வெடிமருந்து டெட்டனேட்டர்கள் ஏற்றப்பட்ட வாகனம் ஒன்று மதுரை அருகே மேலூரில் சோதனைச் சாவடியில் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வெடி மருந்துப் பொருள்கள் அனுப்பப்படுவதற்குத் தகுந்த ஆவணங்கள் இருந்த காரணத்தால் காவல்துறையினர் அதனை அனுமதித்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகம் வழியாக அது இலங்கைக்குச் செல்ல இருக்கிறது என்கிற செய்தி எவ்வளவுப் பெரிய கொடுமை.

மத்திய அரசுக்குத் தெரிவிக்கிறோம்

இங்கே அரசாங்கத்தின் காதுகள் வந்திருக்கும், என்று எனக்கு நன்கு தெரியும். அவர்களின் வாயிலாக மத்திய அரசுக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற செயல்களைக் கைவிடுங்கள். இலங்கை அரசுக்கு நீங்கள் உதவும் இத்தகைய நடவடிக்கைகள், நிச்சயமாக எங்கள் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குத்தான் பயன்படும். முதல்வர் கலைஞர் அவர்களும் தலையிட்டு இத்தகைய நடவடிக்-கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்கள் வாக்களித்தது தமிழர்களைப் படுகொலை செய்வதற்கா?இன்றைக்கு மத்தியில் இருக்-கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழகத்தையும் புதுவையையும் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்-களின் ஆதரவால்தான் நடைபெறுகிறது.

தமிழர்கள் வாக்கு அளித்துதான் அவர்கள் வெற்றி பெற்று இன்றைக்கு மத்திய அரசை நடத்திட உதவி செய்துள்ளார்கள்.

அந்த வாக்குகள் எங்கள் தமிழர்களைப் படுகொலை செய்யவா பயன்பட வேண்டும் என்று பெருந்துயரத்தோடு, கொந்தளிக்கும் உணர்வுகளோடு மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலை தொடருமேயானால் தமிழகம் தழுவிய அளவில் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

-விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.