Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு?

Featured Replies

தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு?
 
 
 
Tamil_News_large_141824120151225012648.j
 

மும்பை : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தாதா பதவிக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளான். பாகிஸ்தானில் இன்று நடக்கும், தன், 60வது பிறந்த நாள் விழாவில், புதிய தாதா யார் என்பதை அறிவிக்க, அவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

நிழல் உலக தாதா : மும்பையில், நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராகிம், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளான். இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில், அந்த நாட்டு உளவு அமைப்பின் கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் அவன் வசித்து வருகிறான்.

 

சட்டவிரோத செயல்கள் : தாவூத், மும்பையில் இருந்து சென்றாலும், அவனுக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. 'டி கம்பெனி' என்ற பெயரில், தாவூத் ஆட்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போதை மருந்து கடத்தல், ஹவாலா, ஆள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் மூலம், பல கோடி ரூபாய் வருமானம் தாவூத்துக்கு கிடைக்கிறது.

 

முழுக்கு : இந்நிலையில், தாவூத்துக்கு, இன்று, 60வது பிறந்த நாள். வயதாகி விட்டதாலும், உடல் நலக்குறைவு காரணமாகவும், தாதா பதவிக்கு முழுக்கு போட, தாவூத் முடிவு செய்துள்ளான். புதிய தாதாவாக, தன் நெருங்கிய ஆதரவாளரான சோட்டா ஷகீல் அல்லது தன் தம்பி அனீஷ் ஆகிய இருவரில் ஒருவரை அறிவிக்க திட்டமிட்டுள்ளான். இதற்கான அறிவிப்பை, இன்று வெளியிடுவான் என, தெரிகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1418241

  • தொடங்கியவர்

ஓய்வு பெறும் தாவூத்... அடுத்த வாரிசு யார்?

 

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது பொறுப்புகளிலிருந்து விலக இருப்பதாகவும், அந்த இடத்தில் இருந்து அவரின் வலது மற்றும் இடது கரங்களான அனீஸ் இப்ராஹிம் அல்லது சோட்டா ஷகீல் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் நிழல் உலகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.  

dawood%20one%20in%20pakis%281%29.jpg

1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக,  இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், இன்று தனது 60 -ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதாகவும், இன்றுடன் நிழல் உலக பொறுப்புகளில் இருந்து விலகி, ஓய்வு பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு கடத்தல்கள், கட்டப் பஞ்சாயத்து நிகழ்வுகள், ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் என்று நிழல் உலகில் நடக்கும் அத்தனை க்ரைம் எபிசோடுகளின்  நாயகனாகத் திகழும் தாவூத் இப்ராஹிம், தனக்கு வயது ஆகிவிட்டதாக  நினைக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் இருந்து உலகம் முழுக்க பரவிக்கிடக்கும்  நிழல் உலகத்தைப் பொறுப்பாக யார் கவனித்துக் கொள்வார் என்ற கவலையும் தாவூத்தை சூழ்ந்துள்ளதாகவும், அதனையடுத்து தனது அடுத்த வாரிசாக சோட்டா ஷகீல் அல்லது அனீஸ் இப்ராஹிம் ஆகிய இருவரில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் தடதடக்கின்றன.

தாவூத்தின் மனம் அறிந்து கடத்தல், கொலை, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பல்வேறு சம்பவங்கள் மூலம்  அவரின்  மனதில் இடம்பிடித்தவர் சோட்டா ஷகீல். அதே நேரத்தில் அவரின் தம்பியான அனீஸ் இப்ராஹிமும் தாவூத்தின் மனதில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து தாதாவின் தம்பி என்பதை நிரூபித்து உள்ளதாகவும்  வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

anis%20and%20shakeel%281%29.jpg

இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தானின்  லாகூரில் தாதா தாவூத்தின் 60 வது பிறந்தநாள் விழாவுக்கு மிகப் பெரிய அளவில் அவரின்  ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இதனையொட்டி துபாயிலிருந்து தாவூத் இப்ராஹிம்  உறவினர்களும், கென்யா, நைரோபி ஆகிய நாடுகளில் இருந்து வியாபாரக் கூட்டாளிகளும் லாகூரில் குவிந்துள்ளனர். தாவூத் தற்போது பாகிஸ்தான் கராச்சியில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் பாகிஸ்தானில் வசிக்கவில்லை  என்றும்,  அவ்வப்போது பாகிஸ்தான் வந்து செல்வார் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி ஹமீத் ஹாரூன் கூறுகையில், "தாவூத் பாகிஸ்தானில் இல்லை. அவர் துபாய் அல்லது தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவுடன் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான்  பதுங்கியுள்ளார் என்று கூறியிருப்பது நினைவுகூறத்தக்கது. ஆனால் பாகிஸ்தானின் இந்தியாவுக்கான துணைத் தூதர் அப்துல் பாஸித்,  தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தானில் மறைத்து வைக்க வேண்டியதில்லை என்று அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/coverstory/56854-dawood-ibrahim-60th-birthday-retire.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.