Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் பார்வை: பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்!

Featured Replies

முதல் பார்வை: பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்!

 
pasanga2_2540932f_2669477f.jpg
 

'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா?

படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது.

'பசங்க 2' எப்படி?

நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோர் அடிக்கடி ஸ்கூல் மாற்றியே கடுப்பாகிறார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஒரு முடிவை எடுக்கிறார்கள்? அது என்ன முடிவு? அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமுமாக காட்டியதற்காக இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.

கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகிய இருவரும் புதுமுகங்கள். ஆனால், அவர்களின் சேட்டைகள், குறும்புகளுக்கும் தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. அச்சரம் பிசகாத நடிப்புக்கு கிளாப்ஸ் பறக்கிறது.

நிஷேஷின் டான்ஸ் ஃபெர்பாமன்ஸுக்கு அரங்கம் அதிர்கிறது. வைஷ்ணவியின் பிஞ்சுக் குரலில் இருக்கும் தவிப்பைப் பார்த்து கண்கள் கசிகின்றன. இந்த சுட்டிகளுக்கு தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

அடங்காத பையனை வைத்துக்கொண்டு அவதிப்படும் அப்பாவாக 'முனீஸ்காந்த்' ராமதாஸ் பின்னி இருக்கிறார். கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

பிளே ஸ்கூல் டீச்சரைப் போன்ற ஒரு கதாபாத்திரத்துக்கு அமலாபால் சரியான தேர்வு. விழிகளை அசைத்து குழந்தைகளுக்கு பாவனை காட்டும் நடிப்பும், அவர் குழந்தைகளை அணுகும் முறையும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் கதை நகர்த்தலுக்கு முக்கியமான கருவியாக சூர்யா செயல்படுகிறார். ஆனால், அவர் அறிவுரை சொல்லும்போதுதான் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இன்னும் கௌதம் மேனன் படத்தில் பேசுவதைப் போலவே எல்லா இடங்களிலும் பேசுவது நல்லா இருக்குமா சார்? டயலாக் டெலிவரியை மாத்துங்களேன் ப்ளீஸ்.

பாலசுப்ரமணியெத்தின் கேமரா குழந்தைகள் உலகை வண்ணமயமாகக் காட்டி இருக்கிறது. தன் ஒளிப்பதிவு மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம்.

அரோல் கொரெலி இசை உறுத்தாமல் இருக்கிறது. சோட்டாபீம் பாடலும், காட்டுக்குள்ள கண்ணைவிட்டு பாடலும் கவனம் பெறுகின்றன.

''பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க.''

''உங்க பசங்க தனிச்சு நிற்குறவங்க இல்ல. தனித்துவமா நிற்குறவங்க.''

''மதிப்பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்'' போன்ற பாண்டிராஜின் வசனங்களுக்கு கரவொலி கூடுகிறது.

குழந்தைகளை பெரிய மனிதர்களாக காட்ட அதிகம் முயற்சிக்கவில்லை என்பதற்காகவும், போகிற போக்கில் ரியாலிட்டி ஷோக்களின் ஆபத்தை சுட்டிக் காட்டியதற்காகவும் பாண்டிராஜுக்கு நன்றி.

குழந்தைகள் படத்தை முழுமையாக தர வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களை பாண்டிராஜ் அப்டேட் செய்திருக்கிறார். ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் உலவும் வசனங்களை, ஐடியாக்களை பயன்படுத்தி இருக்கீங்களே நியாயமாரே?

சூர்யாவின் குழந்தை ஃபிளாஷ்பேக்கில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

குழந்தைகளை தன் போக்கில் வளர விடுவதா? பெற்றோர்களுக்காக மாறுவதா? என்ற சிக்கல்களுக்கான தீர்வை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.

மொத்தத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் 'பசங்க 2'.

பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை:

குழந்தைகள் துறுதுறு என்று இருந்தாலோ, பக்கத்து வீடுகளிலோ, பள்ளிக்கூடங்களிலோ உங்கள் பிள்ளை குறித்து ஏதாவது சொன்னாலோ பதறிப் போகாதீர்கள். குழந்தைகளை எப்படி வளர்க்கக்கூடாது, எப்படி வளர்க்கலாம்? என்பதை 'பசங்க 2' பார்த்து முடிவு செய்யுங்கள்.

பாண்டிராஜுக்கு ஒரு கோரிக்கை:

கமர்ஷியல் சினிமாதான் பண்ணுவேன் என அடம்பிடிக்காமல் குழந்தைகளுக்காக படம் எடுங்க சார். அந்த குழந்தைகள் உலகம் உங்களைக் கொண்டாடும்.

http://tamil.thehindu.com/cinema/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8025850.ece

  • தொடங்கியவர்
குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க! பசங்க 2 - விமர்சனம்!
 

ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை பின்னணியாகக் கொண்டு இப்போதைய கல்வி முறை, பகட்டான நகரவாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

pasanga-1.jpg

முனீஸ்காந்த் வித்யா, கார்த்திக் குமார் பிந்துமாதவி ஆகிய தம்பதியினருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்போதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க விண்ணப்பம் வாங்குவது, நிறைமாதமான பிறகு, உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும்? என்கிற மருத்துவரின் கேள்விக்கு உடனடி அவசர விவாதத்துக்குப் பின் டாக்டர் என்று பதில் சொல்கிறார்கள். உடனே அருகிலிருக்கும் சோதிடர் இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு அறுவைசிக்கிச்சை செய்து குழந்தைப்பிறப்பு வைத்தால் அது நடக்கும் என்று சொல்ல, அவர் சொன்ன நேரத்தில் பிரசவம் நடக்கிறது.  

இப்படி வளரும் குழந்தைகள் மிகவும் சுட்டிகளாக இருக்கின்றன. வருடத்திற்கொரு பள்ளி மாறவேண்டியிருக்கிறது. வீடும் மாறவேண்டியிருக்கிறது. வீட்டிலும் அவர்களால் பல தொல்லைகள். இதனால் மனம் வெறுத்த அத்தம்பதியினர் குழந்தைகளை விடுதியில் சேர்க்கிறார்கள்.

அதன்பின் அவர்களுக்கு இதுதான் சிக்கல் என்பதை மருத்துவர் தமிழ்நாடனாக நடித்திருக்கும் சூர்யா கண்டுபிடித்துச் சொன்னபிறகு நடக்கும் விசயங்களே கதை.

pasanga-44.jpg

முனிஸ்காந்த் வித்யா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் நிஷேஷூம், கார்த்திக்குமார் பிந்துமாதவி தம்பதின் மகளாக நடித்திருக்கும் வைஷ்ணவி ஆகிய இருவரும் போட்டிபோட்டு நடித்து மனதைக் கவருகிறார்கள். விடுதியில் அவர்களை விட்டுவிட்டுப்போனதும் அவர்களுடைய தவிப்பு... உருக்கம்!  

சென்னைப் பெருநநகரத்து உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர்கள், குழந்தை பிறப்பு முதல் வளர்க்கிற வரை எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்தது போலக் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

இரண்டு தம்பதிகளை வைத்துக்கொண்டு உயர்நடுத்தரமக்களின் அன்றாட நடைமுறை, அவர்களின் ஆசை ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முனீஸ்காந்துக்கு இருக்கும் பணக்காரவியாதி அவ்வப்போது வாய்விட்டுச் சிரிக்கவைக்கப் பயன்படுகிறது.

 pasang-a2.jpg

சூர்யா, அமலா பால் என்ற ஸ்டார் கேஸ்டிங்கை வீணாக்காமல் நல்ல மெசேஜ் சொல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கும் ஆக்க்ஷன் ஹீரோவாக அசத்துவது சூர்யாவுக்கு கை வந்த கலை. ஆனால், இந்தப் படத்தில் குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் ஜாலி மருத்துவராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார். குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதைக்குள் அவர் வந்தாலும் அந்த ரசனை குறையாமல் பார்த்துக் கொள்கிறார். 

இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையைமப்பாளர் சிற்பி, இமான் அண்ணாச்சி, நமோநாராயணா உட்பட பல கௌரவத் தோற்றங்கள். சமுத்திரக்கனி தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போகும் நேரத்தில், குழந்தையின் ஆசிரியர் தனியார் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க நெடிய வரிசையில் காத்திருக்கும் காட்சியும் அப்போது அரசுவேலைகளில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்கவேண்டும் என்று அரசாணை வரவேண்டும் என்று சொல்லும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறது.

Pasanga%202%20%281%29.jpg

குழந்தைகள் கெட்டவார்த்தை பேசுவதில்லை கேட்டவார்த்தையைத்தான் பேசுகிறார்கள், மதிப்பெண்களை விதைக்காதீர்கள் மதிப்பான எண்ணங்களை விதையுங்கள் உள்ளிட்ட பல வசனங்கள் சாட்டையடி!
அமலா பாலை வைத்து தனியார் பள்ளிகளின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை நறுக் சுருக்காகச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் நடக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் போட்டியில் இந்தக்குழந்தைகள் பங்கெடுக்க அவர்களே வெற்றிபெறுகிறார்கள் என்று காட்சி வைக்காமல் வித்தியாசமாக வைத்து பாராட்டைப் பெறுகிறார் பாண்டிராஜ்.

இசையமைப்பாளர் அரோவ்கெரோலி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்குப் பலம்.

குழந்தைகள் சாலையில் ஆம்புலன்ஸ் போகும்போது அப்படியே நின்று அவர்களுக்காகக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் காட்சிகளில் சிலிர்க்கவைக்கிறார்கள். அப்படியான சிலிர்ப்பு அத்தியாங்கள் படம் நெடுக இருக்கின்றன.

பசங்க-2... இது குழந்தைகள் படமென்று சொல்வதைக் காட்டிலும், இது பெற்றோருக்கான பாடம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!

http://www.vikatan.com/cinema/movie-review/56824-pasanga-movie-review.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.