Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் தேசிய பொங்கல் விழாவில் 701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் தேசிய பொங்கல் விழாவில் 701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர்-

31 டிசம்பர் 2015
யாழின் தேசிய பொங்கல் விழாவில்  701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர்-
இந்த ஆண்டு தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் இருந்து 701.5 காணி விடுவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியொர் உரிமையாளர்களிடம் கையளிக்கின்றனர்.

இதேவேளை 701.5 ஏக்கர் காணிகளை கையளித்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையை முன்னிட்டு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளன. இந்தப் பூசை நிகழ்வுகளிலும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதேவேளை குறிப்பிட்ட நிலப் பகுதிகளை மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதன்போது சுமார் 700 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் என்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.  

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் அடங்கும் வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களிலுமே இந்த மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடந்த உயர்மட்டக்கூட்டத்தில் இந்தக் காணிகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் செவ்வாய் கிழமை யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் குழு அந்தப் பகுதிக்குச் சென்று ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலி வடக்கில் கடந்த 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில், சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் இன்னும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை என்று புள்ளிவிபரங்கள் ஊடக மதிப்பிடப்பட்டுள்ளன. 

இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பலாலி மற்றும் அதனைச் சூழவுள்ள சுமார் 6000 ஏக்கர் காணியில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்த  மக்கள் இடம்பெயர்ந்து 25 வருடங்களாகியுள்ளபோதிலும், தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலை தொடர்கின்றது.

தமது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, தாம் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127394/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.