Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணாவின் அன்றொரு நாள் பேச்சு

Featured Replies

திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு.

கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி உருட்டி "கேடு கெட்டவர்களே துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தி கிழிக்கும் உமது குடலை" என்றனர். இருதயத்தையே எடுக்கத் துணிந்து விட்ட இந்த அரசியலில் குடல் போனால் என்ன உடல் போனால் என்ன எதற்கும் துணிந்தே விட்டோம் எனக் கூவினர் மக்கள். படைவீரர்கள் இதென்னடா தொல்லை என நிமிர்ந்தனர். காலிகளும் கூலிகளுமாயிருந்தால் அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இவர்களோ நல்லதொரு காரியத்துக்காக மக்கள் மனை போனால் என்ன என்று பாடிக்கொண்டு வந்துவிட்ட அறப்போர் வீரர்கள். அடி உதை என்று அகிம்சை பிறழ்ந்த முறையில் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டாலும் அதைக்காரணமாகக் கொண்டு சுட்டுத்தள்ளலாம். துப்பாக்கியை காணும்போது கூட, சுடுசொல் கூறாமல் அன்புரையே தருகிறார்கள். என்ன செய்வது என்று யோசித்தது அரசு. யோசனையின் விளைவாக முரட்டு மூளையில் உதித்தது ஒரு குருட்டு எண்ணம். நம்மை நம்பி வாழும் இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால்? சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ? இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்கோலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும்? தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே? என்ன செய்வது, இந்தத் தடையை எப்படி நொறுக்குவது, என்று அறப்போர் வீரர்களல்ல நாட்டு மக்களே எண்ணினார்கள்.

அரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது? அஞ்சி அயராதீர்கள் - அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே? இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின்றோம். அதோடு உமது அறப்போருக்கு உதவியாக நிதியும் அளிக்கிறோம் எமது நெஞ்சம் உமக்கே என முன்வந்தனர். கொட்டுகிறது மழை தலையில், கொட்டுகிறது பசி வயிற்றில், கொட்டுகிறது அரசின் போக்கு நெஞ்சில் எனினும் ஆடாது அசையாது, இருந்த இடத்தில் இருந்தபடியே இலங்கைவாழ்த் தமிழர்கள், சர்க்காரது அலுவலகங்களில் செய்துவரும் மறியல் நடந்து வருகின்றது. யாழிலிருந்து இன்னிசையே கேட்கும். மோகன ராகத்தை இசைப்பது போல் அமைதியோடு வாழ்ந்த யாழ்ப்பாண நகரமும் ஏனைய தமிழ்ப்பட்டணங்களும், இன்று முரசொலிக்கின்றன. இம்முறை அங்கே நடைபெற்று வரும் அறப்போர் எளிதாக எண்ணக் கூடிய ஒன்றல்ல. ஏதாவது ஒரு அரசியற் கட்சியின் சார்பில் நடத்தப்படுவதுமல்ல. இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப்பகுதியிலும் தமிழர்கள் அதிகம். அந்தப் பகுதிகள் யாவும் இன்று அறப்போர்க் களமாகி விட்டன. "யாரோ நடத்துகிறார்கள் நமக்கென்ன?" என்று போவோரில்லை. நடக்கும் அறப்போருக்கு நம்முடைய பங்கென்ன என்று கேட்கிறார்கள் ஒவ்வொருவரும். இலங்கைவாழ்த் தமிழர்களில் முஸ்லீம் மக்கள், குறிப்பிடக் கூடிய தொகையினராகும். அந்த மரக்கலராயரும் இப்போது மார்தட்டி இறங்கியிருக்கிறார்கள். அடுப்பங்கரைகளை விட்டு அணங்குகள் புறப்பட்டு அறப்போரிலீடுபட்டிருக்கின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி மதாரசி, மிக நல்ல கட்டுரை ஒன்றை இணைத்திருக்கின்றீர்கள்.

அறிஞர் அண்ணவின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான். ஈழத் தமிழர்களுக்காக அன்றே அவர் கொடுத்த உரிமைக்குரலும் அந்தப் பேச்சினூடாக, மடை திறந்த வெள்ளம் போல் கொட்டும் அவரது தமிழ் நயமும் என்னை உண்மையிலே மெய் சிலிர்க்க வைத்தன.

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இது.

அண்ணாவின் பெயரை சொல்லி அரச்சியல் நடத்தும் அரசியல்வாதிகளும் வாசிக்க வேண்டிய்து

கட்டுரை இணைப்புக்கு நன்றி மதராசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.