Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்பைத் தொலைத்தால் நீங்களும் எந்திரம்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201512131249032728_SmileIf-you-loseYouMa
‘‘எல்லோரையும் சிரிக்கவைத்த என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை அது இறைவனுக்கும் பிடிக்கவில்லை எல்லோரையும் சிரிக்கவைத்தே பழக்கப்பட்டவன் நான் என் சோகத்தை யாரிடமும் சொல்ல விருப்பமில்லை ஆண்டவனுக்கே கேட்க நேரமில்லை இனி யாரிடம் சொல்லி அழ? பிரச்சினைகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியவில்லை என் உயிரை பிரித்துக் கொள்கிறேன்.

அன்பு ரசிகர்களே! வேறு ஒருவன் வருவான் உங்களை சிரிக்க வைக்க அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் நான் விடைபெறுகிறேன்...’’

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்  ராபின் வில்லியம்ஸ், உயிரைவிடும் முன்பு எழுதிய கடைசி கடிதம் இது. இவர் திறமை மிகுந்த ஆலிவுட் நடிகர். உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த நடிகரால், சிரித்து மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

இதில் பெரிய வேதனை என்னவென்றால், மக்களை சிரிக்கவைத்த மாபெரும் சிரிப்பு நடிகர்களில் பலர் ராபின் வில்லியம்ஸ் போலவே சொந்த வாழ்க்கையில் சோகங்களை சுமந்து வாழ்ந்து மடிந்தனர். அதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் நடிகர் சார்லி சாப்ளின்!

வசனங்கள் இருந்தால்தான், அதற்கு ஏற்ற உடல்மொழியை கொடுத்து மற்றவர்களை சிரிக்கவைக்க முடியும் என்றிருந்த சூழ்நிலையில், ‘வசனமும் தேவையில்லை. வாயும் தேவையில்லை. உடல்மொழி மட்டும் இருந்தால்போதும்.விழுந்து விழுந்து சிரிக்கவைத்துவிடலாம்’ என்பதை நிரூபித்தவர், சார்லி சாப்ளின்.

அவரது படங்களான ‘தி கிரேட் டிக்டெக்டர்’, ‘தி கோல்ட் ரஷ்’, ‘மார்டன் டைம்ஸ்’, ‘சர்க்கஸ்’ போன்றவற்றை இன்று பார்த்தாலும், சிரிப்பை அடக்க முடியாது. காலத்தை கடந்த மறக்க முடியாத படைப்புகள் அவை.

ஒரு முறை மேடை நிகழ்ச்சிக்கு சற்று தாங்கிய நடையுடன் மேடையேறினார் சார்லி சாப்ளின். எல்லோரும் அவர் ஏதோ, சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் என்று நினைத்தனர். ஒருவர் தவறுதலாக அவரது காலை மிதிக்கவும், வேதனையால் ஓவென்று கத்திக் கொண்டு காலைப்பிடித்தபடி துள்ளினார். அதைப் பார்த்தும் மற்றவர்கள் சிரித்தனர். கடைசியில், உண்மையில் அவரது காலில் காயம் இருந்ததால் வலியில் துடித்திருக்கிறார். அந்த உண்மையை உணர்ந்ததும், அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வருத்தம் தெரிவித்தனர். 

‘‘என்னுடைய வேதனை எல்லோருக்கும் சிரிப்பை தரலாம். ஆனால் என்னுடைய சிரிப்பு யாருக்கும் வேதனையை தந்துவிடக்கூடாது’’ என்று அப்போது அவர் கூறினார். அந்த அளவுக்கு பண்பாடு நிறைந்த நகைச்சுவையாளர் அவர்.

அவருடைய நகைச்சுவையைப் பார்த்து, உலகம் முழுக்க பல நடிகர்கள் நகைச்சுவை நடிப்பை கற்றுக்கொண்டார்கள். அவர்களில் இந்தி நடிகர் ராஜ்கபூரும் ஒருவர். ராஜ்கபூரின் சிரிப்பு ரஷியா வரை பாராட்டு பெற்றது.

சிரிக்க வைப்பது பெரிய முயற்சி. அதில் சில கலைஞர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஒரு சிரிப்பு நடிகருக்கு உடலும், முகமும், அசைவுகளும் ஒத்துழைக்க வேண்டும். வசனம், அதற்கேற்ற ‘டைமிங்’கில் பேசும் திறன் இதெல்லாம் முறையாக அமைய வேண்டும். அவரை பார்த்த மாத்திரத்திலேயே மக்கள் சிரிக்க வேண்டும். அதுதான் உண்மையான நகைச்சுவை கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டு. ரிஷிகேஷ் முகர்ஜி, பாசு சட்டர்ஜி, குந்தன் ஷா போன்ற இந்திப்பட இயக்குனர்கள் வெகு இயல்பாக படத்தில் சிரிப்பை புகுத்தினார்கள். சிரிப்பு நடிகரை இயக்குவது தான் தனக்கு மிகவும் கஷ்டமான வேலை என்றார், ரிஷிகேஷ் முகர்ஜி. சிரிப்பு நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கிறது. அதை முழுமையாக வெளிப்படுத்தி, மக்களை கவர்கிறவர்களால்தான் வெற்றி பெற முடிகிறது. 

‘‘ஒரு சிரிப்பு நடிகருக்கு முகபாவம் ஒத்துழைக்க வேண்டும். என்னதான் அருமையான வசனம் எழுதினாலும் முகபாவம் மற்றும் அங்க அசைவுகளில்தான் காமெடி பிறக்கும்’’ என்கிறார், பாசு சட்டர்ஜி. ‘சமேலி கி சாதி’, ‘கட்டா மிட்டா’, ‘சோட்டகி பாத்’, ‘தில்லிகி’ போன்ற படங்களை அவர் இயக்கினார்.

உத்பால் தத், தேவேன் வர்மா, ஜானி வாக்கர், ஓம்பிரகாஷ், மஹமத், துமல், முகரி, அஸ்ரானி, அமோல் பாலேகர் போன்ற பல சிரிப்பு நடிகர்கள் இயல்பாக ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.  தமிழ்த்திரை உலகில் கலைவாணர், நாகேஷ் போன்ற முத்திரை பதித்த நகைச்சுவை நாயகர்கள் பலருண்டு.

இன்றைய தொலைக்காட்சிகளில் நாம் காண்பது ஒரே மாதிரியான சிரிப்புக் கொத்து. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் நிலை. ஒரு காமெடிக்கு எத்தனை தடவைதான் சிரிப்பது? 

டெலிவிஷன் தொடர்களில் சோகத்தை பிழிந்து எடுக்கிறார்கள். மாமியார், மருமகள் கதை வெற்றி பெற்றால் அடுத்தடுத்து வரும் எல்லா தொடரும் அதே பாணியில் தான் வரும். அவர்களுக்கு வெற்றி ஒன்றே குறிக்கோள். மாற்றி யோசிக்க நேரமில்லை. பாவம் ரசிகர்கள்! சிரிக்க வழியில்லாமல் தவிக்கிறார்கள்.

சிரிப்பு, படத்திற்கு படம் மாறுபட வேண்டும். மாறினால் அதுதான் அந்தப் படத்தின் முத்திரையாக இருக்கும். இயல்பான காமெடி என்பது சிந்தனையில் தோன்றக் கூடியது. அது ஒரு அனுபவமும் கூட. அந்த அனுபவம் தற்கால கலைஞர்களிடையே குறைவுதான். எழுதிவைத்து படித்துப் பழகி சிரித்து காட்டுவது என்பது சற்று சிரமமானதுதான். 

சிரிப்பு என்பது ஆன்மாவை மகிழவைக்க கூடியது. சினிமாவானாலும், வாழ்க்கையானாலும் நகைச்சுவை குறையக் குறைய, வாழ்க்கை எந்திரத்தனமாக மாறிவிடும். சிரிப்பு இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாது. எந்த விஷயமானாலும் அதில் கொஞ்சம் சிரிப்பை புகுத்திவிட்டால் அந்த விஷயத்தை மனிதர்கள் விரும்ப ஆரம்பித்து விடுவார்கள். 

யார் வேண்டுமான£லும் அழலாம். யார் வேண்டுமான£லும் சிரிக்க வைக்க முடியாது. சிந்தனை சீராக இயங்கினால் தான் சிரிக்க வைக்க முடியும். ரசிகர்களை சிரிக்க வைக்க சிரத்தை வேண்டும். சிந்தனை வேண்டும். 

திரைப்படங்கள் இயல்பான நகைச்சுவையை உருவாக்க வேண்டும். அதில் அரசியல், ஆபாசம் இருக்கக்கூடாது. மற்றவரை புண்படுத்தும் நோக்கமும் இருக்கக்கூடாது. சிரிப்பிற்கு பண்பாடு உண்டு. மகிழ்ச்சியை மட்டுமே தர வேண்டும். 

மலரட்டும் மகிழ்வூட்டும் புன்னகை மன்னர்கள்!

http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/12/13124922/SmileIf-you-loseYouMachine.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.