Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு

Featured Replies

பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு

 
'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல். | படம்: ராய்ட்டர்ஸ்.
'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல். | படம்: ராய்ட்டர்ஸ்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்ளிட்ட 34 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஏமனில் சன்னி பிரிவு முஸ்லிகளுக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் முதல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பல மாதங்களாக அரசியல் நிலையற்ற சூழல் உருவாகியுள்ளது. ஏமன் அரசை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது வசம் வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏமன் ரியாத்தை தலைமையகமாக கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டுத் தாக்குதல் நடத்த, 'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கூட்டமைப்பு சவுதி அரேபியா தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட இந்த நாடுகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன. ரியாத்தை தலைமையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று சவுதி அரேபிய அரசு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஆப்பிரிக்க நாடுகளான மாலி, சாட், சோமாலியா மற்றும் நைஜிரியா மற்றும் போர் சூழலில் இருக்கும் லிபியா, ஏமன் போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

சவுதி துணை இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் இது குறித்து பேசும்போது, "புதிய இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு, பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும். மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒழிக்க, சர்வதேச சமூகத்துக்கு தனது ஆதரவை அளிக்கும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இஸ்லாமிய நாடும் தனித்தனியாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுகின்றன. இந்தச் சூழலில் இந்தக் கூட்டணி மிகவும் அவசியமானது." என்று கூறினார்.

இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியாவுக்கு எதிரான ஈரான் இடம்பெறவில்லை.

சிரியா மற்றும் இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா கூட்டுப் படை தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7991989.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- IS(ISIS)) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் 34 நாடுகளின் ஒத்துழைப்புடன் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பினை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பினை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டுள்ளது.  இது தொடர்பில் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையுடன், தீவிரவாதத்தை எல்லா விதத்திலும் ஒழித்துகட்ட தொடங்கப்படும் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கும்.

ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- IS(ISIS)) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் 34 நாடுகளின் ஒத்துழைப்புடன் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பினை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பினை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையுடன், தீவிரவாதத்தை எல்லா விதத்திலும் ஒழித்துகட்ட தொடங்கப்படும் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கும்.

   

இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், மாலைதீவுகள், பஹரைன் உள்பட தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 34 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. மாலி, சோமாலியா, சாட், நைஜீரியா போன்ற நாடுகளும் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன. ஈரான் இந்த கூட்டமைப்பில் சேரவில்லை. ஊழலில் ஈடுபடுவதும், உலகில் பேரழிவு ஏற்படுத்துவதும் பாவச்செயல் என்பது இஸ்லாம் கொள்கை. தீவிரவாதம் என்பது மனித குலத்தின் மீது ஏவப்படும் கடுமையான அத்துமீறல். வாழ்க்கை பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதும், உயிரை பறிப்பதும் கொடியது.” என்றுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=147112&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.