Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு.

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு.

தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இன்று பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 வரை ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருணாநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கியுள்ளனர்.

தமிழக முதல்வர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட உள்ளதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீ வெளியிட்டுள்ள செய்தியில்தெரிவித்துள்ளார்.

www.sankathi.com

கருணாநிதிக்கு இப்போதாவது தமிழ் கூட்டமைப்பினரை சந்திக்க வேண்டுமென்று தோன்றியிருக்கிறதே.

ஆக்கபூர்வமாக இருந்தால் சரிதான்.

சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த கூட்டமைப்பு 'குதிரைக்கு முன் வண்டில் கட்டும்' அபத்தமான அரசியல் முன் நகர்வை செய்தனர். அதாவது கலைஞரை சந்திக்க முன் வைகோ சந்தித்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்து படமும் கொடுத்தனர். அப்போது அவர்கள் விட்ட மாபெரும் தவறை இம்முறை திருத்தியுள்ளார்கள். அதனால் கலைஞரை சந்திக்கும் வாய்பைப் பெற்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சென்னையில் த.தே.கூ. வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சென்னையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியுடனான சந்திப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஊடகவியலாளர் மாநாடு சென்னையில் இன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசிய போது ஈழத் தமிழ் மக்கள் படும் துயரங்களை விவரித்தனர். அதனை பரிவோடு கேட்டுக்கொண்ட முதல்வர், இந்திய அரசாங்கத்திடம் இது விடயமாக பேசுவதாகக் கூறினார். உங்களின் உள்ளக் குமுறலை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். என்னால் சட்டங்களுக்குட்பட்டு இயன்ற அத்தனையையும் செய்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முழுமையாக உடனிருந்தார் என்றார் சுப.வீரபாண்டியன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் உள்ள 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளடங்கிய குழுவினர் தமிழகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தோம்.

நாங்கள் முன்னர் பலமுறை இந்திய நாட்டுக்கு வந்திருக்கிறோம். மத்திய அரசாங்கம் வரை சென்று பல விடயங்கள் பேசியுள்ளோம்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் துன்பங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொல்ல விரும்பினோம். அதனை முதல்வருக்கு நாம் தெரிவித்த போது அதற்குரிய வாய்ப்பை எமக்கு இன்று முதல்வர் அளித்தார். முதல்வர் இல்லத்தில் இன்றைய சந்திப்பு நடைபெற்றது.

தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளோம்.

தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டமானது இலங்கையில் அமைதி வழிப் போராட்டமாக 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினால் அந்த அமைதி வழிப் போராட்டத்தை ஆயுதமுனையில் அடக்க முயற்சித்தனர். இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 1983 ஒகஸ்ட் 16 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் "இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதாக" கண்டனம் தெரிவித்தார்.

இலங்கையில் பாரம்பரியமாக வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் மீது மிகப் பயங்கரமான முறையில் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும்

யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் 6 இலட்சம் மக்களும்

உணவின்றி மருத்துவ வசதியின்றி அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் ரூ. 5 முதல் 8 வரை விற்பனையாகும் 1 முட்டையானது யாழ்ப்பாணத்தில் ரூ. 60 முதல் 70 வரை விற்கப்படுகிறது.

ரூ. 1 கொடுத்து ஒரு பொருளை வாங்கக்கூட மக்களுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு 1 இலட்சம் 25 ஆயிரம் டீசல் நாளொன்றுக்கு தேவை. இதனை தொடர்ந்து கடல் மூலம் அனுப்பி வைக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கான தேவையான பொருட்களை அனுப்பி வைக்காமல் இத்தனை தொன் அனுப்பினோம் அத்தனை தொன் அனுப்பினோம் என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கூறி வருகிறது.

யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 தரைவழிப் பாதையை சிறிலங்கா அரசாங்கமானது மூடி வைத்திருப்பதால் பட்டினிச் சாவுக்கு அந்த மக்கள் ஆளாகும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலமுறை நேரில் வலியுறுத்தினோம். வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் நாம் வலியுறுத்தினோம். அவர்களும் வேண்டுகோள் விடுத்தும் பாதை திறக்கப்படவில்லை. அதனால் மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளத் தீவிரப்படுத்தியுள்ளது.

நாளாந்தம் 30 முதல் 50 பேர் வரையில் படுகொலை செய்யப்படுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு கடலில் ஏற்படும் உயிராபத்துகளை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு தேடி வந்துள்ளனர்.

இதுவரை உள்நாட்டிலேயே 2.5 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கூட சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்க முடியாது. சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் பாதுகாப்புக்காக தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாக தமிழ் மக்கள் ஓடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 பெப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் செய்து கொண்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கவே அரசாங்கம் செயற்படுகிறது.

இந்த 4 வருட போர் நிறுத்த ஒப்பந்தகாலத்தில் எந்த ஒரு சிறு உதவியும் கூட தமிழ் மக்களுக்குக் கிடைக்கவே இல்லை.

தமிழ் மக்களுக்கான இடைக்கால நிர்வாக அமைப்பும் கூட உருவாக்கப்படவில்லை.

இலங்கையின் வடக்கு கிழக்கானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம். இந்தியாவிலே சீக்கியர்களுக்கும் மலையாளிகளுக்கும் எப்படி பஞ்சாப்பும் கேரளமும் தாயகமோ அதுபோல் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணமானது எமது தாயகம். அங்கே சிறிலங்காவின் சுதந்திரத்துக்கு முன்பாக சிங்களவர் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் குடியேற்றத்தால் இப்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் உள்ள திருகோணமலையிலிருந்து முற்று முழுதாக தமிழ் மக்களை வெளியேற்றும் வகையிலேயே சிறிலங்கா இராணுவம் செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களை முற்றாக திருகோணமலையிலிருந்து வெளியேற்றி விட்டு அதன் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறையிலும் தமிழர்களை வெளியேற்றி பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையே சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளோரில் பெரும்பாலானோர் திருகோணமலையைச் சேர்ந்த தமிழர்கள்தான்.

இந்திய-இலங்கை உடன்பாட்டின் கீழ் தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக- ஒரே அலகாக உருவாக்கப்பட்டது.

கடந்த 18 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்ததை 100 விழுக்காடு சிங்களவர்களே உள்ள சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அண்மையில் வடக்கு - கிழக்கு இணைப்பு முறை செல்லாது என்று அறிவித்துவிட்டது.

முன்னர் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டபோது பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்தன. ஆனால் பொதுக்கட்டமைப்பும் சட்டவிரோதமானது என்று இதே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறிலங்காவின் நீதிமன்றமானது சிங்களவர்களுக்கானது.

இந்திய - இலங்கை ஒப்பந்தமானது ஒரு சர்வதேச உடன்படிக்கை. ஆனால் சிறிலங்காவோ எந்த ஒரு உடன்பாட்டையுமே செயற்படுத்தவில்லை.

நாங்கள் கடந்த முறை இந்திய மத்திய அரசாங்கத்தினரை சந்தித்த போது இது விடயமாக விவாதித்தோம். வடக்கு - கிழக்கைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் விருப்பத்தையும் சிறிலங்கா அரசாங்கம் இன்றுவரை நிறைவேற்றவில்லை.

வடக்கு - கிழக்கு மாகாண இணைப்புக்கான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்தால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிப்பதாக அறிவித்தது. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிப்பதாகக் கூறினோம். ஆனால் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆயத்தமாக இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழினப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் தமிழர் தாயகப் பகுதியில் நாளாந்தம் படுகொலைகள் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் நாளைக்கு 50 பேர் காணாமல் போகும் நிலைமை உருவாகி உள்ளது. அண்மையில் 30 இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக்காக சிறைகளிலே வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் நேரத்தில்தான் படுகொலைச் செயல்கள் நடத்தப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது இராணுவம் மற்றும் துணைப் படையினரே நடமாடுகின்றனர். ஒரு கொலைக் கலாச்சாரத்தை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த ஓராண்டில் எமது கூட்டமைப்பின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இராணுவத்தாலும் அவர்களுடன் இணைந்துள்ள துணைப்படையினராலும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இந்தப் படுகொலை தொடர்பில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டே மறுபக்கத்திலே பேச்சுவார்த்தை தயார் என்று கூறி சர்வதேச நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முட்டாளாக்குகிறது.

தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தி வடக்கு - கிழக்கு மக்களை பிளவுபடுத்தி தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது.

எமது தாயகமான இலங்கையின் வடக்கு - கிழக்கில் நாம் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்.

பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு எதனையுமே வழங்காத நிலையில் நாங்கள் தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தில் கடும் போக்காளர்களே உள்ளனர். மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச மிகக் கடும் போக்காளர். ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை சிங்கள தீவிரவாத இயக்கங்கள்.

தமிழ் மக்களை அழித்தொழிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் அடாவடித்தனங்களுக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கு

Edited by கந்தப்பு

post-3153-1166721783_thumb.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் துயர் துடைக்க துரித நடவடிக்கை எடுப்பேன் - தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கருணாநிதி உறுதியளிப்பு

இலங்கையில் தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பெரும் அவலநிலையையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்பத்தையும் அந்த மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூலம் நேரடியாக நேற்று புதன்கிழமை அறிந்து சொல்லொணாக் கவலையும் கடும் விசனமும் அடைந்திருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர சமாதான வாழ்வு கிடைக்க தன்னாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவின் அவசர அழைப்பின் பேரில் அங்கு சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழு நேற்று கலைஞரை சந்தித்து ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது.

சென்னையிலுள்ள கலைஞரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கருணாநிதியின் புதல்வரும் தமிழக ஊரகத்துறை அமைச்சருமான ஸ்டாலினும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சு.ப.வீரபாண்டியனும் உடனிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியான நிலைவரங்கள் தொடர்பாக கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தது குறித்து தினக்குரலுக்கு தொலைபேசியில் தெரிவித்தனர்.

தென்னிலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன நெருக்கடித் தீர்வுக்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. எனவே, இது தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அவசியமானதொன்றாகும்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் நிறையவே அனுபவம் கொண்டதும் கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பல்வேறு பங்களிப்புகளையும் வழங்கிய இந்தியா இனிமேலும் மௌனம் சாதிக்காமல் தனது அழுத்தத்தை இலங்கை அரசு மீது பிரயோகிக்க வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றதற்கு பின்னர் சமாதான முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் மிக மோசமாக அதிகரித்துள்ளன.

சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூறிக்கொண்டு சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதிலும் யுத்தத்தை முன்னெடுப்பதிலுமே உறுதியாகவுள்ளார்.

கடந்த நான்கு மாத காலமாக ஏ-9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டுக்கான பிரதான தரைவழிப்பாதை மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள சுமார் 6 இலட்சம் மக்கள் உணவுப் பொருட்கள் எதுவுமின்றி பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகள் இன்றி துயரத்தின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழர் தாயகத் தலைநகராம் திருகோணமலை மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி படகுகள் மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பி வந்துள்ளனர்.

போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ள இன்றைய சூழலில் இலங்கை அரச படையினர் விமானக் குண்டுத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல் என்பவற்றை நடத்தி நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து வருகின்றனர்.

தலைநகர் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், கைது, காணாமல் போதல் போன்ற மிகவும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாளாந்தம் நடைபெற்று வருகின்றன.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அரச படையினரின் மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களால் இலங்கைத் தமிழ் மக்கள் மிக மோசமானதோர் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களின் இன்றைய துயர் நிலை களைந்தெறியப்பட்டு, நிரந்தர சமாதானத்தையும் நீதியான தீர்வொன்றையும் பெறவும் தமிழகமும் இந்திய மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் விரிவாக விளக்கிக் கூறியுள்ளனர்.

இதனை மிகவும் அக்கறையுடன் கேட்டறிந்த கலைஞர் கருணாநிதி,

இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவலநிலை குறித்து தானும் தமிழக மக்களும் பெரும் கவலையும் விசனமும் அடைந்துள்ளதாகவும் இலங்கைத் தமிழர் வாழ்வில் நிரந்தர சமாதானம் ஏற்பட தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தமிழக முதல்வருடனான சந்திப்பு ஆரோக்கியமானதாகவும் முழுமையான திருப்தியளித்துள்ளதாகவும் சென்னையிலிருந்து தமிழ்க்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

தமிழகத்தில் தங்கியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மற்றும் இந்திய மத்திய அரசின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று மாலை சென்னையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை, கலைஞர் கருணாநிதியுடனான சந்திப்பு என்பன தொடர்பான ஊடகவியலாளர் மாநாடொன்றையும் நடத்தினர்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.