Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!

Featured Replies

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!

 

புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி. பரதன் காலமானார்.

barathan%20600.jpg

நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரதன், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/india/57129-former-cpi-general-secretary-ab-bardhan-passes-awa.art

  • தொடங்கியவர்

கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு ஏ.பி.பரதன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

karunanithi%20one%20new.jpgதிமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
 
" இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், என்னுடைய நெருங்கிய நண்பருமான ஏ.பி.பரதன் அவர்கள், மறைந்துவிட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

பங்களா தேசத்தை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற குடும்பத்தில் பிறந்த பரதன் அவர்கள், 1957ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றுக்குரியவர்.பொதுவுடைமைச் சித்தாந்தங்களில் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டால், இளம் வயதிலேயே தம்மை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர்!

கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமையாக இருந்த காலத்திலும், அரசியல் களத்தில் எதிரணியில் இருந்த காலத்திலும், கழகத்துடனும், என்னுடனும் நல்ல தோழமையுடன் பழகும் சிறந்த பண்புக்குரியவராக அவர் விளங்கினார் எனின், அது மிகையல்ல,
கழகத்தை எந்நாளிலும் மதிக்கும் ஒரு தலைவராக விளங்கியவர் பரதன். அவரது மறைவால் ஒரு சிறந்த நண்பரை நான் இழந்து விட்டேன்."

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு ஏ.பி.பரதன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. mk%20stalin%20newly%20one.jpgஅடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்ட திரு பரதன் அவர்கள் மிகச் சிறந்த பாராாளுமன்றவாதி. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் வாதாடிய இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றியுள்ளார்.

தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்த திரு ஏபி பரதன் அவர்களின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கலில்,

கடந்த 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 4.5 ஆண்டு காலம் pattaali%20ramdoss.jpgசிறையிலும், இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்த பரதன் அடித்தட்டு மக்களுக்காகவே தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தார்.

ரயில்வே தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காக போராடி ஏராளமான உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்.

பரதனின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுவுடைமைத் தோழர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

india%20vaiko.jpgமார்க்சிய, லெனினியக் கொள்கை கோட்பாடுகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த படிப்பறிவும், புரிதலும் அவரை மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆக்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, இடதுசாரிகளின் ஒற்றுமையும், முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒன்றிணைவும், இந்திய அரசியலில் காலத்தின் கட்டாயத் தேவை என்பதை தோழர் ஏ.பி.பரதன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது போரை நிறுத்த வலியுறுத்தி டெல்லியில் மறுமலர்ச்சி திமுக நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை மறக்க முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள குறிப்பில்,

தோழர் பரதனுக்கு செவ்வணக்கம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் புதுதில்லி மருத்துவ மனையில் இன்று மாலை காலமானார்.அவரது உடல் நாளை மறுநாள் 4.1.16 அடக்கம் செய்யப்படும்.
அவரக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார துக்கம் கடைபிடிக்கிறது.கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கலில்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்து கொள்கிறேன்.

தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில் ஏ.பி.பரதன் தன்னலம் கருதாது, உழைக்கும் வர்க்கத்துக்கும், cm%20jaya%20juaya%20.jpgஏழைகளுக்கும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கும் பாடுபட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனைகள் ஏற்பட்ட போது, பல்வேறு அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் அவருடைய பேச்சுவார்த்தை திறமை முக்கிய பங்கு வகித்தது.

அரசியல் வாழ்வில் நாகரீகமாகவும், தன்னலமற்ற பணிகளையும் மேற்கொண்டவர். அவரோடு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு தருணங்களில் என்னுடைய இல்லத்துக்கு அவர் வந்திருக்கிறார். அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.
http://www.vikatan.com/news/tamilnadu/57143-communist-party-of-india-leader-ab-bardhan-died.art

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.