Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மை கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானது: பஷீர் சேகுதாவூத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
paseer.jpg
பெரும்பான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரிய கட்சிகள் ஒன்றுபடுகின்றபோது சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை இனங்களின் கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலமுகா வின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுகூரல் நிகழ்வில் “சம கால அரசியல்” எனும் தலைப்பில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஸ்ரீலமுகா கட்சியின் ஏறாவூர்க் கிளைக் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன்பாவா தலைமையில் ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் நேற்று  இரவு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பஷீர் சேகுதாவூத் மேலும் கூறியதாவது,

முக்கியமான அரசியல் யாப்புத் திருத்தத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையிலே சிறுபான்மைச் சமூகக் கட்சிகளுக்குள்ளும் சிறுபான்மை இனங்களுக்குள்ளும் பிளவுகள் ஏற்படுவது மிகவும் ஆபத்தானது.

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றபோது இப்பொழுது புதிதாக தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியிருக்கின்றது.

பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளின் ஒப்பந்தத்திலே புதிய அரசியல் யாப்புத் திருத்தம் நிறைவேறிவிடும் என்கின்ற ஆபத்து இருக்கத்தக்கதாக ஒட்டுமொத்தமாக சிறுபான்மைத் தமிழினத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சி பிளவுபட்டுப் பிரிந்து நின்று ஏகோபித்த தமிழர் அதரவு என்கின்ற அந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதது மாத்திரமல்ல பேராபத்து நிறைந்ததுமாகும்.

சில அரசியல் தலைவர்களுடைய தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று புத்திஜீவிகளும் சிவில் சமூகமும் விரும்பினால் அந்தத் தலைவர்களோடு பேசி உடன்பாட்டைக் கொண்டு வந்து இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலே ஒரு ஏகோபித்த முடிவுக்கு வரவேண்டுமே தவிர வெண்ணை திரண்டு வருகின்றபோது தாழியை உடைக்கின்ற நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொதி, தமிழ் மக்கள் பேரவை ஒரு பொதி என்று மேசைக்குக் கொண்டு வந்தால் அது இதுவரை நாம் கண்டிராத ஆபத்தைக் சிறுபான்மை இனங்களுக்குக் கொண்டு வருவதோடு எதுவுமே கிடைக்காத ஒரு கையறு நிலைக்கும் இட்டுச் செல்லும்.

அத்துடன் அந்த பிளவுபட்ட நிலைப்பாடு அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் அதிகளவில் பாதிக்கும்.

புதிய அரசியல் யாப்புக்கு முன்பாக முதலில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சமூகத்திற்குள்ளும் பின்னர் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் புரிந்துணர்வோடு பேசி அசைக்க முடியாத உடன்பாட்டை எட்டிக் கொண்டு அதனை சிங்களத் தேசியத்திடம் முன்வைக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் மக்கள் உடன்பட்டுத் தயாரிக்கும் புரிந்துணர்வுப் பொதியே இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களை வாழ வைக்கும்.

paseer_001.JPG

paseer_002.JPG

paseer_003.JPG

paseer_005.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.